வெள்ளி, 19 ஜூன், 2020

பேராசிரியர் சு. சண்முக சுந்தரம்

பேராசிரியர் சு. சண்முக சுந்தரம் (1949) … தமிழகத்தின் நாட்டுப்புறவியல் ஆய்வில் மிகவும் மூத்தவர். நெல்லை மாவட்டத்தில் கால்கரை என்ற ஊரில் பிறந்தவர். பாளை தூய சவேரியர் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகைலப் பட்டமும் பெற்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களின் வழிகாட்டுதலில் ‘ திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் (1977) பெற்றவர் ( அப்போது நானும் அங்கே முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தேன்). அடுத்த ஆண்டே அவர் பெங்களூர் தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். தமிழகத்தில் அவருக்கு முறையான வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அவர் அங்கேயே பணியாற்றி 2006 – இல் விருப்ப ஓய்வு பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே (1972) ‘ கதம்பம் ‘ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூலை வெளியிட்டார். Folklore என்பதற்கு நாட்டுப்புறவியல் என்ற ஒரு நல்ல சொல்லாக்கத்தை உருவாக்கியதில் இவருக்குப் பங்குண்டு. 1975 – இல் இவரது முதல் ஆய்வு நூலாக ‘ நாட்டுப்புறவியல் – ஓர் அறிமுகம்’ என்ற நூல் வெளிவந்தது. 1981- இல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த தமிழ் நூல்களை வெளியிடுவதற்காகத் தனது மகள் பெயரான ‘காவ்யா’ என்ற பெயரில் ஒரு நூல் வெளியீட்டகத்தை நிறுவினார். தனது நூல்களை மட்டுமல்லாமல், இளம் ஆய்வாளர்கள், முதுபெரும் ஆய்வாளர்கள், படைப்பிலக்கியவாதிகள் அனைவரின் நூல்களையும் வெளியிட்டுவருகிறார். மூன்று தடவைகள் தமிழக அரசின் தமிழ் நூல்களுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கிறார். 2006-08 – இல் ‘நாட்டுப்புற அரங்கியல்’ என்ற தலைப்பில் முதுநிலை ஆய்வு மேற்கொண்டார். செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனத்தின் நிதி உதவியுடன் ‘ காலந்தோறும் கண்ணகி கதைகள்’ என்ற ஆய்வை (2008-09) மேற்கொண்டார். ‘ நாட்டுப்புறத் தெய்வங்கள் – வழிபாடும் பண்பாடும்’ என்ற தலைப்பில் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆய்வுத் திட்டப் பணியைச் (2008-11) செய்து முடித்தார். 25 –க்கும் மேற்பட்ட ஆய்வுகளைத் தந்துள்ள இவர், ஆய்வுகளோடு தனது பணியை நிறுத்திக்கொள்ளாமல், சிறுகதை (4), நாவல் (5), நாடகம் ஆகிய படைப்பிலக்கியத் துறைகளிலும் தனது பங்களிப்பைத் தந்துள்ளார். 1995-2005 –ஆம் ஆண்டுகளில் ‘ தன்னன்னானே ’ என்ற ஒரு நாட்டுப்புறவியல் இதழை வெளியிட்டுவந்தார். தற்போது ‘தமிழ் சினிமா வரலாறு’, ‘ நெல்லைக் கலைக்களஞ்சியம்’ ஆகியவற்றிற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறார். சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சென்னைத் தமிழ்த்துறையில் (எனது இத்தொடரில்) நான்காம் தலைமுறையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளராகிய இவரைத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் முறையாகப் பயன்படுத்தாது ஒரு குறையே - தமிழகத்திற்குச் சற்று இழப்பே - என்று நான் கருதுகிறேன்.… தமிழகத்தின் நாட்டுப்புறவியல் ஆய்வில் மிகவும் மூத்தவர். நெல்லை மாவட்டத்தில் கால்கரை என்ற ஊரில் பிறந்தவர். பாளை தூய சவேரியர் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகைலப் பட்டமும் பெற்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களின் வழிகாட்டுதலில் ‘ திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் (1977) பெற்றவர் ( அப்போது நானும் அங்கே முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தேன்). அடுத்த ஆண்டே அவர் பெங்களூர் தூய வளனார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். தமிழகத்தில் அவருக்கு முறையான வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அவர் அங்கேயே பணியாற்றி 2006 – இல் விருப்ப ஓய்வு பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே (1972) ‘ கதம்பம் ‘ என்ற தலைப்பில் ஒரு கவிதை நூலை வெளியிட்டார். Folklore என்பதற்கு நாட்டுப்புறவியல் என்ற ஒரு நல்ல சொல்லாக்கத்தை உருவாக்கியதில் இவருக்குப் பங்குண்டு. 1975 – இல் இவரது முதல் ஆய்வு நூலாக ‘ நாட்டுப்புறவியல் – ஓர் அறிமுகம்’ என்ற நூல் வெளிவந்தது. 1981- இல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த தமிழ் நூல்களை வெளியிடுவதற்காகத் தனது மகள் பெயரான ‘காவ்யா’ என்ற பெயரில் ஒரு நூல் வெளியீட்டகத்தை நிறுவினார். தனது நூல்களை மட்டுமல்லாமல், இளம் ஆய்வாளர்கள், முதுபெரும் ஆய்வாளர்கள், படைப்பிலக்கியவாதிகள் அனைவரின் நூல்களையும் வெளியிட்டுவருகிறார். மூன்று தடவைகள் தமிழக அரசின் தமிழ் நூல்களுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கிறார். 2006-08 – இல் ‘நாட்டுப்புற அரங்கியல்’ என்ற தலைப்பில் முதுநிலை ஆய்வு மேற்கொண்டார். செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனத்தின் நிதி உதவியுடன் ‘ காலந்தோறும் கண்ணகி கதைகள்’ என்ற ஆய்வை (2008-09) மேற்கொண்டார். ‘ நாட்டுப்புறத் தெய்வங்கள் – வழிபாடும் பண்பாடும்’ என்ற தலைப்பில் பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆய்வுத் திட்டப் பணியைச் (2008-11) செய்து முடித்தார். 25 –க்கும் மேற்பட்ட ஆய்வுகளைத் தந்துள்ள இவர், ஆய்வுகளோடு தனது பணியை நிறுத்திக்கொள்ளாமல், சிறுகதை (4), நாவல் (5), நாடகம் ஆகிய படைப்பிலக்கியத் துறைகளிலும் தனது பங்களிப்பைத் தந்துள்ளார். 1995-2005 –ஆம் ஆண்டுகளில் ‘ தன்னன்னானே ’ என்ற ஒரு நாட்டுப்புறவியல் இதழை வெளியிட்டுவந்தார். தற்போது ‘தமிழ் சினிமா வரலாறு’, ‘ நெல்லைக் கலைக்களஞ்சியம்’ ஆகியவற்றிற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறார். சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக்குழு உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். சென்னைத் தமிழ்த்துறையில் (எனது இத்தொடரில்) நான்காம் தலைமுறையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளராகிய இவரைத் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் முறையாகப் பயன்படுத்தாது ஒரு குறையே - தமிழகத்திற்குச் சற்று இழப்பே - என்று நான் கருதுகிறேன்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India