திங்கள், 17 பிப்ரவரி, 2025

வேலை இழப்பு (2)

 நேற்று இன்ஃபோசிஸ் 400 பேரை வெளியேற்றியதையொட்டி நானும் நண்பர் மாலன் அவர்களும் எழுதிய உரையாடலின் தொடர்ச்சி இது . . . (பகுதி 2)

------------------------------------------------------------------------
நண்பர் மாலன் அவர்கள்
----------------------------------------------------------
முடிவுக்கு வரச் சொல்லி வற்புறுத்தவில்லை. ஆனச்ல் மறு தரப்பு என்ன என்பதையும் அறிந்து கருத்துச் சொன்னால் அது ஏற்புடையதாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட நிறுவனம் 400 பேரை மட்டுதான் பயிற்சிக்கு எடுக்கிறதா? இல்லை அது பல்லச்யிரக்கணக்கானோரை எடுக்கிற்து. பயிற்சிக்கு எடுக்கப்பட்ட எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டதா? இல்லை. அனுதாபங்களால் வறுமையை ஒழித்து விட முடியாது கல்வி, திறன்கள் இவற்றின் மூலமே முடியும் கல்வியின் மூலம் திறன்கள் மூலம் வறுமையிலிருந்து வெளியேறிய ஒரு தலைமுறை இங்கே இருக்கிறதல்லவா? பசிக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். கஞ்சி குடிப்பதற்கு இல்லாதர் அதன் காரணங்களை அறியமுடியாதிருப்பதுதான் கொடுமை
ந. தெய்வ சுந்தரம்
---------------------------------------------------------------
நண்பர் மாலன் அவர்களே ''கஞ்சி குடிப்பதற்கு இல்லாதார் , அதன் காரணங்களை அறியமுடியாதிருப்பதுதான் கொடுமை'' என்று தாங்கள் கூறியுள்ளீர்கள். 'பசிக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்' என்றும் கூறியுள்ளீர்கள்.
உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரியுமே, இச்சமூகப் பொருளாதார அரசியல் அமைப்புத்தான் காரணம் என்று!
தங்களைப்பொறுத்தவரை . . . தனிநபரின் அறிவுத்திறனும் உழைப்பும்தான் 'அம்பானியும் அதானியுமாக' ஆவதற்குக் காரணம் என்று! என்னைப்பொறுத்தவரையில் மற்றவர்களின் உழைப்பை . . . அரசு ஆதரவுடன் . . அவர்கள் சுரண்டியதுதான் காரணம் என்று!
அம்பானியின் மகன் கோடியேகோடி செலவழித்துப் திருமணத்தை நடத்துகிறார்! மறுபுறம் தாலி வாங்கக்கூட காசு இல்லாமல் . . புதுத்துணி வாங்கக்கூட காசு இல்லாமல் . . . அரசியல்வாதிகள் ஏமாற்றுவதற்காக நடத்துகின்ற 'இலவசத் திருமண நிகழ்சிகளில்' திருமணம் செய்துகொள்கிறார்கள்!
அம்பானியின் மகன் அவ்வாறு திருமணம் நடத்திக்கொண்டதற்கான பணத்தை அவர் உழைத்துச் சம்பாதிக்கவில்லை! அவர் தந்தை, தாத்தா என்று இணைந்து தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டிச் சேர்த்த பணம்தான் அது!
சுகமாக நாடு சுற்றுவதற்காக அவர்களுக்குத் தனி விமானம் ! இங்குப் பெரும்பான்மை மக்களுக்கோ சைக்கிளைக்கூட தவணையில் வாங்குகிறார்கள்! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்!
இதெல்லாம் தங்களுக்குத் தெரியாமல் இருந்தால்! ஆனால் தங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்!
கோடிக்கணக்கான மக்களை அடக்குமுறையாலும் சிந்தனைரீதியாகவும் 'அடக்கி ஒடுக்கிவைத்திருக்கிற அம்பானிகள், அதானிகளுக்கும்' அவர்களுடைய 'கருத்துவிற்பன்னர்களுக்கும்' இதுபற்றித் தெளிவாகத் தெரியும்! எனவே, இதுபற்றி விரிவாக முகநூலில் விவாதிக்கவேண்டியது இல்லை!
ஒன்றுமட்டும் உறுதியாகக் கூறலாம் . . . தன் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு தர இயலாமல் . . மூன்று நேரம் சோறு கொடுக்க இயலாமல் . . . இருக்கின்ற ஒரு நாடும் அதன் அரசும் 'தோல்வியடைந்த ஒன்றே'! சாம்ஸ்கி கூறுவதுபோல, " Failed States"!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India