சனி, 22 ஏப்ரல், 2023

 தமிழ்ச்சொல்லாக்கத்தில் கணித அடிப்படை விதிகள்( தமிழ்மொழி ஆய்வாளர்களின் கவனத்திற்கு - நேரம் கிடைக்கும்போது படித்துக் கருத்து கூறவும்) -------------------------------------------------------------------------ஒரு பொருள் அல்லது இயக்கத்தை அறிவியல் அடிப்படையில் ஆராயும்போது . . . அறிவியலாளர்கள் அவற்றின் உள்ளார்ந்த விதிகளைப் புறவயமாகக் கண்டறிகிறார்கள். விதிகள் புறவயமான விதிகளாக இருந்தால்தான் - அதாவது தனிநபர் விருப்பு வெறுப்பை அடிப்படையாகக்கொள்ளாமல் இருந்தால்தான் - அந்த விதிகள் அறிவியல் விதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதாவது கணித அடிப்படையில் அவை இருத்தல்வேண்டும்.இங்குக் குறிப்பாக நினைவில் கொள்ளவேண்டியது . . . விதிகள் உருவாக்கப்படுவதில்லை; மாறாக,...

பேச்சுத்தமிழ் இலக்கணம் ஆராயப்படவேண்டாமா?

 பேச்சுத்தமிழின் இலக்கணம் ஆராயப்பட்டு, எழுதப்படத் தேவை இல்லையா?------------------------------------------------------------------------------------------------------------பேச்சுத்தமிழின் இயல்பை - இயங்கியலை - ஆராய்ந்து தெரிந்துகொள்வதில் என்ன தவறு? தாங்கள் (நண்பர் வேல்முருகன் சுப்பிரமணியன்) கூறுகிற ''அடிபிடி'' எப்போது நடக்கும்? ஒருவர் தன்னுடைய வட்டார வழக்கையே பொதுவான பேச்சுத்தமிழ் என்று கொள்ளும்போதுதான் இதுபோன்ற 'அடிபிடி' நடக்கும். எழுத்துத்தமிழில் இந்த அடிபிடி இல்லையா? 'வாழ்த்துக்கள் ' சரியா அல்லது 'வாழ்த்துகள்' சரியா என்பதுபோன்ற 'அடிபிடிகள்' இங்கு இல்லையா? 'ஆசிரியர் அவர்கள் வந்தார்' - சரியா அல்லது 'ஆசிரியர் அவர்கள் வந்தார்கள்' சரியா என்ற 'அடிபிடி' இல்லையா?தமிழர்கள் எழுத்துத்தமிழைக் 'கற்றுக்கொள்வதால்' எழுத்துத்தமிழ் இலக்கணநூல்கள் தேவைப்படுகிறது! ஆனால் பேச்சுத்தமிழைக் குழந்தைகள் 'இயற்கையாகப்...

வட்டார வழக்கும் பேச்சு வழக்கும்!

 (1) வட்டார வழக்குகளின் மறைவும் பொதுப்பேச்சுத்தமிழின் வளர்ச்சியும்--------------------------------------------------------------------------------------------------------------------------வட்டார வழக்குகளுக்கே உரிய சில கூறுகள், பேசுபவரின் வேகம். மன உணர்வு ஆகியவற்றைப்பொறுத்து ஒருவரின் பேச்சில் சில பேச்சொலிகள் மறையலாம். ஆனால் இதைப் பொதுமைப்படுத்தக்கூடாது. என்னைப்பொறுத்தவரையில் இன்றைய தலைமுறையிலேயே வட்டார வழக்குக்கூறுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருகின்றன. எதிர்காலத் தலைமுறைகளில் உறுதியாக இந்த வட்டார வழக்கு, சாதி வழக்கு போன்றவை மறைந்துவிடுமெனக் கருதுகிறேன். சமுதாய வளர்ச்சியில் இது தானாக நடைபெறும். மேலிருந்து திணிப்பது இல்லை இது. அதுபோன்று இதை யாராலும் தடைசெய்யவும் முடியாது.கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், பொருள் உற்பத்தி ஆலைகளில் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India