திங்கள், 17 பிப்ரவரி, 2025

அந்நிய முதலீடு

 இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான உள்நாட்டு மூலதன வளர்ச்சிக்கு வழிவகுக்காத - அயல்நாட்டு மூலதனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற இந்தியாவில் உள்ள ஆளும், எதிர்க்கட்சிகள் பற்றிய எனது கருத்துக்கு நண்பர் திரு மாலன் அவர்கள் அளித்த பதிலும் அதற்கு எனது மறுபதிலும்! ''நீ ஏன் தவறு செய்கிறாய்' என்று கேட்டால், அதற்குரிய பதில் இல்லாமல் 'அவன்மட்டும் தவறு செய்யவில்லையா?' என்ற அடிப்படையில் அவரது பதில் அமைந்துள்ளது!

நண்பர் திரு மாலன் அவர்கள்
-------------------------------------
சீனத்தில் அன்னிய முதலீடு இல்லையா? //Since 2021, China has attracted annually overseas investment of over 1 trillion yuan ($136.9 billion) for three consecutive years//https://www.morningstar.com/.../global-times-delving-the...
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------
1948-இல் சீனம் மாவோ தலைமையில் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகார அரசு அமைக்கும்போது, மிக மிக வறுமையான நாடு சீனம். இந்தியாபோன்றே ஜப்பான் உட்பட பல்வேறு ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரப் பிடிப்பில் இருந்தது. உள்நாட்டு மூலதன வளர்ச்சி கிடையாது. விவசாய உற்பத்தி மிகவும் பின்னடைந்திருந்தது. மக்கள்தொகையில் முதலிடம் சீனா அப்போது.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் சீனாவின் பொருள் உற்பத்தியை - தொழிற்சாலை, விவசாயம் இரண்டிலும் - மாவோ தலைமையிலான அரசு வளர்த்தெடுக்க மிகக் கடுமையான முயற்சியை எடுத்தது. விவசாய உற்பத்தியே உள்நாட்டு மூலதனத்தை உருவாக்கும் என்பதால் கம்யூன் முறைவரை புரட்சிகர நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக ஏற்பட்ட மக்களின் வாங்கும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த, மக்களுக்குத் தேவையான நுகர்பொருள் உற்பத்தி உள்நாட்டு மூலதனத்தைக் கொண்டு வளர்க்கப்பட்டது. அதனால் கிடைத்த உபரியால் பெருந்தொழிற்சாலைகள் வளர்ச்சியடைந்தன. அந்நிய மூலதனம் இல்லாமல், தன் சொந்த மூலதனத்தில் சீனம் வளர்ச்சிபெற்றது.
மாவோ 1976-ஆம் மறையும்போதே பொதுவுடைக்கட்சிக்குள் திருத்தல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். மக்களைச் சார்ந்துநின்ற மாவோ 'பண்பாட்டுப் புரட்சியைத்' தீவிரப்படுத்தினார். அதையொட்டிப் பொதுவுடைக் கட்சிக்குள்ளும் வலது சந்தர்ப்பவாதம், இடது சந்தர்ப்பவாதம் இரண்டுமே தலைதூக்கின.
அதன் விளைவு . . . டெங் ஷியோபிங்க் (Deng Xiaoping) வலது திருத்தல்வாதப் பிரிவினர் துணையுடன் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கினார். சோசலிசப் பொருளாதாரமுறை பின்தள்ளப்பட்டது. அதுவரை பெற்ற சீனத்தின் வளர்ச்சியை இவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். தனியார் மூலதன வளர்ச்சி தீவிரமடைந்தது. கடந்த 45 ஆண்டுகளில் அவர்களின் 'வளர்ச்சி' ஏகாதிபத்தியப் பண்பைநோக்கிச் சீனம் தள்ளப்பட்டது.
இது சோசலிசத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரும் தற்காலிகப் பின்னடைவு. ரஷியாவில் தோழர் ஸ்டாலின் இறப்புக்குப்பின்னர் நடைபெற்ற அதே பின்னடைவு சீனத்திலும் ஏற்பட்டதின் விளைவே இன்றைய சீனத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சி. தற்போது சீனம் ஒரு சோசலிச நாடு இல்லை. எனவே சீன ஏகாதிபத்தியவாதிகள் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். எனவேதான் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களும் சீன ஏகாதிபத்தியவாதிகளும் கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
என்னுடைய கருத்து . . . மாவோ தலைமையிலான சோசலிச அரசு, தனது சோசலிசக் கட்டுமானத்தில் பெற்ற பயன்களை - தொழில், விவசாய வளர்ச்சியை - இன்றைய சீன ஏகாதிபத்தியவாதிகள் 'அறுவடை செய்துவருகின்றனர்'. அதன் ஒருபகுதியே சீனப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையே நடைபெறுகிற போட்டிகள்! இந்தியாவிலும் சீன முதலாளிகளின் மூலதனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிக வேகமாக நுழைந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் அவர்களுக்கு ஆதரவான 'அறிவுஜீவிகள்' உருவாக்கப்பட்டு, மறைமுகமாகச் சீன ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். நாம் எதிர்பார்க்காத 'அறிவுஜீவிகள்' இதில் கவனம் செலுத்திவருகின்றனர்.
மாவோவின் சீனம் எவ்வாறு உள்நாட்டு மூலதனத்தை வளர்த்தது என்பதைப்பற்றி மேலும் தெளிவுபெற, கீழ்க்கண்ட தோழர் மாவோவின் கட்டுரையைப் ("On the Ten Major Relationships", Mao 1956) படிக்கலாம்.
எல்லா உணர்ச்சிகளும்:
தோழர் ஞானம், Sivakumar Padmanabhan மற்றும் 15 பேர்
5 கருத்துகள்
5 பகிர்தல்கள்
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India