மொழியியல் துறையில் பயன்படுத்தும் கலைச்சொற்கள் ஆங்கிலமொழியின் அடிப்படையில் அமைந்ததா? ஒரு ஐயத்திற்கு விடை ...---------------------------------------------------------------------------------------------------------------------------மொழியியல் கோட்பாடுகள் ''ஆங்கிலமொழிக்கான கோட்பாடுகள்'' என்ற ஒரு தவறான கருத்தை அகற்றத் தொடர்ந்து நான் பதிவிட்டுவருகிறேன். எந்தவொரு அறிவியல் கோட்பாடும் குறிப்பிட்ட மொழி சார்ந்தது இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். அதுபோன்றே மொழியியல் துறையின் கோட்பாடுகளும்!அடுத்து, ஒரு ஐயம் நண்பர்களிடையே நிலவுகிறது. ''மொழியியல் துறையின் கலைச்சொல்லாக்கங்கள் ஆங்கிலத்தில் நிலவும் கலைச்சொற்களின் மொழிபெயர்ப்புக்களே! ஏன் அவற்றைத் தமிழ் இலக்கணங்களில் பயன்படுத்துகிற கலைச்சொற்களைக்கொண்டு பயன்படுத்தக்கூடாது?''நியாயமான ஒரு கருத்துத்தான்! ஆனால் இவ்விடத்தில் ஒரு உண்மையை நாம் காணவேண்டும்....
திங்கள், 21 மார்ச், 2022
ஞாயிறு, 20 மார்ச், 2022
தொல்காப்பியர், பவணந்தியார் போன்ற இலக்கண ஆசிரியர்களுக்கும் ... மொழியியல் அறிஞர்களுக்கும் .. பிற அறிவியல் துறைகளின் அறிவியலாளர்களுக்கும் இடையிலான ஒற்றுமை...
தொல்காப்பியர், பவணந்தியார் போன்ற இலக்கண ஆசிரியர்களுக்கும் ... மொழியியல் அறிஞர்களுக்கும் .. பிற அறிவியல் துறைகளின் அறிவியலாளர்களுக்கும் இடையிலான ஒற்றுமை...--------------------------------------------------------------------------------------------------------------------------இலக்கணமும் மொழியியலும் அறிவியல் துறைகள் என்பதே எனது நிலைபாடு. ஏன்? ஒரு இயற்பியல் அறிவியலாளர் என்ன செய்கிறார்? உலகில் உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டிலுமே உள்ளடங்கியுள்ள இயற்பியல் பண்புகளைக் கண்டறிய முயல்கிறார். ஒரு குறிப்பிட்ட இயற்பியல் பண்பு உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் - உயிருள்ள, உயிரற்ற பொருள்களிலும் - இருக்கிறது என்று கொள்வோம். அந்த இயற்பியல் பண்பை அல்லது இயற்பியல் இயக்கத்தைப் பொதுமைப்படுத்தி, அதற்குப் பின்னால் இயங்குகிற புறவய விதிகளை எடுத்து முன்வைக்கிறார். கணிதத்தின்மூலமாகவோ அல்லது வேறு துறைகளின்...
சனி, 19 மார்ச், 2022
சோசலிசப் புரட்சிகளின் பின்னடைவுகளும் ரசியா - உக்ரைன் போரும் ...
சோசலிசப் புரட்சிகளின் பின்னடைவுகளும் ரசியா - உக்ரைன் போரும் ... ------------------------------------------------------------------------------------------------------------------------பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சுரண்டும் ஆளும் வர்க்கங்கள் - சுரண்டப்படும் ஆளப்படுகிற வர்க்கங்கள் என்ற வர்க்க அடிப்படையில் நீடித்துவந்த மனித சமுதாயம்... தனது வளர்ச்சிப்போக்கில் ... குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் ... முதலாளித்துவ சமுதாயமாக மாற்றத்தையும் வளர்ச்சியையும் பெற்றது. மனித சமுதாயத்தின் இந்தப் புறவயமான வளர்ச்சிகளை மிகத் தெளிவான, அறிவியல்பூர்வமான ஆய்வுமுறைகளைக்கொண்டு ஆய்வு செய்த காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் ... இந்த முதலாளித்துவ வளர்ச்சியானது...
மக்கள் ஆட்சி ... பாட்டாளி மக்கள் ஆட்சி ...
மக்கள் ஆட்சி ... பாட்டாளி மக்கள் ஆட்சி ...--------------------------------------------------------------------------(சமூக மாற்றத்தில் நம்பிக்கை உள்ள அன்பர்கள் நேரம் கிடைக்கும்போது இதைப் படிக்கலாம்!) திரு செயபாண்டியன் கோட்டாளம்:// மக்களாட்சிக்கும் பாட்டாளிமக்களாட்சிக்கும் என்ன வேறுபாடு? பாட்டாளிமக்கள் மக்களல்லரோ?//ந. தெய்வ சுந்தரம்:மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் ஒரு உயர்ந்த கட்டம் முதலாளித்துவ சமுதாயம். அச்சமுதாயத்தில் முதலாளி வர்க்கம் ஒருபுறமும் பாட்டாளி - தொழிலாளி வர்க்கம் மறுபுறமும் நிற்கின்றன. முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் பிற சுரண்டும் வர்க்கங்களும் - நிலப்பிரபுத்துவ சக்திகளும் - ஒரு புறம் திரண்டு நிற்கின்றன. இந்தப் பிற சுரண்டும் வர்க்கங்கள் முதலாளித்துவம் ( உற்பத்தி சக்திகள்- productive forces - முழுமையாகச் சமூகமயப் - படுத்தப்படப் பட socilaised productive forces - socialised...
சமூக அறிவியலுக்கும் பிற இயற்கை அறிவியல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு....
சமூக அறிவியலுக்கும் பிற இயற்கை அறிவியல்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு....---------------------------------------------------------------------------------------------------------------------------இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல்களின் பயன்பாடுகளை முதலாளித்துவ சக்திகள் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த அறிவியல்களின் கண்டுபிடிப்புகள் வர்க்க நலன்களைக் கொண்டதாக இருக்காது. அதாவது வர்க்கப் பண்புகள் இருக்காது. இயற்கைவிதிகளின் கண்டுபிடிப்புகள் எல்லாம் அனைவருக்கும் - வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு- பயன்படும்.ஆனால் சமூக அறிவியல், இலக்கியம் ஆகியவற்றில் - தத்துவம், அரசியல் , பொருளாதாரம், சமூகவியல், மானிடவியல்,...
இடைத்தட்டு வர்க்கச் சிந்தனையாளர்களின் மார்க்சிய எதிர்ப்பு.....
இடைத்தட்டு வர்க்கச் சிந்தனையாளர்களின் மார்க்சிய எதிர்ப்பு.....------------------------------------------------------------------------------------------------------------------------இயற்கை அறிவியல்களையும் சமயத் தத்துவங்களையும் முதலாளித்துவ சமூகக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்கிற நண்பர்கள் சிலர்.... சமூகம்பற்றிய அறிவியலை - குறிப்பாக மார்க்ஸ். எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் போன்றோரின் சமூக அறிவியலை - ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றுதான். ஆளும் சுரண்டும் வர்க்கங்கள் ஏற்றுக்கொள்ள- மாட்டார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இடைத்தட்டு வர்க்கங்களைச் சேர்ந்த சிலர் - குறிப்பாக மூளை உழைப்பைச் சார்ந்த இடைத்தட்டு வர்க்கப்...