சனி, 9 டிசம்பர், 2023

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னையில் உங்களுக்குத் தெரிந்த ஊர்கள் . . . அடிப்படைக் காரணங்கள்!

 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னையில் உங்களுக்குத் தெரிந்த ஊர்கள் . . . அடிப்படைக் காரணங்கள்!

-----------------------------------------------------------------------------------------------------
முதற்பட்டியல் (நீண்ட கால வரலாறு உடையவை) : மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வேப்பேரி, பாரிமுனை, அடையாறு, திருவான்மியூர், எழும்பூர், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, மாதவரம், எர்ணாவூர், புழல், ராயபுரம், புளியந்தோப்பு, பெரம்பூர், சூளை, பட்டாளம்
இரண்டாம் பட்டியல் (இடைக்கால வரலாறு உடையவை) : வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெரும்பாக்கம், மாம்பாக்கம், ஒட்டியம்பாக்கம், கொளப்பாக்கம், பள்ளிக்கரணை, முகலிவாக்கம், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, கோவிலம்பாக்கம், மணலி, மாதவரம், திருவேற்காடு, கொரட்டூர், முடிச்சூர், மண்ணிவாக்கம், கண்ணம்பாளையம், கொடுங்கையூர்
மூன்றாம் பட்டியல் (''நவீன நகர்கள்'') : சுண்ணாம்புக் குளத்தூர், அரசன்கழனி, பாலகிருஷ்ணாபுரம், சமத்துவ பெரியார்நகர், வரதராஜபுரம், பரத்வாஜ்நகர், கிருஷ்ணாநகர், மணிமங்கலம், லட்சுமிநகர், வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், வடகரை.
மூன்றாம் பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருப்பதால், சிலவற்றுடன் நிறுத்திக்கொள்கிறேன்.
மூன்று பட்டியல்களிலும் உள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவை. மூன்றாம் பட்டியல் விரிய விரிய . . . முதல் பட்டியலிலும் இரண்டாம் பட்டியலிலும் உள்ள பாதிக்கப்பட்ட ஊர்களின் (மூன்றாம் பட்டியல் ஊர்களோடு சேர்ந்து) எண்ணிக்கை அதிகரிக்கும்.
அதாவது நேர் விகிதத்தில் அதிகரிப்பு!
மூன்றாம் பட்டியலில் உள்ள பகுதிகள் 1970-க்குமுன் இருந்திருக்காது எனக் கருதுகிறேன்.
நான்காவது பட்டியல் ஒன்று உண்டு . . . அதுதான் ''கல்வித் தந்தைகளின்'' ஏழைகளுக்கான ''கல்வி நிலையங்கள்''! பெயர்களை இங்குக் குறிப்பிட விரும்பவில்லை. குறிப்பிட்டால் ''மான நஷ்ட வழக்குகள்'' போட்டுவிடுவார்கள்!
மூன்றாம், நான்காம் பட்டியல்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் ஏரிகளிலும், குளங்களிலும் , நீர் வரத்து, நீர்த் தேக்கம் பகுதிகளிலுந்தான் உருவாக்கப்- பட்டிருக்கின்றன! இதற்கு இனியாவது மாற்று ஏற்பாடுகள் செய்யமுடியுமா? விரிவாக்கத்தைத் தடுக்கமுடியுமா? அடுத்து, ஏற்கனவே அங்கு இருக்கிற மக்களுக்கு வேறு என்ன மாற்று ஏற்பாடு - வெள்ளத்தைச் சமாளிக்க - செய்துகொடுக்கமுடியும்? இதற்குத் தெளிவான திட்டங்கள் தேவை!
முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல் ஆகியவற்றிலும் பிரச்சினை இருக்கிறது. புதிய பல மாடிக் கட்டிடங்கள் . . . 10, மாடிகள், 15 மாடிகள் கட்டிடங்கள்! அவற்றிற்குத் தண்ணீர் . . . கழிவுநீர் வெளியேற்றம், மின்சாரம் ஆகிய தேவைகளை . . . ஏற்கனவே இருக்கிற அந்தப் பகுதிகளின் வீடுகள்தான் பகிர்ந்தளிக்கவேண்டும்! முக்கியமாக, கழிவுநீர் வெளியேற்றம்! இது கடந்த 50 ஆண்டுகளில் எந்தவகையிலும் முன்னேறவில்லை . . . நவீனப்படுத்தப்படவில்லை! அப்படியென்றால், இந்தப் பகுதிகளும் பாதிக்கப்படத்தானே செய்யும்!
ஆக, மொத்தத்தில் . . . தண்ணீர் வரத்துப் பகுதி, தேக்கப்பகுதிகளில் வீடுகள் விரிவாக்கம் . . . ஏரிகள், குளங்கள் மாயமாக மறைதல் . . . நீர் மேலாண்மை புறக்கணிப்பு . . . அடுக்குமாடிக்கட்டிடங்களின் அதிகரிப்பு! இவைதான் இன்றைய பாதிப்புக்களுக்குக் காரணங்கள்!
மேலும் . . . விரிவடையும் சென்னை மக்கள் தொகைக்கு .... வீட்டு வசதி எவ்வாறு அளிப்பது? அடையாறில் 2 கோடிக்குக் குறைந்து . . . இரண்டு படுக்கை அறைகள்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பே கிடைக்காது! இடைத்தட்டு, அடித்தட்டு மக்கள் எவ்வாறு சொந்த வீடு பெறுவது? ஒரு கிரவுண்ட் மனை 5 கோடி! எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது?
மேற்கூறியவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் . . . வெள்ளப்பாதிப்பு ஏற்படும்போதுமட்டும் படகுகளும், ரொட்டிகளும், குடிநீரும் கொடுத்துப் பயன் இல்லை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India