வியாழன், 30 ஜூன், 2016

ஐரோப்பிய ஒன்றியத்தின் மொழிக்கொள்கை

                                 ஐரோப்பிய ஒன்றியத்தின் மொழிக்கொள்கை


ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு!
ஐரோப்பிய யூனியனில் இருந்து கடந்த ஜூன் 24-ம் தேதி இங்கிலாந்து வெளியேறியது.
கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை அந்நாடு எடுத்துள்ளது.

இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிகளில் பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்த விவகாரத்தில் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய யூனியனில் 24 மொழிகள் ஆட்சிமொழிகளாகவும் பயன்பாட்டு மொழிகளாகவும் இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஐரோப்பிய யூனியனின் ஆவணங்களைத் தனது தாய்மொழியில் பெறும் உரிமை உண்டு. தனது தாய்மொழியியலேயே எந்தவொரு மடலும் எழுதலாம். அதற்கானப் பதிலையும் தனது தாய்மொழியிலேயே பெறமுடியும். இதற்காக 1750 மொழியியலாளர்களும் 600 பிற அலுவலர்களும் பணிபுரிகின்றனர். மேலும் 600 முழுநேரப் பணியாளர்ளும் 3000 பகுதிநேர ஆர்வலர்களும் பணிபுரிகின்றனர். உலகத்திலேயே மிகப்பெரிய மொழிபெயர்ப்பு அமைப்பாக இது நீடிக்கிறது. மேலும் விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.

http://ec.europa.eu/languages/policy/linguistic-diversity/official-languages-eu_en.htm

இந்தியாவில் 22+1 மொழிகள் ( அரசியல் சட்டப்ப்டி) உள்ளன. அனைத்து மொழிகளையும்ஆட்சிமொழிகளாக ஆக்கிவிட்டு, ஐரோப்பிய யூனியனில் இருப்பதுபோல 2000 அல்லது மூவாயிரம் பணியாளர்களை வைத்துக்கொண்டு, அவரவர் மொழியில் ஒவ்வொருவரும் கருத்தாடல் மேற்கொள்ள வழிவகை செய்யமுடியும் அப்படியிருக்க ..... தற்போது இந்த மொழி ஜனநாயகத்தை ஏற்று, நடைமுறைப்படுத்த ஏன் நடுவண் அரசு விரும்பவில்லை? நடைமுறைச் சிக்கல் இல்லை. இந்திமொழி ஏகாதிபத்தியம்தான் காரணம்... ஆதிக்க உணர்வுதான் காரணம்...

உண்மையில் மக்கள் உணர்வை மதிக்கக்கூடிய அரசுகளாக இருந்தால் .... தாங்கள் கூறுவது நடக்கும். இப்பிரச்சினையில் மக்கள் பொதுவாக்கெடுப்புக்கு அரசியல் சட்டத்தில் இடம் இல்லாமலிருந்தாலும், ... மக்களின் போராட்டங்களால் அப்படி ஒரு வாக்கெடுப்பை நடத்தவைக்கலாம். அனைத்து மொழிகளைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட்டால்... இது நடக்கும். நடக்கவைக்கமுடியும்.

ஏற்கனவே இதற்கான நல்லதொரு முயற்சியை நண்பர் ஆழிசெந்தில்நாதன் அவர்கள் மேற்கொண்டுவருகிறார். அதற்கான ஒருங்கிணைப்பு மாநாடு ஒன்றையும் நடத்தியுள்ளார். அதைத் தொடரலாம்.https://www.facebook.com/.../PromoteLinguisticEq.../members/


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India