நண்பர் மாலன் அவர்கள் சேட்ஜிபிடி பற்றிய எனது பதிவுக்குத் தனது கருத்தை அளித்துள்ளார்கள். அதுபற்றிய எனது கருத்தை மேலும் இங்குப் பதிவிடுகிறேன்.நண்பர் மாலன் அவர்கள்--------------------------------------------------------------------------//Chat GPT மிக மிக ஆரம்ப நிலையில் இருக்கிறது. தொழில்நுடபத்தின் -குறிப்பாக மின்னணு தொழில்நுட்பத்தின் - சிறப்பே அது விரைவில் மேம்படுத்திக் கொள்ளும் என்பதுதான். மனிற்ற்களை விடச் சிறப்பாகவும் விரைவாகவும் மேம்படுத்திக் கொள்ளும் என்பதுதான். தீர்ப்பெழுத இன்னும் காலமிருக்கிறது. பி.கு: இள்நிலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டு மாணவரிடம் பேரா.பொற்கோ பற்றிச் சிறு குறிப்பு வரைக என்றால் பெரும்பாலானோரது விடைகள் எவ்விதம் அமையும்?//ந. தெய்வ சுந்தரம்-------------------------------------------------------------------------நன்றி நண்பரே. எந்தவொரு அறிவியல் வளர்ச்சியையும் ஆதரிப்பவன்தான்...
வெள்ளி, 31 மார்ச், 2023
வியாழன், 30 மார்ச், 2023
செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) - AI) மென்பொருள்களும் மொழியியல் (Linguistics) அடிப்படையான தமிழ்மொழி ஆய்வுகளும்!
செயற்கை அறிவுத்திறன் (Artificial Intelligence) - AI) மென்பொருள்களும் மொழியியல் (Linguistics) அடிப்படையான தமிழ்மொழி ஆய்வுகளும்!--------------------------------------------------------------------------ChatGPT - இல் ஆர்வமுள்ளவர்கள் இன்றைய "The Hindu" இன்றைய நாளிதழில் பக்கம் 12-இல் வெளிவந்துள்ள "GPT-4- a shift from "what it can do' to 'what it augurs' என்ற தலையங்கப் பக்கத்தில் உள்ள கட்டுரையைப் படிக்கலாம். இக்கட்டுரையில் செயற்கை அறிவுத்திறன்பற்றிய ஒரு நல்ல விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மொழியியல் மாணவர் என்ற முறையில் இந்தக் கட்டுரையின் இறுதிப்பகுதி மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்.நான் ஏற்கனவே இதுபற்றி முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளேன். இந்தவகை மென்பொருள்களுக்கு அல்லது எந்தவொரு செயற்கை அறிவுத்திறன் மென்பொருளுக்கும் அடிப்படையானது . . . நாம் அவற்றின்முன் வைக்கிற நமது மொழித் தொடர்களை அவை புரிந்துகொள்ளவேண்டும்...
வெள்ளி, 24 மார்ச், 2023
காதல் . . . கலப்புத் திருமணம் கட்டாயமா?
காதல் . . . கலப்புத் திருமணம் கட்டாயமா?நண்பர் வேல்முருகன் அவர்களே. நான் கூற வந்தது
நாளிதழ்களில் சாதி அடிப்படையில் வருகின்ற விளம்பரங்களைப்பற்றித்தான்! காதல்
திருமணம், கலப்புத்
திருமணம் ஆகியவற்றை ஒருவர் எதிர்க்கக்கூடாது என்பதுதான்! ஆனால் ஒருவர் காதலிக்கிற
அல்லது விரும்புகிற ஆண் அல்லது பெண் அவரது சாதியைச் சேர்ந்தவராக
இருந்தால், அந்தத்
திருமணம் கூடாது என்று நான் கூறவரவில்லை.
மேலும் காதலித்துத்தான் திருமணம் செய்யவேண்டும்; அது
கலப்புத் திருமணமாகவே இருக்கவேண்டும் என்று நான் கூறவரவில்லை.
இன்றைய இந்தியாவில் அனைவருக்கும் காதலிக்க வாய்ப்பு
உண்டு என்று கூறமுடியாது. மேலும் நகர்ப்புறங்களில்தவிர, பெரும்பான்மையான
ஊர்களில் பணிபுரியும் இளைஞர், இளைஞிகளுக்கு
நெருக்கமானவர்கள் அவர்கள் ஊரைச் சேர்ந்த - அல்லது அவர்களது உறவினர்கள்
குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவ்வாறு இருக்கும்போது...
தமிழ்மொழியானது தமிழ் இனத்தின் மொழிதான்! இன அடையாளம் உண்டு!
தமிழ்மொழியானது தமிழ் இனத்தின் மொழிதான்! இன அடையாளம் உண்டு!-------------------------------------------------------------------------------------------------------------------------- எந்தவொரு மொழிக்கும் வர்க்க அடிப்படையோ அல்லது சாதி, மத அடிப்படையோ கிடையாது. ஆனால் இன அடையாளம் உண்டு. ஒரு இனத்தின் உரிமையாக அந்த இனத்தின் மொழியைப் பார்ப்பதில் தவறு இல்லை! அதுதான் புறவய உண்மையும் கூட! ஆனால் அந்த இனத்திற்குள் நிலவும் சாதிகளுக்கும் வர்க்கங்களுக்கும் அந்த மொழிமீது எந்தவொரு தனிப்பட்ட உரிமையும் கிடையாது. தமிழ் இனத்திற்கே முழு உரிமை ! ஆனால் தமிழ்மொழியைத் தமிழினமானது தன் இன அடையாளமாகமட்டும் பார்த்து, ''அருங்காட்சியகத்தில் வைத்து வணங்கக்கூடாது''. இதில் எனக்கு 100 விழுக்காடு உடன்பாடு! மாறாக, தமிழினமானது தன் தேசத்தின் உற்பத்திமொழியாக - பொருள் உற்பத்திமொழியாக - வணிக மொழியாக - பயிற்றுமொழியாக - அறிவியலுக்கான...
மொழித் தரவுச் சேகரிப்புக்கு நல்ல வருமானம் !
மொழித் தரவுச் சேகரிப்புக்கு நல்ல வருமானம் !
------------------------------------------------------------------------------------------------------------------
தற்போது பெங்களூரில் இயற்கைமொழி ஆய்வுக்கான நிறுவனங்கள் பல
உள்ளன. பெரும்பாலும் இந்த நிறுவனங்கள் செயற்கை அறிவுத்திறன் அடிப்படையிலான
ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கூகுள்,
மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களுக்கு இந்திய மொழிகளுக்கான
தேவையான தரவுகளை இந்த நிறுவனங்கள் அளித்துவருகின்றன.
நிகழ்தகவு புள்ளியியல் (Probabilistic
statistics) , நரம்பு வலைப்பின்னல் ( neural
network) , ஆழ்நிலை கற்றல் (Deep
Learning) , செயற்கை அறிவுத்திறன் ( Artificial
Intelligence) அடிப்படையில் மொழித்தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்ளும்
கணினித்திறன் ( வன்பொருள், மென்பொருள்
இரண்டிலும்) கூகுள், மைக்ரோசாப்ட்
போன்ற நிறுவனங்களுக்குத்தான் தற்போது இருக்கின்றன.
மேலும் நூற்றுக்கணக்கான...
இறைமறுப்புக்கொள்கையும் போலி நாத்திகவாதமும்!---------------------------------------------------------------------------------------------------------------------------------அறிவியல் அடிப்படையில் சிந்தித்துப் பார்த்து ஒருவர் இறைமறுப்பாளராக நீடிப்பது வேறு. வெறும் பிராமணிய எதிர்ப்பு, புராண விமர்சனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் தன் இளம்வயதில் நாத்திகராக நீடிப்பது வேறு.முதல் வகையினர் தனது உயிரின் இறுதிவரை இறைமறுப்பாளராகவே நீடிப்பார்கள்.இரண்டாவது வகையினர் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத இன்னல்களை எதிர்நோக்கும்போது, தங்களது நாத்திகத்தை விட்டுவிடுவதை நாம் பலரின் வாழ்க்கையில் பார்த்துவருகிறோம். எம் ஆர் இராதா உட்பட பலரைப் பார்த்துள்ளோம். எனவே நாஞ்சில் சம்பத் இவ்வாறு மாறியிருந்தால் அது வியப்பு இல்லை!மார்க்சியத் தத்துவத்தை அறிந்து , தங்கள் இளம்வயதில் இறைமறுப்பாளராக இருந்து, பின்னர் ஏது ஏதோ காரணங்களைக்...
புதன், 22 மார்ச், 2023
சாதி அடிப்படையில் திருமண விளம்பரங்கள்!
சாதி அடிப்படையில் திருமண விளம்பரங்கள்! ----------------------------------------------------------------------------------------------------------சாதி அடிப்படை கூடாது என்று கடந்த 100 ஆண்டுகளுக்குமேலாக இங்குப் பேசப்பட்டுவருகிறது. ஆனால் இன்றைய நிலை ?ஒரு நாளிதழில் 'மணப்பந்தல்' என்ற தலைப்பில் ஒரு முழுப் பக்கத்தில் 'மணமகன், மணமகள் தேவை' என் தலைப்பில் வெளிவந்துள்ள விளம்பரங்களைப் பார்த்தால் . . . உண்மை தெரியும்.ஆதிதிராவிடர், அருந்ததியர், தேவேந்திரகுலம், முதலியார், நாடார், நாயுடு, வன்னியர், விஸ்வகர்மா, பிராமணர், செட்டியார், கவுண்டர், மருத்துவர், நாயக்கர், யாதவர், பிள்ளை, வண்ணார், தேவர், ரெட்டியார், நாயர், போயர், உடையார் - 21 சாதிகள்! சாதி அடிப்படையில் 'மணமகன், மணமகள்' தேவை! இந்த விளம்பரங்களைப் பார்க்கும்போதுதான் , இங்கு இவ்வளவு சாதிகளா? என்பது தெரியவருகிறது! மேலே உள்ள சாதிகள் பெரும்பாலும் இந்து...
சாதிகள் மறையாதா? என்றுமே நீடிக்குமா?
கலப்புத்திருமணம் . . . காதல் திருமணம் செய்துகொள்பவர்கள் படுகொலை செய்யப்படுவது ஏன்?-------------------------------------------------------------------------சாதிகள் என்பவை மனிதகுல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சூழலில் தோன்றிய ஒரு வரலாற்று விளைபொருள்தான். எந்தவொரு வரலாற்றுப்பொருளுக்கும் தோற்றம் உண்டு; மறைவும் உண்டு. ஒரு குறிப்பிட்ட சமுதாயச்சூழலில் - அதன் நீடிப்புக்கான சமுதாயக் கூறுகள் மறையும்போது - சாதிகள் மறைந்துதான் ஆகவேண்டும்.சமுதாய வளர்ச்சியில் சில சமுதாயக் கூறுகள் தங்கள் நீடிப்புக்கான உண்மையான அடிப்படைகள் தகர்ந்தபின்னும், அவற்றால் பயன்பெறுகிற கூட்டத்தால் சிலகாலம் தக்கவைக்கப் -பட்டுக்கொண்டிருக்கும். . அப்போது மக்களின் விழிப்புணர்வும் போராட்டமும் அவற்றைத் தகர்த்துவிடும்.குறிப்பாகச் சொல்லப்போனால், ஒரு நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சி தனது உச்சகட்டத்தை அடையும்போது, சாதிகள்போன்ற பழைய சமுதாய...
செவ்வாய், 21 மார்ச், 2023
தமிழும் ஆங்கிலமும் - உச்சரிப்புமுறை
தமிழும் ஆங்கிலமும் - உச்சரிப்புமுறை---------------------------------------------------------------------------------------------------------------------------------------ஒலிவடிவே ஒரு மொழியின் அடிப்படை என்றாலும் அந்த
மொழியின் எழுத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்ததே. எனவே ஒவ்வொரு மொழியையும்
அந்தந்த மொழிகளின் எழுத்துக்களில் எழுதுவதே சரி. ஏனென்றால் ஒரு மொழியின்
பேச்சொலியியல், ஒலியனியல்
ஆகியவை அந்த மொழியின் எழுத்துவடிவங்களுக்கு
அடிப்படையாக அமைகிறது. தமிழில் எல்லா ஒலியன்களுக்கும் வரி வடிவம் - எழுத்துவடிவம்
- உண்டு. க, கா, கி, கீ
என்று உயிர்மெய்களுக்கும் எழுத்துக்கள் உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் 40-க்கு
மேற்பட்ட ஒலியன்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கான எழுத்து வடிவங்கள் 26 தான்!
ஆங்கிலத்தில் பல பேச்சொலிகள், ஒலியன்கள்
ஆகியவற்றிற்கு நேரடியான எழுத்து வடிவங்கள் கிடையாது. cat - city - இதில்
cat-இல்
உள்ள...