எந்த அரசியல் கட்சி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளித்துள்ளது? அல்லது 'தேர்தல் வியூகத் திறமைசாலிகளான'' பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் விடை தருவார்களா?
-------------------------------------------------------------------------
1) 'சுதந்திரம்' பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவால் ஏன் தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சியைப் பெறமுடியவில்லை?
2) கிராமப்புறங்களில் விவசாய நிலங்கள் ஏராளமாக இருந்தும், இன்னும் ஏன் விவசாய உற்பத்திமுறை நவீனமாக்கப்பட்டு, விவசாய உற்பத்தி வளரவில்லை?
4) கோடிக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கமுடியவில்லை?
5) '100 நாள் வேலைத்திட்டம்' எதற்கு? 365 நாள் வேலைத்திட்டம் அல்லவா நீடிக்கவேண்டும்?
6) பீடித்தொழிலைத் தவிர மக்களுக்குத் தேவையான பொருள் உற்பத்திக்கு அந்நியத் தொழில்நுட்பமும் அந்நிய முதலீடும் இல்லாமல் ஏன் தொழிற்சாலைகளை நிறுவமுடியவில்லை? பற்பசை, சோப்பிலிருந்து அனைத்து நுகர்பொருள்களின் உற்பத்தியும் ஏன் இந்தியாவில் அந்நியர்களின் தொழிற்சாலைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன? தலையில் தேய்க்கிற எண்ணெய், சீயக்காயிலிருந்து காலில் போடுகிற செருப்பு உற்பத்திவரைக்கும் அந்நியக் கம்பெனிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏன்?
7) மேற்குறிப்பிட்ட உற்பத்தி மட்டுமல்லை, வணிகத்திலும் ஏன் அமேசான் போன்ற பன்னாட்டுநிறுவனங்கள் ஏன் ஆதிக்கம் செலுத்துகின்றன? இந்தியச் சிறு வணிகர்கள் ஏன் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்?
8 ) பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சலைகளை நிறுவுவதற்கு என்ன காரணம்? குறைந்த கூலியில் நிரம்ப உழைப்புச்சக்தியைச் சுரண்டுவதற்கு இங்கு வாய்ப்பு உள்ளதுதானே காரணம்? இதை ஏன் தடுக்கமுடியவில்லை?
9) இந்தியாவின் இயற்கை வளங்களை அந்நியத்தொழிற்சாலைகள்தானே சுரண்டுகின்றன? இது ஏன் அனுமதிக்கப்படுகிறது?
மக்களை எவ்வாறு தேர்தலில் ஏமாற்றுவது? வாக்குச் சாவடிப் போட்டியில் எப்படி வெற்றிபெறவது? யாருடன் கூட்டணி அமைத்தால் 'ஆட்சியைக் கைப்பற்றமுடியும்? இதுதானே 'தேர்தல் வியூகம்?'
0 கருத்துகள்:
கருத்துரையிடுக