ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

சாதி அடிப்படையிலான . . . வர்க்க அடிப்படையிலான 'ஆணவக்கொலைகளுக்கு' இன்றைய தீர்வு . . .

 சாதி அடிப்படையிலான . . . வர்க்க அடிப்படையிலான 'ஆணவக்கொலைகளுக்கு' இன்றைய தீர்வு . . .

-------------------------------------------------------------------------
ஆணவக்கொலைகளைத் தடுத்துநிறுத்த தனிச்சட்டம் தேவை என்று கூறப்படுகிறது. தனிச்சட்டம் வரட்டும்! வரவேற்போம்!
ஆனால் இன்றைய சூழலில் அச்சட்டத்தினால் பெரிதாக எந்த மாற்றைத்தையும் கொண்டுவந்துவிடமுடியாது! ஆதிக்க சாதியினர் பலவகைகளில் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்புகள் உண்டு!
மாறாக, கிராமப்புறங்களில் சமுதாய உணர்வுடைய (சாதி உணர்வு இல்லை!) மேல்சாதியின இளைஞர்கள் . . . தலீத் மக்களின்மீதான வன்முறைகளை . . . ஆணவக்கொலைகளை . . . தடுத்துநிறுத்த ஒன்றுதிரளவேண்டும்! தலீத் மக்களின் போராட்டங்களுக்கு மேல்சாதியின இளைஞர்களே தலைமைதாங்கவேண்டும்! இவர்களைப் பயன்படுத்தித்தான் மேல்சாதியினரின் மேல்தட்டு வர்க்கங்கள் தங்கள் 'தலீத் எதிர்ப்பு ' ( வர்க்க உள்நோக்கத்துடன்) நடவடிக்கைகளைச் செயல்படுத்துகின்றனர். இது தடுத்துநிறுத்தப்பட வேண்டும்!
இதுபோன்ற செயல்பாடுகள் கிராமப்புறங்களில் பெருகவேண்டும். இதுவே இன்று மேற்கொள்ளக்கூடிய வழிமுறை!
ஆனால் இது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழலாம்! சாத்தியமாக்க வேண்டும்! வேறு வழி இல்லை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India