''மகா விஷ்ணு அவதாரத்திற்கான'' அடிப்படைகள் .
ஞாயிறு, 8 செப்டம்பர், 2024
''மகா விஷ்ணு அவதாரத்திற்கான'' அடிப்படைகள் .
மார்க்சிய ஆய்வுமுறை
மார்க்சிய ஆய்வுமுறை
நான் குறிப்பாக, தமிழ் இலக்கியம், மொழி, பண்பாடு, சமூகவியல் போன்ற துறைகளுக்கான மாணவர்களுக்குத் தேவையான ஆய்வுநூல்களைப் பரிந்துரைத்துள்ளேன். நான் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் எல்லோரும் தங்கள் தத்துவக் கண்ணோட்டத்தில் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள். நானும் ஒரு மார்க்சியவாதிதான். வெளிப்படையாகக் கூறுகிறேன்.
நான் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கல்வித்துறையில் பேராசிரியர்கள். சிறந்த ஆய்வாளர்கள். அவர்கள் மார்க்சிய ஆய்வுமுறைகளைப் பின்பற்றிய காரணத்தால்தான் தங்கள் துறைகளில் மிகச் சிறந்த ஆய்வுகளை முன்வைக்கமுடிந்தது. அறிவியலில்கூட ஜே டி பர்னால், ஜோசப் நீதாம் போன்றவர்கள் மிகப் பெரிய ஆய்வுகளை முன்வைத்துள்ளார்கள். சமூக இயக்கத்தோடு அறிவியலைப் பிணைத்துப் பார்த்த காரணத்தினால்தான் அவர்களால் தங்கள் துறைகளில் சாதனைபுரிய முடிந்தது.
மார்க்சியமானது பொருளாதாரம், அரசியல் என்பதைத் தாண்டி , எந்த ஒன்றையும் - இயற்கையோ சமுதாயமோ, மனமோ எது என்றாலும் சரி - புறவயமாக ஆய்வுசெய்வதற்கான ஒரு ஆய்வுமுறை. ''இயற்கையின் இயங்கியல் (Dialectics of Nature), லெனினின் ''பொருள்முதல்வாதமும் அனுபவவாதமும் ( Materialism and Empirio-criticism) ஆகிய நூல்கள் அறிவியல் ஆய்வுக்கு மிகவும் பயன்படும்.
ஆய்வு மாணவர்களுக்கு நான் பரிந்துரைக்கிற நூல்கள் இவை. இவையெல்லாம் மார்க்சிய ஆய்வுமுறைகளை ஏற்றுக்கொண்டவைதான். நான் மறுக்கவில்லை. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. மூடிமறைக்கப் போர்வைகள் தேவை இல்லை.
என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு ஆய்வுக்கும் மார்க்சிய ஆய்வுமுறை மிகவும் பயன்படும். தாங்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த ஆய்வுமுறைகளை முன்வைக்கிற நூல்களை ஆய்வுமாணவர்களுக்குப் பரிந்துரைக்கலாம். நான் வேண்டாம் என்று கூறவில்லை.
பொருள்முதல்வாதத்தை (Materialism) இயங்கியல் (dialectics) நோக்கில் முழுமைப்படுத்தியது மார்க்சியமே என்பது எனது கருத்து. மார்க்சியத்தின் தத்துவக் கண்ணோட்டம் இயங்கியல் பொருள்முதல்வாதம் (Dialectical materialism) . ஹெகல் (இயங்கியல் கருத்துமுதல்வாதம்) முன்வைத்த இயங்கியலும் பியூர்பக் (இயங்கியலுக்கு அப்பாற்பட்ட பொருள்முதல்வாதம்) முன்வைத்த பொருள்முதல்வாதமும் மார்க்சின் இயங்கியல் பொருள்முதல்வாதத்திற்கு அடிப்படை. இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை முழுமையாக முன்வைத்தது மார்க்சியமே.
சனி, 7 செப்டம்பர், 2024
இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுடையவர்களுக்குமட்டும் . . . ''தினமணி'' கட்டுரைபற்றி!
இந்திய அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுடையவர்களுக்குமட்டும் . . . ''தினமணி'' கட்டுரைபற்றி!
பள்ளிகளில் ''மகா விஷ்ணு'' அவதாரம்!
பள்ளிகளில் ''மகா விஷ்ணு'' அவதாரம்!
------------------------------------------------------
''இறைவணக்கத்துடன்தான்'' அனைத்துப்
பள்ளிகளும் தங்கள் பணிகளைத் ''தொடங்குகின்றன''.
'' பாவம்'' ''புண்ணியம்'' போன்ற
கருத்துக்களை அடிப்படையாகக்கொண்ட பல ''இலக்கியங்கள்'' ''புராணங்கள்'' ''நாட்டுப்புறக்
கதைகள்'' பள்ளிப்பாடங்களில்
இடம் பெறுகின்றன. ''பாவம்
செய்தவன் பல்லக்கு தூக்குவான்; புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பயணம் செய்வான்'' என்பதை
முன்வைக்கும் ''அற
இலக்கியங்களே'' கற்றுக்
கொடுக்கப்படுகின்றன. ''
''பெண்ணடிமை'' ''ஆண்
ஆதிக்கம்'' போன்ற
கருத்துக்களைப் போதிக்கும் பாடங்கள் இடம் பெறுகின்றன. கணவன் தன்னைப் பிரிந்து
சென்றாலும், அவன்
வருகைக்காக வாசலில் காத்திருக்கவேண்டும் ; காலையில் எழுந்தவுடன் கணவனின்
கால்களைத் தொழுது தன் ''பணிகளைத்'' தொடங்கவேண்டும்
போன்ற பெண் அடிமைக் கருத்துக்களைக் கூறும் இலக்கியங்களே ''பாராட்டப்படுகின்றன''.
''ஆன்மீகத்தை'' அடிப்படையாகக்
கொண்ட ''பாடங்களுக்குப்'' பஞ்சமே
இல்லை!
ஒட்டுமொத்தத்தில் ''இயற்கையை இயக்குவது'' இயற்கைக்கு
அப்பாற்பட்ட ஒரு சக்தியே என்பது நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்றைய கல்வியில் ''கற்றுக்கொடுக்கப்படுகிறது''!
இதன் ஒரு பகுதியே இன்றைய ''மகாவிஷ்ணுவின்'' ஒரு
அவதாரம்! இதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை! ஏதோ இவர் ஒரு ''புதிய'' அவதாரம்
என்று நினைக்கவேண்டாம். ''மகா விஷ்ணு'' பல
நிலைகளில் பள்ளிக்கல்வியில் "நீடிக்கிறார் " என்பதே உண்மை.
''அரசியல் அற்ற'' ஆன்மீகம் கிடையாது. ஆன்மீகத்திற்கு ''அரசியல்'' உண்டு. அந்த ''அரசியல்'' பல நேரங்களில் இலைமறைவு காயாக இருக்கும். சில நேரங்களில் வெளிப்படையான ''மகாவிஷ்ணுவாக'' தோன்றும். இவ்வாறு வெளிப்படையாகத் தோன்றுவதற்கு அடிப்படையே ''பள்ளிக்கல்வியில் நீடிக்கிற ஆன்மீகம்தான்'' என்பதே நான் கூற விரும்புவது ஆகும்.
''ஒருவனே தேவன்'' என்பதும் ''ஆன்மீகம்தான்''! ''மத வெறி'' ''மத நல்லிணக்கம்'' ''மதச் சார்பின்மை'' போன்ற எல்லாமுமே ''ஆன்மீக அரசியலின் '' பல்வேறு வடிவங்கள்தான். சூழலைப்பொறுத்து ஒவ்வொரு வடிவமும் ''முன்னிலைப்படுத்தப்படும்''. நான் தற்போதைய ''மகாவிஷ்ணு அவதாரத்தைக் '' கண்டிக்கக்கூடாது என்று கூறவரவில்லை. மாறாக, இந்த ''மாக விஷ்ணு அவதாரத்திற்கு'' அடிப்படையே பள்ளிக்கல்வியில் நீடிக்கிற ''ஆன்மீகமே'' என்றுதான் கூறவந்துள்ளேன். அதுதான் ''ஆணிவேர்''. அதிலிருந்து அவ்வப்போது வெளிப்படையாகத் தோன்றி நிற்பதுதான் இந்த ''மகாவிஷ்ணு''!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்மீகத்திற்கு அரசியல் இருப்பதுபோல, ஆன்மீக எதிர்ப்பிற்கும் உறுதியாக அரசியல் உண்டு. தங்களுடைய கண்ணோட்டத்தின் அடிப்படையில் ''ஆன்மீக உணர்வு மனிதனை நெறிப்படுத்த'' இன்றியமைதாதது. என்னுடைய கண்ணோட்டத்தின்படி ''ஆன்மீக உணர்வு '' அடிப்படையில் அறிவியலுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தடையானது என்பதாகும். இதுபற்றிய விவாதத்தை இங்குத் தொடங்க நான் விரும்பவில்லை. ஆன்மீகத்தைப் பள்ளிக்கல்வியில் அறிமுகப்படுத்தும்போது, ஆன்மீகத்திற்கு மாற்றான பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தையும் அறிமுகப்படுத்தலாமே. எது சரியானது என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே. பொருள்முதல்வாதத் தத்துவத்தைமட்டும் பள்ளிகளுக்குள் நுழையவிடாமல் ஏன் தடுக்கவேண்டும்?