சனி, 9 டிசம்பர், 2023

சென்னை வெள்ளப்பாதிப்பிற்கு நிரந்தரத் தீர்வு !

 சென்னை வெள்ளப்பாதிப்பிற்கு நிரந்தரத் தீர்வு !

----------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை வெள்ளப்பாதிப்புக்கு இனி யாராலும் நிரந்தரத் தீர்வைத் தரமுடியாது.
"இறந்தவர் மீண்டும் வரமுடியாது; ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கவும் முடியாது!''
வேண்டுமென்றால் . . . ஆங்காங்கே படகு நிலையம், மக்களைத் தங்கவைப்பதற்கான இல்லங்கள் (Community halls) போன்றவற்றை அமைக்கலாம். அனைவருக்கும் கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்கலாம். அனைவருக்கும் உயிர்காக்கும் ரப்பர் வளையம் அளிக்கலாம்.
அல்லது ஆங்காங்கே பெரிய சுரங்கங்கள் அமைத்து, அதன்வழியே மழைத்தண்ணீரை, சென்னைக்கு வெளியே தற்போது இருக்கிற வெற்று நிலங்களில் (இருந்தால்!!!) புதிய புதிய அணைக்கட்டுக்களைக் கட்டி, அவற்றில் தேக்கிவைக்கலாம். இதன்மூலம் தண்ணீர் பிரச்சினையையும் தீர்க்கலாம்.
இதற்கு வேண்டிய நிதியைத் தண்ணீர் போக்கு, தண்ணீர் பிடிப்புப் பகுதிகளில் பலமாடிக் கட்டிடங்களைக் கட்டியுள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களிடமும், ஆங்காங்கே பிரம்மாண்டமான கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் கட்டியுள்ள ''கல்வித் தந்தைகளிடம்'' வசூலிக்கலாம்.
சீனாவில் ஒரு வெள்ளப் பகுதியிலிருந்து தண்ணீரை . . . தண்ணீர் இல்லாத மற்றொரு பகுதிக்குக் கொண்டு சென்று தேக்கிவைக்க . . . பாலம் கட்டிச் செயல்படுத்தினார்கள் ! எனவே அதுபோன்று இங்கும் சிந்திக்கலாம்! சீனாவில் பாலம்! இங்குச் சுரங்கம்! நமது '' ஐ ஐ டி'' காரர்களிடம் கேட்டால், இதை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை அளிப்பார்கள்!
இன்னொரு திட்டமும் இருக்கிறது! தொங்கு தோட்டம்மாதிரி, தொங்கு வீடுகள்! அடித்தளம், முதல் தளம் இரண்டையும் தூண்களாக வைத்துக்கொண்டு, மேலே வீடுகளைக் கட்டலாம். தரை வீடுகளே இருக்கக்கூடாது!
இதை நான் கேலிக்காகவோ கிண்டலுக்காகவோ எழுதவில்லை. இது ஒன்றே தற்போதைய நிலையில் மக்களின் இன்னல்களைத் துடைக்க ஒரே வழி!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India