திங்கள், 20 ஜூன், 2016

தமிழகத்தில் அடிப்படையற்ற ஆங்கிலமோகம் !

தமிழகத்தில் அடிப்படையற்ற ஆங்கிலமோகம் !

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆங்கிலமொழியின் ஆதிக்கம் என்பது ஆதிக்க வர்க்கங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இந்திமொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிற அல்லது எதிர்த்துப்போராடுகிற தமிழர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம்.
ஒரு பிரிவினர் இந்திமொழிக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் – அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள நிர்வாகமொழி உரிமை உட்பட- தமிழுக்கு அளிக்கப்படவேண்டும்; தமிழ்மொழியே தமிழகத்தில் உயர்கல்விஉட்பட அனைத்துக் கல்விநிலையிலும் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும், உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து நீதித்துறைகளிலும் தமிழே வழக்காடு மொழியாக இருக்கவேண்டும் , ஆட்சி நிர்வாகமொழியாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்ற பல மொழிஜனநாயக உரிமைகளை வலியுறுத்துகின்றனர்.
மற்றொரு பிரிவினர், தமிழுக்குப்பதிலாக ஆங்கிலமே மேற்கூறிய துறைகளிலெல்லாம் நீடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். உலக அளவில் ‘மொழி ஏகாதிபத்தியமாக’ ஆங்கிலமே தற்போது நீடித்துவருகிறது. அந்த ‘மொழி ஏகாதிபத்தியத்தின்’ திட்டமிட்ட நடவடிக்கைளின் ஒரு பகுதியே தமிழகத்திலும் ஆங்கிலத்தை உயர்த்திப்பிடிக்கும் குழுவை உருவாக்குவதாகும். அதில் தற்போது ‘ஆங்கில மொழி ஏகாதிபத்தியம் ‘ வெற்றிபெற்றதாகவே அமைந்துள்ளது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
தமிழகத்தில் ஒருபுறம் உலக ஏகாதிபத்தியத்தின் ஆங்கில மொழி ஆதிக்கம்; மறுபுறம் அவர்களின் இந்தியத் தரகர்களின் இந்தித்திணிப்பும் ஆதிக்கமும்! இதற்கிடையில் தமிழ் இனத்தின் தமிழ்மொழி தவித்துக்கொண்டிருக்கிறது.
ஆங்கிலமோகம் தற்போது தமிழகத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. ஆங்கிலம் தெரிந்தவர்களே அறிவு உள்ளவர்கள் என்ற ஒரு மாயை செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. அயல்நாடுகளில் – குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து சென்று வேலை பார்ப்பதையே தங்களது வாழ்க்கையின் ‘ இலட்சியமாகக் கொண்ட’ மத்தியதர வர்க்கக் குடும்பத்தினர் , ஆங்கில அறிவு தங்களது குழந்தைகளுக்கு இல்லையென்றால் , அவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையே இல்லை என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தவறான , பொய்யான கருத்தியல் திட்டமிட்டு இங்குப் பரப்பப்பட்டுள்ளது. இதன் விளைவு, நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குழந்தைகளை ஆங்கிலமொழி, ஆங்கிலப் பண்பாடு ஆகியவற்றைநோக்கித் திருப்பிக்கொண்டிருக்கின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
Krishna Reddy Anban: It is not good to use English in all fields in Tamil nadu. There is nothing wrong in giving importance in learning English as it has more accumulated knowledge in many modern fields. Hindi too is useful for north Indian mobility. Learning more languages is always good 
You untie importance of English in computer science better than me and I wonder why you're discouraging the learning of it
N.Deiva Sundaram : Dear Sir, I suppose you have misunderstood me. I am not against learning of English. Just I am against the "illusion about English". Also we should not sacrifice the status of our mother tongue for the sake of any alien language including English. As you said, I am always for the learning of many languages , especially by the academic people. But it should be voluntary: it should not be imposed.
ஒரு மொழியியல் மாணவன் என்ற முறையிலும் மக்கள் ஜனநாயகக்கொள்கையை விரும்புகிறவன் என்ற வகையிலும் நான் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை. எல்லா மொழிகளும் மனிதசமுதாயத்தின் - மனிதமூளையின் - படைப்புத்தான். அவை மக்களால்தான் தான் பேசப்படுகின்றன. ஒரு மொழியைத் தரக்குறைவாகக் கருதுவது என்பது அந்த மொழி பேசும் மக்களைத் தரக்குறைவாகப் பார்ப்பதாகும் என்பது எனது கொள்கை. எனவே ஆங்கிலமோ, இந்தியோ, சமசுகிருதமோ - எந்தமொழியாக இருந்தாலும் அதை நான் மதிக்கிறேன். ஆனால்.... எனது தாய்மொழியின்மீது வேறொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தனது தாய்மொழியின்மீது பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தாய்மொழியில் ஒருவர் தனது அத்தனை மொழிச்செயற்பாட்டுத் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் உரிமையும் வாய்ப்பும் வசதியும் வேண்டும். இதுவே மக்கள் ஜனநாயக அடிப்படையிலான ஒரு மொழிக்கொள்கையாக இருக்கமுடியும்.

1 கருத்துகள்:

Unknown சொன்னது…

உண்மையில் ஆங்கிலம் அவர்களுக்கு பிழைப்புக்காக கற்றுக் கொள்கிறார்கள்.

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India