சனி, 4 பிப்ரவரி, 2023

''தாழ்த்தப்பட்ட சாதியினர்மீதான தீண்டாமை என்ற சமூக ஒடுக்குமுறைக்குப் பார்ப்பனியம்மட்டுமல்ல. . . பிற இடைத்தட்டுச் சாதியினர்களும் காரணம் ! (1)

 ''தாழ்த்தப்பட்ட சாதியினர்மீதான தீண்டாமை என்ற சமூக ஒடுக்குமுறைக்குப் பார்ப்பனியம்மட்டுமல்ல. . . பிற இடைத்தட்டுச் சாதியினர்களும் காரணம் ! (1)

-------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் இன்றைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் ''பார்ப்பனர்கள்தான்'' காரணம் என்று கூறுவது அறிவியல் அடிப்படையிலான அரசியல் விளக்கமாக அமையுமா? ''பார்ப்பனிய எதிர்ப்பே'' என்ற ஒன்றே இந்திய மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்பது சரியா? மக்களுக்குச் சரியான வழிகாட்டுதலை அளிப்பதற்குப்பதில், தவறான திசையைக் காட்டுவதாக இது அமையாதா?
அடிப்படை விவசாயிகளான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின்மீது பண்பாட்டு ஆதிக்கம் செலுத்துவது பார்ப்பனியம்மட்டும் அல்ல ... பார்ப்பனர்கள் அல்லாத இடைத்தட்டு சாதிகள் . . . பிள்ளை, ரெட்டி, செட்டி, நாயுடு, கவுண்டர் போன்ற பல இடைத்தட்டு சாதிகளின் ஆதிக்கமும் ஆகும்!
உண்மையில் இன்று தாழ்த்தப்பட்ட மக்களின்மீது வன்முறைகளை ஏவிவிடுபவர்கள் யார்? இந்த இடைத்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த பணக்காரர்களே ஆகும்! இவர்கள் தங்கள் சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்குத் தவறான வழிகாட்டுதலை அளித்து, அவர்களையும் இணைத்துக்கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வன்முறைகளை ஏவிவிடுகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை!
ஒடுக்கப்பட்ட . . . தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்த உழைக்கும் மக்களுடன், பார்ப்பனர், பிள்ளை, கவுண்டர், நாயுடு, செட்டி, ரெட்டி போன்ற சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் . . . வர்க்க அடிப்படையில் ஒன்றிணைந்து . . . சமுதாய மாற்றத்திற்கான சரியான போராட்டப்பாதையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுவதுதான் இன்றைக்குத் தேவையானது.
இவ்வாறு நான் கூறுவதால், இன்று பார்ப்பனியப் பண்பாட்டு ஆதிக்கம் . . . கொடுமை நீடிக்கிறது என்பதை நான் மறுப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது! ஆனால் இதை . . . பார்ப்பனியத்தை . . . எதிர்க்கிற மேற்குறிப்பிட்ட இடைத்தட்டுச் சாதிகளின் பணக்கார வர்க்க மக்களும் இன்று ஒடுக்கப்பட்ட . . . தாழ்த்தப்பட்ட சாதியினர்மீது பண்பாட்டு ஒடுக்குமுறையை . . . தீண்டாமையை . . . மேற்கொள்கின்றன என்பதை மறுக்கமுடியாது!
இந்த இடைத்தட்டுச் சாதிகளின் மேல் வர்க்கங்கள் தங்கள்மீதான பார்ப்பனியப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்க்கிற அதேவேளையில் . . . தாழ்த்தப்பட்ட சாதிமக்களின் மீது சாதிய ஒடுக்குமுறைகளை ஏவி விடுவதை மறுக்கமுடியாது! இந்த ஒடுக்குமுறையில் பார்ப்பனியமும் ஒன்றுதான் . . . இந்த இடைத்தட்டு சாதிகளும் ஒன்றுதான்! இதுதான் புறவய உண்மை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India