வியாழன், 30 ஜூன், 2016

சுவாதி படுகொலையும் சமூகப் பின்னணியும்...

சுவாதி படுகொலையும் சமூகப் பின்னணியும்...------------------------------------------------------------------- அரசியல், பொருளாதாரம், மதம், ஜாதி ஆகியவற்றின் அடிப்படையில் நிலவுகிற ஒடுக்குமுறைகளுக்குச் சமூகக் காரணிகள் காரணம்... இந்தவகை ஒடுக்குமுறைகளில் ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆணும் பாதிக்கப்படுகிறான். பெண்ணும் பாதிக்கப்படுகிறாள். ஆனால் மேற்கூறிய பாதிப்புகளோடு .... பெண் என்பவள் சமுதாயத்தில் பெண்ணாகப் பிறந்ததினால் பாதிக்கப்படுகிறாள். இந்தவகைப் பாதிப்பை ஏற்படுத்துவதில் சமூகமானது அரசியல், பொருளாதாரம். மதம் , ஜாதி அடிப்படைகளைப் பார்ப்பதில்லை. பெண்... அவ்வளவுதான். கருவிலேயே பெண் சிசுவை அழிப்பது.... குழந்தை வளர்ப்பில்கூட ஆண் குழந்தைக்கு இருக்கிற உரிமைகளைப் பெண் குழந்தைகளுக்கு அளிக்காமல் இருப்பது... . குடும்ப வாழ்க்கையில் கூட பெண்களுக்கென்று வீட்டுவேலைகளை ஒதுக்குவது ( சமையல், வீடு பெருக்குவது,...

தமிழுக்கு உள்ள உரிமை !

                                                     தமிழுக்கு உள்ள உரிமை ! இந்திய அரசியல் சட்டத்தின் பின்னிணைப்பாக உள்ள 8 ஆவது பிரிவில் இன்றுவரை 22 இந்தியமொழிகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் சட்டத்தின் உள்ளே இவை இடம்பெறவில்லை. மேலும் இந்தப் பின்னிணைப்பின் நோக்கம் ..... ஆட்சிமொழியாகிய இந்தியைத் தொடர்ந்து வளர்த்தெடுப்பதற்குச் சமசுகிருதத்தை முதன்மையாகவும், எட்டாவது இணைப்பில் உள்ள மொழிகளின் வளங்களை இரண்டாவதாகவும் பயன்படுத்தவதேயாகும். இந்த 22 மொழிகளைச் சேர்ந்த வல்லுநர்கள் ஆட்சிமொழியாகிய இந்தியை வளர்ப்பதற்கான பாராளுமன்றக்குழுவில் இடம் பெறலாம். இந்த உரிமைமட்டுமே 8 ஆவது பிரிவில் உள்ள மொழிகளுக்கு உண்டு!-------------------------------------------------------------------------------------PART...

ஐரோப்பிய ஒன்றியத்தின் மொழிக்கொள்கை

                                 ஐரோப்பிய ஒன்றியத்தின் மொழிக்கொள்கை ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு! ஐரோப்பிய யூனியனில் இருந்து கடந்த ஜூன் 24-ம் தேதி இங்கிலாந்து வெளியேறியது. கருத்து வாக்கெடுப்பில் 51.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவை அந்நாடு எடுத்துள்ளது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தின் முடிவை தொடர்ந்து ஆங்கில மொழியை ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அதிகாரப்பூர்வ மொழிகளில் பட்டியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் இந்த விவகாரத்தில் மறுப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில்...

வெள்ளி, 24 ஜூன், 2016

இடையினம் என்பது உயிரா அல்லது மெய்யா?

தமிழ்மொழி அமைப்பின் சிறப்புகளில் சில (2)..... (தமிழிலக்கணத்தில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.. மற்றவர்களுக்கு மிகவும் அலுப்பு(த்) தட்டலாம் ... முன்னெச்சரிக்கை ... மன்னிக்கவும்.  தமிழ் ஒலியன்களில் ( எழுத்துகளில்) இடையினம்பற்றிய ஆய்வில் இலக்கண ஆசிரியர்களின் மதிநுட்பம் ... இடையினம் என்பது வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடைப்பட்ட ஒன்றா? அல்லது உயிருக்கும் மெய்யுக்கும் இடையிலான ஒன்றா? எனக்கு ஒரு ஐயம் .. ஐயம்தான் ! பேச்சொலியியல் ( Phonetics) அடிப்படையில் பேச்சொலிகளை இரண்டாக வகைப்படுத்தலாம். (1) மூச்சுக்குழாயிலிருந்து வாயறைக்கு வரும் காற்றை எவ்விதத் தடையும் செய்யாமல், ஒலி பிறப்பித்தால் .... தடையற்ற ஒலியாக இருந்தால் ... அது உயிரொலி. (2) வாயறைக்கு வந்த காற்றைத் தடுத்துநிறுத்தி, ஒலி பிறப்பித்தால் ... தடையுள்ள ஒலியாக இருந்தால்... அது மெய்யொலி. 12 உயிரொலிகளும் தமிழில் தடையற்ற பேச்சொலிகள்... வல்லினம்,...

வியாழன், 23 ஜூன், 2016

தமிழ்ச்சொல் வகைப்பாட்டில் வளர்ச்சி !

தமிழ்மொழி அமைப்பின் சிறப்புகளில் சில ..... (தமிழிலக்கணத்தில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.. மற்றவர்களுக்கு அலுப்பு தட்டலாம் ... முன்னெச்சரிக்கை)  ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தொன்மையும் தொடர்ச்சியுமுடைய தமிழ்மொழி தனது மொழிச்சமுதாயத்தின் தேவைகளையொட்டித் தொடர்ந்து வளர்ந்துவருகிறது. அவ்வாறு வளர்ச்சியடையும்போது, மிகத் தெளிவான வரையறைகள் அல்லது விதிகளுக்கு உட்பட்டு மாறவும் வளரவும் செய்கிறது. நமது இலக்கண ஆசிரியர்கள் இதை மிக நுட்பமாக ஆய்ந்து வகைப்படுத்தியுள்ளார்கள்! (1) தமிழ்ச்சொற்கள் பெயர், வினை என்று வகைப்படுத்தப்படுகின்றன. பெயர்ச்சொல் தனக்கு முன் பெயரடைகள் அல்லது பெயரெச்சங்களையும் தனக்குப்பின்னால் வேற்றுமைவிகுதிகளையும் ஏற்கிறது ( ''அழகான குழந்தையை''') ....

செவ்வாய், 21 ஜூன், 2016

மார்க்ஸ் - மனித சமுதாயமும் மனித மனமும்

வினா : அறிவியலென்பது இயற்கையிலேயே இருப்பது,சமூக அறிவியலென்பது மனித இனத்தின் மனக்கூறுகள் சம்பந்தப்பட்டதல்லவா,மாரக்ஸின் காலகட்டத்தில் இருந்தது போன்றா மனிதமனங்கள் இன்று இருக்கின்றன? விடை : இயற்கை, சமுதாயம், மனம் - மூன்றுமே அறிவியல் ஆய்வுகளுக்கு உட்பட்டவைதான். எனவேதான் உளவியல்துறையும் அறிவியல்கீழ் வருகிறது. நிலவும் சமுதாயம்தான் தன்னைப்பற்றி - தன் பண்புகள்பற்றி - நமது மனத்தில் வெளிப்படுத்துகிறது. மனமும் உண்மைதான்... ஆனால் அது புற உலகத்தைப்பற்றிய ( இயற்கை, சமுதாயம் இரண்டுமே) ஒரு பதிவு. சமூக அறிவியல் மனம் சம்பந்தப்பட்டது என்று தாங்கள் கூறுவதில் ஒரு உண்மை உண்டு. இன்றைய சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுற்று இருப்பதால், ஒருவரின் வர்க்க நிலைபாடானது, தன்னைச் சுற்றியுள்ள சமுதாய நிகழ்வுகளைப் பார்க்கும் கோணத்தைப் பாதிக்கும். இது தவிர்க்க இயலாது. அதனால்தான் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கம்...

மார்க்சியத் தத்துவம் - நடைமுறைக்குச் சாத்தியமா?

வினா : ''மார்க்ஸ் தத்துவம் உலகில் செயல் படுத்தக் கூடிய ஒரு தத்துவமா? அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா?'' விடை: ''புவிஈர்ப்புவிசை பற்றிய அறிவியல்விதி இன்றைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏன் பயன்படுகிறது? புவிஈர்ப்புவிசையை அறிவியலாளர்கள் உருவாக்கவில்லை. மாறாக அந்த விசை இயற்கையில் இயற்கையாக நிலவுகிறது. அது இயற்கையின் இயற்கை. அதை அறிவியலாளர்கள் கண்டறிந்தார்கள். அவ்வளவுதான். உருவாக்கவில்லை.. அறிவியலாளர்கள் கண்டறிந்த இந்த விதி இயற்கையில் செயல்படுமா என்று இங்கு கேட்பதற்கே இடமில்லையல்லவா? .... அதுபோன்றதுதான் காரல்மார்க்சின் அரசியல்பொருளாதாரம்பற்றிய சமூகவியல் விதிகள். இவற்றை மார்க்ஸ் உருவாக்கவில்லை. மனித சமுதாயம் தோன்றியதிலிருந்து, தொடர்ந்து வரலாற்று ஊடே அது எவ்வாறு, மாறியும், வளர்ந்தும் வருகிறது என்பதைக் கண்டறிந்தார். அந்தச் சமுதாய வளர்ச்சி விதிகளை அவர் உருவாக்கவில்லை. அவர் முன்வைக்கிற...

திங்கள், 20 ஜூன், 2016

மொழிவழிச் செயல் ( Speech Act) : மனிதமூளையும் கணினியும்

         மொழிவழிச் செயல் ( Speech Act) : மனிதமூளையும் கணினியும் ----------------------------------------------------------------------------------------------------------------- நாம் ஒரு தொடரை முன்வைக்கும்போது, அத்தொடரானது ஒரு பொருளை - பொருண்மையை- தருவதோடு, ஒரு செயலையும் செய்கிறது. '' நாளைக்கு வருகிறேன்'' என்று ஒருவர் சொல்லும்போது.. ... 1) அவர் தான் வருகிற செய்தியைத் தெரிவிக்கிறாரா ?, (தெரிவித்தல் செயல்) 2) அல்லது கேட்பவரிடம் தன் வருகையை உறுதிப்படுத்துகிறாரா?, (உறுதிப்படுத்தும் செயல்) 3) அல்லது இன்று தன்னை அழைப்பவரிடம் தன் இயலாமையைத் தெரிவித்து, நாளைக்கு வருகிறேன் என்று ஒரு மாற்றை முன்வைக்கிறாரா ? ( இயலாமையைத் தெரிவித்து , ஒரு மாற்றை முன்வைக்கும் செயல்) 4) அல்லது கேட்பவரிடம் தன் நாளைக்கு வந்து அவருடைய சிக்கலைத் தீர்த்துவைக்கிறேன், கவலைவேண்டாம் என்று ஆறுதல் கூறுகிறாரா.?(...

மக்கள் ஜனநாயக மொழிக்கொள்கை ..

மக்கள் ஜனநாயக மொழிக்கொள்கை ..  மொழிவெறி அல்ல... மொழி உணர்வு! ----------------------------------------------------------------------------------------------------------------------- ஒரு மொழியியல் மாணவன் என்ற முறையிலும் மக்கள் ஜனநாயகக்கொள்கையை விரும்புகிறவன் என்ற வகையிலும் நான் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை. எல்லா மொழிகளும் மனிதசமுதாயத்தின் - மனிதமூளையின் - படைப்புத்தான். அவை மக்களால்தான் தான் பேசப்படுகின்றன. ஒரு மொழியைத் தரக்குறைவாகக் கருதுவது என்பது அந்த மொழி பேசும் மக்களைத் தரக்குறைவாகப் பார்ப்பதாகும் என்பது எனது கொள்கை. எனவே ஆங்கிலமோ, இந்தியோ, சமசுகிருதமோ - எந்தமொழியாக இருந்தாலும் அதை நான் மதிக்கிறேன். ஆனால்.... எனது தாய்மொழியின்மீது வேறொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். நான் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தனது தாய்மொழியின்மீது பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது....

தமிழகத்தில் அடிப்படையற்ற ஆங்கிலமோகம் !

தமிழகத்தில் அடிப்படையற்ற ஆங்கிலமோகம் ! தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஆங்கிலமொழியின் ஆதிக்கம் என்பது ஆதிக்க வர்க்கங்கள் விரும்பி ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிகிறது. இந்திமொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கிற அல்லது எதிர்த்துப்போராடுகிற தமிழர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒரு பிரிவினர் இந்திமொழிக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் – அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள நிர்வாகமொழி உரிமை உட்பட- தமிழுக்கு அளிக்கப்படவேண்டும்; தமிழ்மொழியே தமிழகத்தில் உயர்கல்விஉட்பட அனைத்துக் கல்விநிலையிலும் பயிற்றுமொழியாக இருக்கவேண்டும், உயர்நீதிமன்றம் உட்பட அனைத்து நீதித்துறைகளிலும் தமிழே வழக்காடு மொழியாக இருக்கவேண்டும் , ஆட்சி நிர்வாகமொழியாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்ற பல மொழிஜனநாயக உரிமைகளை வலியுறுத்துகின்றனர். மற்றொரு பிரிவினர், தமிழுக்குப்பதிலாக ஆங்கிலமே மேற்கூறிய துறைகளிலெல்லாம் நீடிக்கவேண்டும் என்று...

மொழியியலாளர்களும் பேச்சுத்தமிழும்

                           மொழியியலாளர்களும் பேச்சுத்தமிழும்                                          அண்மையில் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் ... '' நீங்கள் மொழியியலாளர்கள் பேச்சுத்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். பேச்சுத்தமிழைப் பள்ளிகளில் கற்றுக் கொடுக்க வற்புறுத்துகிறீர்கள். இது சரியா?'' என்று! 1) பேச்சுத்தமிழும் தமிழின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று. காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும்வரை அன்றாட உரையாடல்களுக்குப் பயன்படுத்துவது பேச்சுத்தமிழே. இந்தத் தமிழும் தெளிவான இலக்கணத்தைக் கொண்டதே! எனவே அதைத் தரக்குறைவாக நினைப்பது சரியல்ல. எனவே தமிழ்மொழி ஆய்வு என்பது பேச்சுத்தமிழையும் உள்ளடக்கியே...

திங்கள், 13 ஜூன், 2016

தமிழ்மொழி வளர்ச்சித் திட்டம்

தமிழ்மொழி வளர்ச்சித் திட்டம் மொழி – மனித இனத்திற்கே உரிய ஒரு சிறப்பான ஊடகம். உயிரியல் அடிப்படையில் மனித மூளை உருவாக்கித் தந்துள்ள  தனித்துவம்மிக்க ஒன்று. ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள் தங்களுக்குள் கருத்துப்புலப்படுத்தச் செயல்களுக்காகப் பயன்படுத்துகிற பலவித ஊடகங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல்,  மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள புற உலகத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கும் அதைத் தங்களது மூளையில் சேமித்துவைக்கவும்  உதவுகிறது. மனித மூளையின் அல்லது மனத்தின் ஒரு பகுதியாகவே மொழி விளங்குகிறது. ஒருவரின் மொழியறிவானது அவரது பேசுதல், கேட்டல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கு வெளிப்பாட்டுத் திறன்களால் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. இந்த நான்கு வெளிப்பாட்டுத் திறன்களுக்கும் மனிதரின் வாய், காது, கண், கை ஆகிய நான்கு உடல் உறுப்புகளும் பயன்படுகின்றன. இவ்வாறு மூளை உட்பட ஐந்து உடல்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India