செவ்வாய், 28 ஜூலை, 2020

பேராசிரியர் ப. குமார்

பேராசிரியர் ப. குமார்..... திருவாரூரில் அமைந்துள்ள நடுவண் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர். என்னுடைய சிறந்த மாணவர்களில் ஒருவர். உழைப்பால் உயர்ந்த ஒருவர். தமிழ், மொழியியல் இரண்டிலும் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டுவருபவர். சமூக உணர்வு உடையவர். பழகுவதற்கு இனிமையானவர்... எளிமையானவர். அவர் பணி சிறக்க எனது வாழ்த்துகள். முனைவர் ப. குமார் (1976) … தமிழாய்வுலகில் இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர். செயலாற்றல் மிகுந்த ஒரு ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் தமிழில் முதுகலைப் பட்டம் (2000), ஆய்வியல் நிறைஞர் பட்டம் (2001) முனைவர் பட்டம் (2008) ஆகியவற்றைப் பெற்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்...

ஞாயிறு, 26 ஜூலை, 2020

மார்க்சியப் புரிதலின் முக்கியக் கூறுகள் ......

மார்க்சியப் புரிதலின் முக்கியக் கூறுகள் ...... ------------------------------------------------------------------------- 1) இயற்கையும் சமுதாயமும், இவற்றைப்பற்றிய நமது கருத்துகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே... வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். இந்த மாற்றமானது வெறும் மாற்றமாக இல்லாமல்.... அடுத்த கட்ட வளர்ச்சியாக ... பண்புரீதியான மாற்றமாக .... வெறும் வட்டமாகச் சுற்றாமல் (cyclic) , பல்வேறு உயர்நிலை வட்டங்களைக்கொண்ட சுருள் வட்டமாக (spiral) அமையும். 2) ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வளர்ச்சிக்கு (குறிப்பாகப் பொருளாதார வளர்ச்சிக்கு) அடிப்படையாக இருந்த அதே சமுதாயப் பொருளாதார உறவுகள் அல்லது கட்டமைப்புகள் , பின்னர் ஒரு கட்டத்தில் அச்சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் தடையாக மாறும். அந்நேரத்தில் அதற்கு அடுத்த கட்ட மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடைகளாக அமைகிற அந்தச் சமுதாய உறவுகள் மாறவேண்டும்....

சனி, 25 ஜூலை, 2020

மார்க்சியம் பொய்த்துவிட்டதா? பொதுவுடமை தோற்றுவிட்டதா?

மார்க்சியம் பொய்த்துவிட்டதா? பொதுவுடமை தோற்றுவிட்டதா? --------------------------------------------------------------------------.................................................................. '' ரசியாவில் கம்யூனிசம் தோல்வி'' , ''சீனாவில் கம்யூனிசம் தோல்வி'' ''இன்று உலகில் எங்குமே கம்யூனிச நாடுகள் கிடையாது'' ..... காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் முன்வைத்த சோசலிச, கம்யூனிச சமுதாயம் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று '' என்ற குரல் பல முனைகளில் ''ஒலிக்கப்பட்டு வருகிறது''! இந்தக் குரலை எழுப்புவர்கள் யார்? அதற்கான பின்னணி என்ன? இலட்சக்கணக்கான உயிர்த்தியாகங்களால் உருவாக்கப்பட்ட சோசலிச சமுதாயங்கள் பாதிப்புக்கு உட்பட்டு இருக்கிறதே என்று வருத்தப்படுபவர்களா? அல்லது ''அப்பாடி , இனி நமக்கு ஆபத்து இல்லை என்று பெருமூச்சு விடும் '' சக்திகளா? ஒரு நாடு தன்னுடைய விண்வெளி ஆராய்ச்சியில்...

வெள்ளி, 24 ஜூலை, 2020

''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' - தேன் தடவிய ஒரு தோட்டா!

''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' - தேன் தடவிய ஒரு தோட்டா! -------------------------------------------------------------------------- ''மண்ணுக்கேற்ற மார்க்சியம்'' என்ற ஒரு தொடர் சிலரால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் தங்களை '' மார்க்சியவாதிகள்'' என்று கூறிக்கொண்டேதான் இந்த முழக்கத்தை முன்வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் முன்வைக்கிற வாதங்களில் மிக முக்கியமான இரண்டு கருத்துகள் - (1) உலகில் அனைத்தும் மாறக்கூடியதே. அனைத்தும் மாற்றத்திற்கும் உட்பட்டது என்று கூறுகிற விதியைத் தவிர, பிற விதிகள் அனைத்தும் மாறக்கூடியதே. இதுவே மார்க்சியத்தின் அடிப்படைக்கொள்கை. எனவே மார்க்சியமும் மாற்றத்திற்கு உட்பட்டதே. (2) மார்க்சியத்தின் அடிப்படையே சமுதாயம் மாற மாற, வேறுபட வேறுபட, அச்சமுதாயங்களைபற்றிய மார்க்சிய முடிவுகளும் மாறுகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய முதலாளித்துவச் சமுதாயத்தின் பண்புகள்பற்றிய மார்க்சின் ''...

செவ்வாய், 21 ஜூலை, 2020

புதிய தமிழ் இலக்கணமும் பேராசிரியர் பொற்கோவும்.....

புதிய தமிழ் இலக்கணம்பற்றிப் பேராசிரியர் பொற்கோ அவர்களின் கருத்து ------------------------------------------------------------------------------------------------------- // இக்காலத் தமிழுக்கு ஒரு நல்ல இலக்கணம் வேண்டும். இந்தக் கருத்து இப்போது பரவலாகச் சரியாக உணரப்பட்டிருக்கிறது. நாடு விடுதலை பெற்றபிறகு நம்மிடம் வளர்ந்த மொழி உணர்ச்சியும் கல்வி உலகில் ஏற்பட்ட ஆராய்ச்சி வளர்ச்சியும் புதிய சிந்தனைகளைத் தூண்டி மொழியின் பயன்பாட்டு எல்லையை விரிவாக்கிப் புதிய இலக்கணத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது. இத்தகைய சூழலில் புதிய இலக்கணங்கள் தோன்றவேண்டும். அப்போதுதான் மொழியில் தோன்றயுள்ள புதிய இலக்கணக் கூறுகளுக்கு நிலைபேறு ஏற்படும். மொழியியலும்...

பேராசிரியர் மு. இளங்கோவன்

பேராசிரியர் மு. இளங்கோவன்.... இளம் தமிழ் ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். தமிழ் இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்தவர். நாட்டுப்புறப் பாடல்களை அதற்கே உரிய இசையுடன் மேடைகளில் முழங்கிக்கொண்டிருப்பவர். தொல்காப்பியத்தை உலக அளவில் எடுத்துச் செலவதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றிவருபவர். தனது வலைப்பூ மூலம் தமிழாய்வாளர்களை அறிமுகப்படுத்திவருபவர். தற்போது தமிழறிஞர்களைப்பற்றிக் குறும்படங்களையும் தயாரித்து வெளியிட்டு வருபவர். இவரைப்பற்றிய எனது 5 ஆண்டுகளுக்கு முன்பான முகநூல்பதிவை மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்,. முனைவர் மு. இளங்கோவன் … தமிழ் வலைப்பூக்களின்...

முனைவர் ஆ. மணவழகன்

முனைவர் ஆ. மணவழகன் …. இளந்தலைமுறை தமிழாய்வாளர். சமூக உணர்வாளர். தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியம், கணினித்தமிழ் ஆகிய துறைகளில் சிறந்த ஆய்வுகளோடு, படைப்பிலக்கியத்திலும் திறன் படைத்தவர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் ( எம் ஃபில் ) பட்டமும் பெற்றார் . உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னையில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். கணினித்தமிழிலும் ஆர்வம் உள்ள இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ்...

முனைவர் மோ.கோ.கோவைமணி (1963)

முனைவர் மோ.கோ.கோவைமணி (1963) …. தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் ஓலைச்சுவடித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை, எம் ஃபில் பட்டங்களையும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும், சுவடியியல், கணிப்பொறி பயன்பாடு, சைவ சித்தாந்தம் போன்ற பட்டயங்களையும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் 1989 முதல் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ள இவர் தற்போது அத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சுவடியியல், இந்திய காலக்கணிதம், தமிழும் விசைப்பலகையும், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, புலைமாடத்தி வரத்து, கதைப்பாடல்கள் மூன்று, புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை, தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள்...

பேராசிரியர் ப. பாண்டியராஜா ( 1943

பேராசிரியர் ப. பாண்டியராஜா ( 1943) … மிகவும் வியப்புக்குரிய ஒரு தமிழறிஞர். பட்டங்கள் பெற்றது கணிதத்துறையில் … பணியாற்றியது கணிதத்துறையிலும் கணினித்துறையிலும் …. ஆனால் தமிழறிஞர்கள் பலரும் இணைந்து செய்யவேண்டிய பணிகளை – ஒரு மிகப்பெரிய தமிழாய்வு நிறுவனம் செய்யவேண்டிய பணிகளை - தனி ஒரு ஆய்வாளராக இருந்து சாதித்துள்ளார். கணிதத்தில் இளங்கலைப் பட்டம் (1962), முதுகலைப் பட்டம் (1964), எம் ஃபில் பட்டம் ( 1972) பெற்றுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் (1980), மொழியியலில் சான்றிதழும் பெற்றுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, 2001-ஆம் ஆண்டு பட்டம் பெற்றுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வானது தொல்காப்பியத்திலிருந்து...

பேரா. இரா. முரளிதரன் (1959)

பேரா. இரா. முரளிதரண் அவர்களைப்பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு முகநூலில் இட்ட பதிவு இது. தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வுபெற்றாலும் மொழியியலின் முக்கியத்துவத்தை ஆய்வாளர்களிடம் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். இனிய நண்பர். பழகுவதற்கு எளிமையானவர். அவரைப்பற்றிய இப்பதிவை இன்று மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள். பேரா. இரா. முரளிதரன் (1959) … மொழியியல் தளத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ஒரு ஆய்வாளர். தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறையில் பணியாற்றிவருகிறார். தாவரவியலில் இளங்கலைப் பட்டமும் (1979), மொழியியலில் முதுகலைப் பட்டமும் (1983),...

வியாழன், 9 ஜூலை, 2020

பேராசிரியர் சிங்கப்பூர் சித்தார்த்தன்

பேராசிரியர் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்கள்.... எனக்கு நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காத ஒரு தமிழ் அறிஞர். ஆனால் அவரது '' இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்'' என்ற நூலைப் புரட்டிப்பார்க்காத நாளே கிடையாது. இன்றைய தமிழின் தரவுகளின் அடிப்படையில் மிகத் தெளிவாக தமிழ்மொழியின் இலக்கணத்தைக் கூறும் அவரது நூல் இது. எப்போதும் அவரது அந்த நூல் எனது மேசையில் இருக்கும். எந்த ஒரு ஐயத்திற்கும் இந்த நூலில் விடை இருக்கும். மிக்க மகிழ்ச்சியுடன் அவரைப்பற்றிய 5 ஆண்டுகளுக்குமுன் நான் முகநூலில் இட்ட பதிவை இன்று மீள்பதிவு செய்கிறேன். தமிழறிஞர் சிங்கப்பூர் சித்தார்த்தன் (1936) … இயற்பெயர் பா. கேசவன். எனக்கு மிகவும் பயன்படுகிற ‘ இலகு தமிழில் இனிக்கும் தமிழ்...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India