சனி, 25 ஏப்ரல், 2020

கணினிவழியாகத் தமிழ்ப்புணர்ச்சி

கணினிவழியாகத் தமிழ்ப்புணர்ச்சி
-----------------------------------------------------------

தமிழ்ப் புணர்ச்சி விதிகள் ... ஒலியனியல் (எழுத்தியல்), உருபனியல்( சொல்லியல்), தொடரியல், பொருண்மையியல் ஆகிய நான்கு இயல்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த எழுத்துக்கு அடுத்து இந்த எழுத்து வந்தால் என்பதைப்பற்றிமட்டும் பொறுத்தது இல்லை. நமது இலக்கண ஆசிரியர்கள் இதைத் தெளிவாக உணர்ந்துதான் .... உயிர் + உயிர், உயிர் + மெய், மெய்+உயிர், மெய் + மெய் என்று மட்டும் சொல்வதோடு நிறுத்தாமல், நிலைமொழிச் சொல்லின் இலக்கணவகைப்பாடு என்ன, வருமொழிச் சொல்லின் இலக்கணவகைப்பாடு என்பதையும் ( பெயரா, வினையா, வினையெச்சமா, எந்தவகையான வினையெச்சம், வினையடையா, பெயரடையா, பெயரெச்சமா) , இரண்டு சொல்களுக்கு இடையேயுள்ள உறவு வேற்றுமை உறவா அல்லது வேற்றுமை அல்லாத அல்வழி உறவா என்பதையெல்லாம் பார்க்கவேண்டும் என்று கூறிச்சென்றுள்ளார்கள். குற்றியலுகரப் புணர்ச்சிக்கே தனி இயல் வகுத்துள்ளார்கள். இதையும் தாண்டி, சொல்களின் பொருண்மைக்கும் பங்கு இருக்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்கள். விதிவிலக்குகளையும் கூறிச்சென்றுள்ளார்கள். அதாவது, புணர்ச்சிக்குத் தேவையான அடிப்படையான கோட்பாடுகளை .. அன்றைய தமிழுக்குச் செயல்படுத்தி .... தெளிவாக விளக்கியுள்ளார்கள். அவற்றை நாம் தெளிவாகப் புரிந்துகொண்டு... இன்றைய தமிழுக்குச் செயல்படுத்தவேண்டும். மேலும் இதுபற்றிய இன்றைய மொழியியல் கோட்பாடுகளையும் தெரிந்துகொள்ளவேண்டும். இவற்றைக் கணினிப்படுத்துவதில் சிக்கலே இல்லை..... சிக்கல், மேற்கூறிய அறிவுகளையெல்லாம் தெளிவாக வாங்கிக்கொண்டு, அவற்றை எவ்வாறு ஒழுங்குபடுத்தி... கணினி நிரல்களாக ஆக்குவது என்பதில்தான் உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India