வன்தொடர்க் குற்றியலுகரத்தில் புணர்ச்சி . . . திரு இராமசாமி செல்வராசு-------------------------------------------ஐயா, ஒரு தெளிவுக்காக எழுதுகிறேன்/கேட்கிறேன். மேலே (2) (3) எனக் குறிப்பிட்ட பத்திகளில் பெயரை அடுத்து வினை வந்தால் புணர்ச்சி விதிகளின்படி ஒற்று மிகாது எனக் குறித்திருக்கிறீர்கள். அதை மேலும் நுட்பமாகச் சொல்லவேண்டுமானால், இரண்டாம் வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகாது என்னும் விதியைச் சொல்லலாமா? இதுதவிர வேறு ஏதேனும் விதியைச் சுட்டுகிறீர்களா?வன்தொடர்க்குற்றியலுகரங்கள் குறித்த விதிகள் (ஒற்று மிகும்) முதன்மையானவை என்பதோடு ஒப்புகிறேன். பல இடங்களில் அவ்வாறே எழுதிவருகிறேன். பாட்டுப்பாடு, கருத்துக்கூறு... இப்படியாக.ந. தெய்வ சுந்தரம்-------------------------------ஆமாம் நண்பரே. ''கருத்து கேள்'' என்பதில் இரண்டாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது. 'கருத்து' என்ற பெயர்ச்சொல்லுக்குப்பிறகு 'கேள்'...
திங்கள், 16 ஜனவரி, 2023
வாழ்த்துகள் - வாழ்த்துக்கள் ?
வாழ்த்துகள் - வாழ்த்துக்கள் ?------------------------------------------------------------------------------------------------------------------பேராசிரியர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள்----------------------------------------------------------------------------வாழ்த்துகள் அல்லது வாழ்த்துக்கள் - எது சரியானது?ந. தெய்வ சுந்தரம்-----------------------------------------------------------------------------------------இதுபற்றி எனது கருத்தை ஏற்கனவே பல இடங்களில் தெரிவித்துள்ளேன். இருப்பினும் பேராசிரியர் கேட்பதால் மீண்டும் அதை எழுதுகிறேன். (1) பழந்தமிழ் இலக்கணங்களின்படி, செய்து வாய்பாட்டு வினையெச்சங்களில் - வன்தொடர்க்குற்றியலுகரமாக அமைகிற வினையெச்சங்களையடுத்து (படித்துப் பார்த்தான், கேட்டுப் பார் ) வல்லினங்களில் தொடங்கும் சொற்கள் வந்தால், ஒற்று மிகும்.(2) ஆனால் கருத்து, படிப்பு, வாழ்த்து...
கணினித்தமிழில் ஒரு சிக்கல் !
கணினித்தமிழில் ஒரு சிக்கல் !------------------------------------------------------------------------------------------------------------------- சொற்பிழை திருத்துவதற்கான மென்பொருள் கருவியை உருவாக்கும்போது இதுபோன்ற பல சிக்கல்கள் நீடிக்கின்றன. மேலும் அயல்மொழிச்சொற்களுக்குப்பதிலாகத் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவதற்கான கருவியை உருவாக்கும்போது வருகிற ஒரு பெரிய சிக்கலே ... ஒரு சொல் தமிழ்ச்சொல்லா இல்லை அயல்மொழிச் சொல்லா என்பதை முடிவு செய்வது ஆகும். (1) ஒரு குறிப்பிட்ட சொல் தமிழ்ச்சொல்தான் என்கின்றனர் அறிஞர்கள் சிலர் !( 'சில அறிஞர்கள்' ???) ! (2) 'இல்லை, இல்லை. வடமொழிச்சொல்தான் என்றகின்றனர் வேறு சிலர்! (3) இதற்கு அப்பாற்பட்டு அன்புக்குரிய இராமகி ஐயா போன்றவர்கள் ' இது தமிழ்ச்சொல்தான் . . . ஆனால் இதை வடமொழிக்காரர்கள் கடன் பெற்றுக்கொண்டு சில மாற்றங்களைச் செய்துள்ளார்கள். பின்னர் இந்த மாற்றத்துடன்...
ஞாயிறு, 15 ஜனவரி, 2023
தொழிற்பெயர்களும் முழுப்பெயர்களும் ஒன்றுதானா?
தொழிற்பெயர்களும் முழுப்பெயர்களும் ஒன்றுதானா?------------------------------------------------------------------------------------------------------------------- ஐயா, ஒரு ஐயம்! ஒரு சொல் பெயர்ச்சொல்லாக இருந்தால் அதற்குப்பின்னர் வேற்றுமை விகுதிகளை இணைக்கலாம்; அதற்கு முன்னர் பெயரடையையும் நிறுத்தலாம். எ-கா. 'அழகான வீட்டை' . பன்மை விகுதியை இணைக்கலாம். - 'வீடுகள்'.வினைச்சொல்லாக இருந்தால் அதற்குப் பின்னர் காலவிகுதிகளை இணைக்கலாம்; அதற்கு முன்னர் வினையடையையும் நிறுத்தலாம்.எ-கா. 'அழகாகக் கட்டியுள்ளான்'.வினைச்சொல்லிருந்து முழுப்பெயர் உருவாகலாம். 'படி' -> படிப்பு.ஆனால் இவை இரண்டுக்கும் இடையில் இன்னொரு வகை இருக்கிறது. 'படித்தல்' (இன்றைய தமிழில் படிப்பது, படித்தது, படிப்பது ஆகியவையும் அடங்கும். ) இவற்றுடன் பின்னர் வேற்றுமை விகுதிகளை இணைக்கலாம்; அதனால் பெயர்ச்சொல் தன்மை பெறுகிறது. முன்னர் வினையடைகளை...
ஒவ்வொரு சொல்லுக்கும்பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது!
ஒவ்வொரு சொல்லுக்கும்பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது!--------------------------------------------------------------------------------------------------------தமிழ்நாடு ! தமிழகம் !தற்போதைய தமிழக அரசியல் சூழலில் . . . ஒருவரைப் பார்த்து . . . ''நீங்கள் 'தமிழ்நாடா' அல்லது 'தமிழகமா' என்று கேட்டாலே போதும் . . . அவர் எந்த அரசியல் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்! இனி . . . தமிழ்நாட்டில் இந்த இரண்டு சொற்களும் மரபுத்தொடர்கள்போன்று அமைந்துவிடும்!'அவர் என்ன பெரிய அரிச்சந்திரனா?''அவள் என்ன பெரிய சீதையா?''அவர் என்ன பெரிய ராமனா?''அவள் என்ன பெரிய சீதையா?''அங்கே மதுரையா, சிதம்பரமா?''அவர் என்ன தமிழ்நாடா?''அவர் என்ன தமிழகமா?'இனி ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இத்தொடர்களைப் பயன்படுத்துவார்கள்! எதேச்சையாக ஒருவர் இந்த இரண்டில் ஒன்றைப் பயன்படுத்தினாலும் . . . அவரைப்பற்றி மற்றவர்கள் 'முடிவுக்கு' வந்துவிடுவார்கள்!...
தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் மேலாண்மையை எவ்வாறு நிலைநாட்டுவது?
தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் மேலாண்மையை எவ்வாறு நிலைநாட்டுவது?--------------------------------------------------------------------------தமிழ்நாட்டில் அனைத்து நிறுவனங்களும் அங்காடிகளும் தங்களது பெயர்ப்பலகையில் பெயர்களைத் தமிழில் பெரிய எழுத்தில் எழுதவேண்டும்; அதற்கு அடுத்த நிலையில்தான் ஆங்கிலமோ பிறமொழிகளோ இடம்பெறவேண்டும் என்று தமிழ்நாட்டில் சட்டம் இருப்பதுபோல ...அவற்றின் உள்ளேயும் இடம்பெறுகின்ற பெயர்ப்பலகைகளில் தமிழ் முதல் இடத்தைப்பெறவேண்டும்; அதற்குப்பின்னர் மற்ற மொழிகள் இடம்பெறவேண்டும் என்று சட்டம் இயற்றப்படவேண்டும். மீறுகின்றவற்றிற்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.மேலும் தமிழுக்கு உரிய முன்னுரிமை கொடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படலாம்.இவ்வாறுதான் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என்பதை நிறுவவேண்டும். பயிற்றுமொழி, வணிகமொழி, நிர்வாகமொழி,...
காய்கனிக் கடையில் ஆங்கிலம் . . . ஆங்கிலம் மட்டுமே! தமிழுக்கு இடம் இல்லை!
காய்கனிக் கடையில் ஆங்கிலம் . . . ஆங்கிலம் மட்டுமே! தமிழுக்கு இடம் இல்லை! ------------------------------------------------------------------------------------------------------------------அடையாறில் உள்ள ஒரு காய்கனிக்கடையில் - ''பழமுதிர்ச்சோலையில்'' - சிறுகிழங்கு, சேனைக்கிழங்கு இரண்டையும் வாங்குவதற்காகச் சென்றேன். பொதுவாக, இந்த இரண்டு கிழங்குகளும் சென்னையில் அவ்வளவாகத் தெரியாது. பொங்கலையொட்டிச் சில கடைகளில் கிடைக்கிறது.இந்தக் கிழங்குகளைத் தேடும்போது, சரியாக அடையாளம் காணமுடியவில்லை. அளவுத் தோற்றம் குழப்பத்தைக் கொடுத்தது! அவற்றின் மேல் உள்ள பெயர்ப்பலகைகளைப் பார்த்தால், பெயர்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. எனக்கு அவற்றின் ஆங்கிலப்பெயர்கள் தெரியாது. என்ன செய்வது?பற்றுச்சீட்டு போடுகிற பெண்மணியிடம் கேட்டேன். அவர் இதுதான் சிறுகிழங்கு, இதுதான் சேனைக்கிழங்கு என்று சொன்னார்கள். எனவே...