சனி, 22 ஏப்ரல், 2023

பேச்சுத்தமிழ் இலக்கணம் ஆராயப்படவேண்டாமா?

 பேச்சுத்தமிழின் இலக்கணம் ஆராயப்பட்டு, எழுதப்படத் தேவை இல்லையா?

------------------------------------------------------------------------------------------------------------
பேச்சுத்தமிழின் இயல்பை - இயங்கியலை - ஆராய்ந்து தெரிந்துகொள்வதில் என்ன தவறு? தாங்கள் (நண்பர் வேல்முருகன் சுப்பிரமணியன்) கூறுகிற ''அடிபிடி'' எப்போது நடக்கும்? ஒருவர் தன்னுடைய வட்டார வழக்கையே பொதுவான பேச்சுத்தமிழ் என்று கொள்ளும்போதுதான் இதுபோன்ற 'அடிபிடி' நடக்கும்.
எழுத்துத்தமிழில் இந்த அடிபிடி இல்லையா? 'வாழ்த்துக்கள் ' சரியா அல்லது 'வாழ்த்துகள்' சரியா என்பதுபோன்ற 'அடிபிடிகள்' இங்கு இல்லையா? 'ஆசிரியர் அவர்கள் வந்தார்' - சரியா அல்லது 'ஆசிரியர் அவர்கள் வந்தார்கள்' சரியா என்ற 'அடிபிடி' இல்லையா?
தமிழர்கள் எழுத்துத்தமிழைக் 'கற்றுக்கொள்வதால்' எழுத்துத்தமிழ் இலக்கணநூல்கள் தேவைப்படுகிறது! ஆனால் பேச்சுத்தமிழைக் குழந்தைகள் 'இயற்கையாகப் ' பெற்றுக்கொள்வதால், பேச்சுத்தமிழைக் கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை! எனவே தமிழர்கள் 'பேச்சுத்தமிழைப்' பெற்றுக்கொள்ள , பேச்சுத்தமிழ் இலக்கண நூல்கள் தேவை இல்லை.
ஆனால் பேச்சுத்தமிழின் இயல்பைப் புரிந்து கொள்வதற்கும் அதற்கும் எழுத்துத்தமிழுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ளவும், பேச்சுத்தமிழ் இலக்கணத்தை ஆராய்ந்து எழுதவேண்டாமா?
மேலும் தமிழரல்லாதவர்கள் தங்களது தேவைகளுக்காகப் பேச்சுத்தமிழை 'முறைசார் கற்றல் அல்லது கற்பித்தல்' மூலமாகக் கற்றுக்கொள்வதற்குப் பேச்சுத்தமிழ் இலக்கணம் எடுத்து எழுதப்படவேண்டாமா? எனவேதான் பேச்சுத்தமிழின் அமைப்பை, இலக்கணத்தை, ஆராய்ந்து எழுதப்படவேண்டும்.
இலக்கணத்தை நாம் உருவாக்கவில்லை. கண்டுபிடிக்கப்படுகிறது. பேச்சுத்தமிழின் இலக்கணத்தை நாம் உருவாக்கவில்லை! இலக்கண நூல்களைத்தான் உருவாக்கிறோம்! அவ்வளவுதான்! இதில் 'அடிபிடி' சிக்கல்களுக்கு எங்கே இடம்?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India