சனி, 2 செப்டம்பர், 2023

தமிழ் இலக்கணத்தின் கணிதப் பண்பு

 

1) 

--------------------------------------------------------------------------------------------------------------------------

வினைகளின் வினைத்திரிபு வகைப்பாட்டுக்கும் (தமிழ் லெக்சிகன் - சென்னைப் பல்கலைக்கழகம் வெளியீடு) அவற்றிலிருந்து பிறக்கும் பெயர்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது. இது ஒரு வியப்பான தமிழ் இலக்கண இயல்பு.

இதுபற்றிய தெளிவை எனக்கு அளித்தவர் என் நண்பர் கணிப்பொறியியலாளர் திரு. சரவணன் . இதுபற்றிய ஆய்வைத் தொடர்ந்துவருகிறோம். கணினிக்கேற்ற மொழி தமிழ்மொழி என்பதை எடுத்துக்காட்டி நிற்கும் வினைத்திரிபு வகைப்பாடு.

2-ஆவது, 3-ஆவது வகைகள் 'ச்சி' எடுக்கும் (ஆள் - ஆட்சி; முயல் - முயற்சி)

4- ஆவது வினை பொதுவாக 'வு' எடுக்கும் ( அறி - அறிவு; அசை - அசைவு; ஆய் - ஆய்வு ) ; சில வினைகள் -ச்சி -யும் எடுக்கும். 'மகிழ்ச்சி' 'மகிழ்வு' ; தேர் - தேர்வு, தேர்ச்சி.

5-ஆவது வகை 'அம்' எடுக்கும். ( ஆக்கு - ஆக்கம்; நீக்கு - நீக்கம்)

9-ஆவது வினைவகை 'ப்பு' எடுக்கும் (கேள் - கேள்ப்பு - கேட்பு )

10 -ஆவது வினை வகை 'ப்பு' எடுக்கும் (கல் - கல்ப்பு - கற்பு )

11 - ஆவது வகை 'ப்பு' எடுக்கும் (படி - படிப்பு; நடி - நடிப்பு; ) 'பார்' என்பது 'பார்வை' என்று 'வை' எடுத்தாலும், 'எதிர்பார்' என்பதில் 'எதிர்பார்ப்பு' என்று வருகிறது.

12- ஆவது வகை 'ப்பு' எடுக்கும். (திற - திறப்பு ; சிவ - சிவப்பு). ஆனால் ' திற என்பது 'திறவுகோல்' என்பதில் 'வு' எடுக்கிறது. 'துற - துறவு ' என்பதிலும் 'வு' வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India