வியாழன், 23 ஏப்ரல், 2020

வழிவழிவந்த மருத்துவமும் அதன் இன்றைய தொடர்ச்சியும்!

வழிவழிவந்த மருத்துவமும் அதன் இன்றைய தொடர்ச்சியும்!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
பல நூற்றாண்டுகளாக மனிதசமுதாயம் பயன்படுத்திவந்த சித்த, ஆயுர்வேத, யுனானி போன்ற மருத்துவத்தின் சிறப்புகளை நாம் மறக்கக்கூடாது. மறுக்கக்கூடாது. அதற்கு நான் கூறுகிற காரணம்... நமது இன்றைய மருத்துவ அறிவியல் வானில் இருந்து குதித்தது இல்லை. பல நூற்றாண்டுகளாக மனிதசமுதாயம் உருவாக்கிப் பயன்படுத்திய மருத்துவ அறிவின் தொடர்ச்சிதான். அந்த மருத்துவ அறிவுதான் நமது சமுதாயத்தைப் பாதுகாத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. வரலாற்றில் எவ்வளவோ நோய்கள் வந்திருக்கலாம். அவையெல்லாம் எவ்வாறு தீர்க்கப்பட்டன? அன்றைய மருத்துவ அறிவுதானே! எனவே தமது முன்னோரின் மருத்துவ அறிவு ... அறிவுதான் என்பதை மறுக்கக்கூடாது. அதேவேளையில் அதை இன்றைய அடுத்த கட்டத்திற்குக் கொண்டுவந்ததும் நமது சமுதாயம்தான். இது ஒரு தொடர்ச்சிதான். வளர்ச்சிதான். இன்றைய அறிவியலின் வளர்ச்சி முந்தைய சமுதாயத்தின் அறிவின் தொடர்ச்சியும் வளர்ச்சியும்தான் என்பதை எப்போதும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். வரலாற்றில் மருத்துவம் உட்பட அனைத்து அறிவியல்களும் தொடர்ந்து மாறியும் வளர்ச்சியும் அடைந்து வருகின்றன என்பதே அறிவியல் வளர்ச்சிக் கோட்பாடு! எனவே நமது முன்னோரின் மருத்துவ அறிவை ஏளனமாகவோ, அடிப்படை இல்லாததாகவோ நாம் நிச்சயமாகப் பார்க்கக்கூடாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India