வியாழன், 23 ஏப்ரல், 2020

கொரோனா வைரசுபற்றிய தவறான கருத்துகள்

கொரோனா வைரசுபற்றிய தவறான கருத்துகள்
--------------------------------------------------------------------------------------
(உலக நலவாழ்வு மையம் - WHO - World Health Organization.)
--------------------------------------------------------------------------------------
1) 5 ஜி அலைபேசி வலைப்பின்னல் வழியாகக்
கொரோனா வைரசு பரவும் என்பது உண்மை
இல்லை.
2) மிக வெப்பமான காற்று அல்லது வானிலை
நிலைமை அல்லது 25 டிகிரி C வெப்பம்
ஆகியவற்றில் கொரோனா வைரசு இறந்துவிடும்
என்பது உண்மை இல்லை.
3) ஒருவருக்குக் கொரோனா வைரசு தொற்றிவிட்டால்,
அவர் வாழ்நாள் முழுவதும் அது உடலில் தங்கி-
விடும் என்பது உண்மை இல்லை!
4) ஒருவர் 10 விநாடிகளுக்குமேல் தும்மல் அல்லது
இருமல் இல்லாமல் மூச்சை அடக்கிக்கொண்டால் ,
வைரசுத் தொற்றல் இல்லை என்று கொள்ளலாம்
என்பது உண்மை இல்லை.
5) மது (ஆல்கஹால்) அதிகமாகக் குடித்தால்
கொரோனா தொற்றாது என்பது உண்மை இல்லை.
6) மிகக் குளிரான வானிலைச் சூழல் அல்லது பனியில்
கொரோனா தொற்றாது என்பது உண்மை இல்லை.
7) சூடான தண்ணீரில் குளித்தால் கொரோனா
தொற்றாது என்பது உண்மை இல்லை.
8) கொசுக்கடி மூலம் கொரோனா தொற்றும் என்பது
உண்மை இல்லை.
9) கைகளை உலரவைக்கும் கருவி (hand dryer)
கொரோனாவைத் தடுக்கும் என்பது உண்மை
இல்லை.
10) புற ஊதாக் கதிர் ஒளியை (ultra-violet rays-
UV) உடம்பில் பாய்ச்சி, கொரோனாவைத்
தடுக்கலாம் என்று நினைத்தால், அது தோல்
பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.
11) தெர்மல் மானிட்டர் என்ற காய்ச்சலைக்
கண்டுபிடிக்கும் கருவியானது காய்ச்சலுக்கான
சூடு இல்லை என்று காட்டியவுடன், கொரோனாத்
தொற்றல் இல்லை என்று நினைக்கவேண்டாம்.
ஏனென்றால், கொரோனா வைரசு உடனடியாகப்
பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சரியல்ல. இரண்டு
நாள்களிருந்து 10 நாள்கள்வரை அது தன்
செயலைக் காட்ட, காலம் எடுத்துக்கொள்ளலாம்.
12) உடம்பின்மீது ஆல்கஹால் அல்லது ஸ்பிரிட்டை
ஊற்றிக்கொண்டால், கொரோனா தொற்றாது
என்பது உண்மை இல்லை.
13) நிமோனியா அல்லது ப்ளூ காய்ச்சலுக்குப்
பயன்படும் தடுப்பூசிகள் கொரோனாவைத்
தடுக்கும் என்பது உண்மை இல்லை. ஆனால்,
பொதுவாக, மூச்சியக்க நோயால் பாதிக்கப்-
பட்டவர்கள், அதைக் கட்டுப்படுத்தப் பயன்படும்
தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
14) மூக்குக்குள் உப்புநீரைக்கொண்டு அடிக்கடி
சுத்தம் செய்தால் கொரோனா தொற்றாது என்பது
சரியில்லை.
15) வெள்ளைப்பூண்டில் சில கிருமி எதிர்ப்புத் திறன்
உள்ளது என்பதில் உண்மை இருந்தாலும்,
கொரோனைத் தொற்றலை அது தடுக்கும்
என்பதில் உண்மை இல்லை.
16) வயதானவர்களையே கொரோனா தொற்றும்;
இளவயதினரைப் பாதிக்காது என்பது சரி இல்லை.
17) பாக்டீரியா எதிர்ப்பு மருந்துகள் கொரோனா
வைரசைக் கொல்லாது. ஆனால், கொரோனாவால்
பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, பிற உடல்
பாதிப்புகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம்.
18) கொரோனாவுக்கென்று இன்றைய மருத்துவ
உலகில் மருந்துகள் இன்னும் மருந்து உருவாக்கப்-
படவில்லை.
-------------------------------------------------------------------------------------
எனவே, தற்போதைய நிலையில் கொரோனாத் தொற்றலைத் தடுக்க....
1) அடிக்கடி கைகளைச் சோப்புகொண்டு கழுவ-
வேண்டும்.
2) தனிமனித இடைவெளியைப் பின்பற்றவேண்டும்.
3) கண்கள், வாயைத் தொடுவதைத்
தவிர்க்கவேண்டும்.
4) மூச்சியக்கத் தூய்மையைக் (Respiratory hygiene) கடைப்பிடிக்க-
வேண்டும்

1 கருத்துகள்:

ச. நீலமேகன் சொன்னது…

Thank you Sir.

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India