ஞாயிறு, 15 ஜனவரி, 2023

ஒவ்வொரு சொல்லுக்கும்பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது!

 ஒவ்வொரு சொல்லுக்கும்பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்து கொண்டிருக்கிறது!

--------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு ! தமிழகம் !
தற்போதைய தமிழக அரசியல் சூழலில் . . .
ஒருவரைப் பார்த்து . . . ''நீங்கள் 'தமிழ்நாடா' அல்லது 'தமிழகமா' என்று கேட்டாலே போதும் . . . அவர் எந்த அரசியல் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்!
இனி . . . தமிழ்நாட்டில் இந்த இரண்டு சொற்களும் மரபுத்தொடர்கள்போன்று அமைந்துவிடும்!
'அவர் என்ன பெரிய அரிச்சந்திரனா?'
'அவள் என்ன பெரிய சீதையா?'
'அவர் என்ன பெரிய ராமனா?'
'அவள் என்ன பெரிய சீதையா?'
'அங்கே மதுரையா, சிதம்பரமா?'
'அவர் என்ன தமிழ்நாடா?'
'அவர் என்ன தமிழகமா?'
இனி ஒவ்வொருவரும் மிகக் கவனமாக இத்தொடர்களைப் பயன்படுத்துவார்கள்! எதேச்சையாக ஒருவர் இந்த இரண்டில் ஒன்றைப் பயன்படுத்தினாலும் . . . அவரைப்பற்றி மற்றவர்கள் 'முடிவுக்கு' வந்துவிடுவார்கள்! சிக்கலாக ஆகிவிடும்!
கவனம் தேவை! இவற்றை வெறும் 'சொற்கள்தானே' என்று நினைத்துவிடமுடியாது! பெரிய 'அரசியலே' இவற்றின்பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India