சனி, 12 ஆகஸ்ட், 2023

திராவிடம்பற்றி ஆய்வு செய்யக்கூடாதா? மார்க்சிய அரவணைப்பில் இருக்கிறவர்களுக்கு, தமிழ்மொழிமீது வெறுப்பா?

 திராவிடம்பற்றி ஆய்வு செய்யக்கூடாதா?

மார்க்சிய அரவணைப்பில் இருக்கிறவர்களுக்கு, தமிழ்மொழிமீது வெறுப்பா?
--------------------------------------------------------------------
திராவிடம் என்பது ஒரு மொழிக் குடும்பத்தின் பெயர் / ஒரு இனம் / ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அல்லது நாடு / ஒரு விழுமியம் - ஆரியத்திற்கு எதிரான ஒரு விழுமியம் . . . . என்று பல விளக்கங்கள் தரப்படுகின்றன. உறுதியாக இதுபற்றி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது மிகத் தேவையான ஒன்று. ஆர்வம் உள்ளவர்கள் . . . இதில் ஈடுபடலாம். ஈடுபடவேண்டும்.
என்னுடைய பதிவுகளில் திராவிடம் என்பது ஒரு இனம் இல்லை; மாறாக, ஒரு மொழிக்குடும்பத்திற்கு இடப்பட்ட ஒரு பெயர் என்றுமட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இதையும் தொடர்ந்த ஆய்வில்தான் முடிவு செய்யமுடியும்.
ஆனால் தமிழ்த் தேசிய இனம் என்பது உண்மையான ஒரு வரலாற்று விளைபொருள். ஏனையவைபற்றியும் முடிவுக்கு வரவேண்டும் ஆய்வுலகில்!
தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கும் இந்த ஆய்வு மிக மிகத் தேவையான ஒன்று. ஏனென்றால் தவறான கருத்தியல் மக்களின் உண்மையான சமுதாயப் போராட்டத்திற்குத் தடையாக அமையும். எனவே சமூகப் போராளிகள் இதற்கு நேரம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். அதில் எவ்விதத் தவறும் இல்லை! ஏனைய துறைசார்ந்த பணிகள் எல்லாம் - கணினித்தமிழ் ஆய்வு உட்பட - அதற்கு அடுத்ததுதான்!
மேலும் மார்க்சியத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தமிழ்மொழிமீது வெறுப்பு கொண்டவர்கள் (!!!) என்ற ஒரு தவறான கருத்துப் பரவலையும் எதிர்கொண்டாகவேண்டும்.
எனக்குத் தெரிந்த மார்க்சியத்தின் அடிப்படையில் கூறுகிறேன் . . . ஒரு மார்க்சியவாதி தேசிய இனப் பிரச்சனையில் ஒடுக்கப்படுகிற எல்லாத் தேசிய இனங்களுக்காகவும் போராடுகிற வேளையில் . . . தான் சார்ந்த தேசிய இனத்தின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் அந்தத் தேசிய இனத்தின் மொழியின் ஜனநாயக உரிமைகள், வளர்ச்சிக்காகவும் மிக உறுதியாக நிற்பவர் ஆவார். எந்த ஒரு சூழலிலும் தன் தேசிய இனத்தின் நலன்களையோ அல்லது அதன் மொழியையோ விட்டுக்கொடுக்கமாட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India