வியாழன், 23 ஏப்ரல், 2020

தொற்றுநோய்க்கு நிரந்தரத் தீர்வு என்ன?

தொற்றுநோய்களுக்கு நிரந்தரத் தீர்வு என்ன?
----------------------------------------------------------------------------------
தொற்று நோய்கள் உட்பட அனைத்து நோய்களின் பாதிப்புகளையும் எதிர்த்துப் போராட .... அறிவியல் வளர்ச்சி நிச்சயமாகப் பெரும் அளவு உதவும் என்பதில் ஐயம் இல்லை!
ஆனால்.. தற்போதை அரசியல் பொருளாதாரச் சூழலில்... இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு.... மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களையும் மருத்துவமனைகளையும் தங்களது ஏகபோகத்திற்கு உட்படுத்திக்கொண்டு... கொள்ளை லாபம் அடித்துக்கொண்டிருக்கின்றன. மருத்துவக் கல்வியையே லாபம் ஈட்டும் தொழில்நிறுவனங்களாக மாற்றியுள்ளன!
மக்களிடையே தேவையற்ற பீதிகளையும் உயிர்ப்பயத்தையும் தங்களது ஊடகங்களின் வழியே உருவாக்கி... அவற்றையும் தங்களது சந்தைக்கான ''மூலதனமாக'' பயன்படுத்துகின்றன! இதுவே உண்மை! .
மக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கூட்டுவதற்கான சத்துணவு, வாழ்விடத் தூய்மை ஆகியவற்றை அதிகரிப்பதற்குப பதிலாக...
மருந்துகளையும் மருத்துவமனைகளையுமே சார்ந்து வாழ்வதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகின்றன.
எனவே... மக்களுக்கு இன்றைய தேவைகள்... அறிவியல் வளர்ச்சி மக்களுக்கானதாக இருக்கவேண்டும்,, ஏகபோக நிறுவனங்களின் லாபத்திற்காக இருக்கக்கூடாது!
அடுத்து, முடிந்த அளவு மக்களின் உடல் நோய் எதிர்ப்புத் திறனை மேலும் வளர்த்துக்கொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும் தேவையான வாழ்க்கை (உணவு, இருப்பிடம், சுற்றுப்புறத் தூய்மை ) கிடைக்கவேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India