புதன், 4 ஜூன், 2025
மொழியியலாளர் தமிழுக்கு எதிரிகளா?
தமிழ் - கன்னடம் - கருத்து மோதல்
தமிழ் - கன்னடம் - கருத்து மோதல்
செவ்வாய், 3 ஜூன், 2025
இயற்கை நிகழ்வுக்கும் சமூக நிகழ்வுக்கும் - புறவய விதிகளே அடிப்படை ! சமூக மாற்றத்தைத் தடுக்கமுடியுமா?
இயற்கை நிகழ்வுக்கும் சமூக நிகழ்வுக்கும் - புறவய விதிகளே அடிப்படை ! சமூக மாற்றத்தைத் தடுக்கமுடியுமா?
தேசிய இனங்களின் ஒற்றுமையே இந்திமொழித் திணிப்பை முறியடிக்கமுடியும்!
தேசிய இனங்களின் ஒற்றுமையே இந்திமொழித் திணிப்பை முறியடிக்கமுடியும்!
ஞாயிறு, 1 ஜூன், 2025
மொழியியலில் வேறுபட்ட கோட்பாடுகள் . . .
மொழியியலில் வேறுபட்ட கோட்பாடுகள் . . .
'மூல திராவிடம்' தமிழே! 'மூல திராவிட இனம்' தமிழ் இனமே ! இவை இரண்டும் நமது விருப்பமா? அல்லது அறிவியல் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளா?
'மூல திராவிடம்' தமிழே! 'மூல திராவிட இனம்' தமிழ் இனமே ! இவை இரண்டும் நமது விருப்பமா? அல்லது அறிவியல் அடிப்படையிலான ஆய்வு முடிவுகளா?
கன்னடம் தமிழிலிருந்து பிறந்ததா ? அல்லது தனியே பிறந்த வளர்ந்த ஒன்றா? - கருத்து மோதல்!
கன்னடம் தமிழிலிருந்து பிறந்ததா ? அல்லது தனியே பிறந்து வளர்ந்த ஒன்றா? - கருத்து மோதல்!
திங்கள், 5 மே, 2025
இன்றைய கல்வி . . .
இன்றைய கல்விக்கும் இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார உற்பத்திக்கும் தொடர்பு கிடையாது. மொழிப் படிப்புகள் மட்டுமல்ல, இயற்பியல், வேதியியல், தாவரயியல் போன்ற படிப்புகளுக்கும் இது பொருந்தும். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பொறியாளர்களை உருவாக்கும் படிப்புகளுக்கே முக்கியத்துவம் அளிப்படுகிறது. எந்தப் படிப்புக்கு இந்தியாவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. மொழிப்படிப்புகளுக்கும் பொது அறிவியல் படிப்புகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அதனால்தான் அவற்றிற்கான துறைகளின் அவலநிலைபற்றி இங்குள்ள மாநில, நடுவண் அரசாங்கங்கள் கவலைப்படுவதில்லை. ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள பொது அறிவியல் துறைகள், மொழி, இலக்கியம், சமூகவியல் படிப்புகளுக்கான துறைகள் மூடப்பட்டாலும் கவலைப்படுவதில்லை.
மருத்துவத்துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்கருவிகள், மருந்துகள் ஆகியவற்றிற்கு சந்தை உருவாக்குவதற்கே இங்கு மருத்துவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் அந்த மருத்துவமனைகளில் 'இறக்குமதி செய்யப்பட்டுள்ள' மருத்துவ உபகரணங்களுக்கு (CT Scan, MRI, PET, Robotic instruments etc.,) நோயாளிகளைப் 'பிடித்துத்தரவேண்டும்'! இதற்கு ஒரு இலக்கை ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவர்களுக்குக் கொடுக்கிறது. அந்த இலக்கை முடித்துத்தராதவர்கள் அங்கு தொடர்ந்து பணியாற்றமுடியாது. மருந்துகள் பரிந்துரைப்பிலும் இதுதான் இங்கு நடைபெறுகிறது. பிறந்த குழந்தைக்கு முன்னால் ஒரு அம்மை தடுப்பூசி போடுவார்கள். இப்போதெல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்குத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குழந்தைக்கு என்ன தடுப்பூசி போடுகிறார்கள் என்ற விவரம்கூட மக்களுக்குத் தெரியாது. மருத்துவர் சொல்கிறோர், ஆகவே போடுகிறோம் என்றுதான் அவர்கள் கூறுவார்கள். இந்தத் தடுப்பூசி மருந்துகள் எல்லாம் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தியே ஆகும்!
எனவே, இன்றைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சந்தை உருவாக்கித்தரும் தொழில்களுக்கான படிப்புகளுக்கே கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஏனைய படிப்புகளைப் பெறுபவர்கள் வேலையின்றித் தெருக்களில் நிறுத்தப்படுகிறார்கள்.
''அனைத்தையும் துறத்தல்'' - பொருள் என்ன?
''அனைத்தையும் துறத்தல்'' - பொருள் என்ன?
'சில', 'பல' - எண்ணுப்பெயரடைகளா, எண்ணுப்பெயர்களா?
'சில', 'பல' - எண்ணுப்பெயரடைகளா, எண்ணுப்பெயர்களா? ஒரு குழப்பம் எனக்கு! தமிழ் ஆய்வாளர்கள் தயவுசெய்து உதவவும்.
புதன், 30 ஏப்ரல், 2025
தற்போதைய கல்வியை இந்தியாவில் தீர்மானிப்பது யார்? உள்நாட்டு வளர்ச்சிக்கான கல்வியா? அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கான கல்வியா?
தற்போதைய கல்வியை
இந்தியாவில் தீர்மானிப்பது யார்? உள்நாட்டு வளர்ச்சிக்கான கல்வியா? அல்லது பன்னாட்டு
நிறுவனங்களின் தேவைக்கான கல்வியா?
------------------------------------------------------------------------
சீனம் விடுதலை அடைந்தது 1949 அக்டோபர் 1-ஆம் தேதி. மாசேதுங்கின்
தலைமையிலான பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தியா 1947 - ஆகஸ்டு 15 ஆம் நாள் ஆங்கிலேயரின்
நேரடி ஆட்சியிலிருந்து விடுபட்டது. நம்மைவிட இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர்தான்
சீனம் விடுதலை அடைந்தது. நம்மைவிட மக்கள்தொகை அதிகமான நாடு அது. வறுமையில் வாடிய
நாடு அது.
ஆனால் அதனுடைய இன்றைய
வளர்ச்சி . . . மேலைநாடுகளுக்கெல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
இன்று சீனம் தடம்மாறி, ஏகாதிபத்தியமாக
மாறி இருக்கிறது. ஏகாதிபத்திய பாதையில் நடைபோடுகிறது. அது வேறு.
ஆனால் மாவோவின்
தலைமையில்தான் இன்றைய அத்தனை வளர்ச்சிக்கும் அடித்தளம் இடப்பட்டது. விவசாயம், தொழில் உற்பத்தி இரண்டுமே
திட்டமிட்டு, உள்நாட்டு
மூலதனத்தை வைத்துக்கொண்டு வளர்க்கப்பட்டது. அனைத்துத் துறைகளில் தலைநிமிர்ந்து
நிற்கிறது!
ஆனால் இந்தியாவின் இன்றைய
நிலை . . . அனைத்துக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்துதான் உள்ளது. ஏன் இந்த
நிலை? நிலங்கள்
இல்லையா? உழைப்பதற்குக்
கரங்கள் இல்லையா? பீடியைத்
தவிர - பற்பசை, சோப்புமுதல்
அத்தனை பொருள்களும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திகள்! அல்லது அவற்றின் மூலதனம், தொழில்நுட்பம்
ஆகியவற்றைக்கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றவை!
1947-இல்
இந்தியாவில் நீடித்திருந்த மூலதனத்தைப்போன்று பல மடங்கு இன்று இந்தியாவில் அந்நிய
மூலதனம் நீடிக்கிறது. ஒரு மிகப் பெரிய பாலம் கட்டுவதற்கும்கூட பன்னாட்டு
நிறுவனங்களே தேவைப்படுகிறது. எல் & டி, கிடாச்சி என்று பன்னாட்டு நிறுவனங்களே ஆதிக்கம்
செலுத்துகின்றன. மேலும் கட்டுமானத்திற்கும்கூட அந்நிய நாடுகள்தான் கடன் தருகின்றன!
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி
உறுதியாகத் தேவை! அதில் ஐயமே இல்லை! அவற்றின் வளர்ச்சிதான் ஒரு நாட்டை அடுத்த
உயர்ந்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும். அதற்காத்தானே ஆங்கிலேயர் ஆட்சியை
எதிர்த்துப்போராடினோம்! வ உசி கப்பல் விட்டார். பகத்சிங் தூக்குமேடை ஏறினார்! எனவே, எந்தவொரு அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும்
உள்நாட்டில் , உள்நாட்டு
மூலதனத்தில் , உள்நாட்டுக்
கரங்களாலும் மூளைகளாலும் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்!
ஆனால் உண்மை என்ன?
ஒருவர் தனது
வீட்டுக்குவேண்டிய பொருள்களை - தொலைக்காட்சி, ஏ சி , வீடு, சிற்றுந்து வரை - தனது சொந்த வருவாயில் வாங்குவது
வேறு! கடன் அட்டையில் வாங்குவது வேறு! இந்த வேறுபாடுதான் ஒரு நாட்டுக்கும்
பொருந்தும்! இந்த நிலை மாறும்வரை . . . கல்வியும் உள்நாட்டுத் தேவைக்கான கல்வியாக
இருக்காது . . . இருக்கமுடியாது!
இவைபற்றியெல்லாம் 'பூத் கமிட்டி' அரசியல் கட்சிகள்
கவலைப்படுகிறதா? கிடா
வெட்டுவது, ஸ்வீட்
பாக்ஸ் அளிப்பது போன்றவற்றைத்தவிர . . . இந்தக் கட்சிகள் வேறு என்ன செய்கின்றன? நாட்டை நிர்வகிக்கும் ஐ ஏ
எஸ் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க பெரிய தேர்வு முறை இருக்கிறது! ஆனால் நாட்டின்
வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பாராளுமன்றம் , சட்டசபைகளில் உறுப்பினர்களாக இடம்பெற என்ன
தேவைப்படுகிறது இங்கே?