நடுவண் பல்கலைக்கழகங்களில் இந்திமொழி ஆதிக்கம் . . .
----------------------------------------------------------------------
நடுவண் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றைப் பார்த்தேன்.
'மாணவர்களுக்கு எந்த மொழியில் உங்களால் பாடத்தைக் கற்றுக்கொடுக்க வசதியாக இருக்கும்? (in which language you are comfortable to teach students?)
ஒரு கட்டத்தில் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்களைக்கூட இந்தியில்தான் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றுகூடக் கூறுவார்கள்!
பிறமொழிக்காரர்கள் ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்கவேண்டும். அல்லது இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும்! இது என்ன நியாயம்?
இந்தி ஆட்சிமொழி என்பதால்தானே இந்திமொழிக்காரர்களுக்கு இந்த வசதி!
தமிழும் பிற இந்தியமொழிகளும் நடுவண் அரசின் ஆட்சிமொழிகளாக இருந்தால்? அதனால்தான் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆட்சிமொழித் தகுதி வேண்டும் என்று கூறுகிறோம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக