திங்கள், 24 அக்டோபர், 2022

''நரகாசுரன்'' பற்றிய ஒரு கருத்து!

 ''நரகாசுரன்'' பற்றிய ஒரு கருத்து!

---------------------------------------------------------------------------------------------------------------------------


புராணத்தில் நீடிக்கிற நரகாசுரன் உண்மையில் இருந்திருந்தால் . . . அவரைக் கொன்ற ''கடவுளும்'' இருந்திருக்கவேண்டும்! காப்பியங்களில் நீடிக்கிற ''இராவணன்'' இருந்திருந்தால் ''இராமனும்'' இருந்திருக்கவேண்டும்! ''அசுரர்கள்'' இருந்திருந்தால்''தேவர்களும்'' இருந்திருக்கவேண்டும்!
ஆனால் அவ்வாறு இருந்ததற்கான எவ்வித வரலாற்றுச் சான்றுகளும் கிடையாது! இந்த இரண்டு வகையான புராணப்படைப்புக்களுமே கற்பனைப் படைப்புக்கள்தான்! இரண்டு எதிர்மறையான புராணக் ''கதாநாயகர்கள், வில்லன்கள்" ஆகிய இரண்டு தரப்பினரும் இரண்டு எதிர்மறையான கற்பனை ''தத்துவங்களின்'' - '' உலகக் கண்ணோட்டங்களின்'' - ''வர்க்க நலன்களின்'' எதிரொளிப்புக்கள்தான்!
''இராமனுக்குக்'' கோயில் கட்டுவதும், ''இராமநவமியைக்'' கொண்டாடுவதும் ஆளும் வர்க்கங்களின் திட்டமிட்ட செயல்பாடுகள்தான்! அவர்களது நலன்களைக் காப்பாற்றுகிற ''கருத்துக்களுக்கு'' உண்மை வடிவங்கள் அளித்து, சமுதாயத்தைத் திட்டமிட்டு ஏமாற்றுவதே ஆகும்.
அந்த வகையில்தான் ''நரகாசுரனுக்கான'' வீரவணக்க நிகழ்ச்சியை எடுத்துக்கொள்ளவேண்டும்! ஆனால் நரகாசுரனை உண்மையான நபராக எடுத்துக்கொண்டால், எதிர்த்தரப்பினர் ''அவரைக் கொன்ற'' கடவுள்களையும் உண்மையான நபராகக்கொண்டு மக்களை ஏமாற்றுவது தொடரும்! ஒடுக்கப்படும் மக்களுக்காகப் போராடும் போராளிகள் இதில் கவனமாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து!
''இராமன் - இராவணன்'' ''தேவர் - அசுரர்'' ''நரகாசுரன் - அவரை அழித்த கடவுள் (?) '' - என்ற எதிர்மறையான கற்பனைப்படைப்புக்கள் . . . வரலாற்றில் வர்க்க வேறுபாடற்ற ஒரு சமுதாயம் இரண்டு எதிர்மறை வர்க்கங்களைக்கொண்ட வர்க்கங்களாக மாறியதைச் சுட்டிக்காட்டும் ''நபர்களே '' ஆவர்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India