புதன், 30 ஜூன், 2021

இலக்கணமும் மொழியியலும் அறிவியல் துறைகளே!

 

இலக்கணமும் மொழியியலும் அறிவியல் துறைகளே!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திரு. ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்கள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதையெல்லாம் படிக்கும்போது எனக்கு எழும் ஒரு உண்மையான அச்சத்தை இங்கு பதிவுசெய்ய கடமைப்படுகிறேன். நான் தமிழறிஞனும் அல்லேன், அறிஞர்களுக்கு எதிர்ப்பான மனப்பாங்கு உடையவனும் அல்லேன்.

பொற்கோ அவர்களின் இக்கால இலக்கண நூலில் பல புதுமையான கருத்துகளை சொல்கிறார். அவற்றுள் சிலவற்றை நான் தவறானவையாக காண்கிறேன். இவற்றுள் ஒன்றைப்பற்றி நாம் இருவரும் எதிரெதிரான கருத்துகளுடன் நீண்ட உரையாடலை முன்பொருமுறை மேற்கொண்டிருக்கிறோம்.

புத்திலக்கணம் எழுதுகிறேன் என்ற பெயரில் மேலும் தவறான கூறுகளை இக்காலப்பேராசிரியர்கள் புகுத்திவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

 

ந. தெய்வ சுந்தரம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலக்கணம், மொழியியல் என்பவை புறவயமான விதிகளை அடிப்படையாகக் கொண்டவையே. நீடிக்கிற இயற்கையின் அமைப்பையும் செயல்பாட்டையும் கண்டறிந்து விளக்குகிற துறையே அறிவியல். இல்லாத ஒன்றை முன்வைப்பது அறிவியல் இல்லை.

அதுபோலவே இலக்கணமும் மொழியியலும். இன்றைய தமிழின் வளர்ச்சிநிலையை - அதன் அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றை - ஆய்ந்து, அவைபற்றிய கருத்துகளையும் அவற்றில் நீடிக்கிற ஒழுங்கமைவு, விதிகள் ஆகியவற்றையும் கூறுகிற துறைகளே ஆகும். மொழியில் இல்லாத ஒன்றைக் கூறமுடியாது. பிற அறிவியல் துறைகள் போன்றவையே இலக்கணமும் மொழியியலும். (டாக்டர் பொற்கோ - '' ஆராய்ச்சியில் ஈடுபட ஈடுபடப் புதிய புதிய விதிகளை நாம் கண்டறிகிறோம். விதிகளை நாமே உண்டாக்க முடியாது. முன்பே இருக்கிற விதிகளைக் கண்டறிகிறோம். மொழி உலகில் நாம் கண்டறிய வேண்டிய விதிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன'')

பிறதுறைகளில் ஆய்வாளர்களை ''இக்காலப் பேராசிரியர்கள்'' ''அக்காலப் பேராசிரியர்கள்'' என்று ''வகைப்படுத்தி'' பேசுவது எவ்வாறு தவறானதோ, அதுபோன்றதுதான் இலக்கணத்திலும் மொழியியலிலும் முறையான கல்வியும், பயிற்சியும் பெற்ற பேராசிரியர்களைப்பற்றிக் கூறுவது ஆகும்.

இயற்கைபற்றிய கருத்துக்களிலும் அறிவியலாளர்கள் நடுவில் மாறுபட்ட, வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதுபோன்றே இலக்கண, மொழியியல் ஆய்வாளர்கள் நடுவிலும் இருக்கலாம். அவ்வளவே.

இன்றைய தமிழின் வளர்ச்சியைப் புறவயமாக ஆய்ந்து, அதன் அமைப்பு, செயல்பாட்டு வளர்ச்சிகளைக் கண்டறிந்து, முந்தைய நிலையிலிருந்து இன்றைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எவ்வாறு தமிழ் வளர்ந்துள்ளது என்பதை விளக்குவதே புதிய இலக்கணத்தின் பணியாகும். இதற்குத் தொல்காப்பியம், நன்னூல் உட்பட மரபு இலக்கணங்களில் புலமையும் இன்றைய மொழியியல் பயிற்சியும் உள்ள ஆய்வாளர்களின் பணிகளையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். ஏனோ தானோ என்று கருத்துக்களை அவர்கள் வழங்கமாட்டார்கள். அவர்கள் அவ்வாறு வழங்கினாலும் பிற ஆய்வாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

புதிய இலக்கணத்தின் தேவைபற்றிப் பேரா. பொற்கோ அவர்கள் தனது ''இக்காலத் தமிழ் இலக்கணம்'' என்ற நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

//மொழியின் பயன்பாட்டு எல்லையின் விரிவாக்கம் புதிய இலக்கணத்திற்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய சூழலில் புதிய இலக்கணங்கள் தோன்றவேண்டும்; அப்போதுதான் மொழியில் தோன்றியுள்ள புதிய இலக்கணக் கூறுகளுக்கு நிலைபேறு ஏற்படும். மொழியிலும் அப்போதுதான் புதிய வளர்ச்சி தோன்றும். இந்த இலக்கணநூல் தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட இலக்கண நூல். தேவையான பழைமைகளைப் போற்றிக் காப்பதோடு மொழியில் தோன்றியுள்ள புதுமைக்கூறுகளுக்கு இடம் தந்து வாழ்வளிப்பதையும் இந்த இலக்கண நூல் ஒரு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மரபில் கால் ஊன்றிப் புதுமையில் அடியெடுத்து வைக்க இந்த நூல் வழிகாட்டுகிறது. //

எனவே பேராசிரியர் ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்களே... தாங்கள் தமிழ் இலக்கண, மொழியாசிரியர்களைக் ( தங்கள் சொற்களில் சொல்வதென்றால் ''இக்காலப் பேராசிரியர்கள்'') கண்டு ''அச்சப்படத்'' தேவையில்லை. அவர்களின் கருத்துக்களில் தங்களுக்கு உடன்படாத எதுவும் இருந்தால், அதைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்து, அவர்களுக்கு உதவலாம்! நன்றி.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திரு. ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்கள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதையெல்லாம் படிக்கும்போது எனக்கு எழும் ஒரு உண்மையான அச்சத்தை இங்கு பதிவுசெய்ய கடமைப்படுகிறேன். நான் தமிழறிஞனும் அல்லேன், அறிஞர்களுக்கு எதிர்ப்பான மனப்பாங்கு உடையவனும் அல்லேன்.

பொற்கோ அவர்களின் இக்கால இலக்கண நூலில் பல புதுமையான கருத்துகளை சொல்கிறார். அவற்றுள் சிலவற்றை நான் தவறானவையாக காண்கிறேன். இவற்றுள் ஒன்றைப்பற்றி நாம் இருவரும் எதிரெதிரான கருத்துகளுடன் நீண்ட உரையாடலை முன்பொருமுறை மேற்கொண்டிருக்கிறோம்.

புத்திலக்கணம் எழுதுகிறேன் என்ற பெயரில் மேலும் தவறான கூறுகளை இக்காலப்பேராசிரியர்கள் புகுத்திவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

 

ந. தெய்வ சுந்தரம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலக்கணம், மொழியியல் என்பவை புறவயமான விதிகளை அடிப்படையாகக் கொண்டவையே. நீடிக்கிற இயற்கையின் அமைப்பையும் செயல்பாட்டையும் கண்டறிந்து விளக்குகிற துறையே அறிவியல். இல்லாத ஒன்றை முன்வைப்பது அறிவியல் இல்லை.

அதுபோலவே இலக்கணமும் மொழியியலும். இன்றைய தமிழின் வளர்ச்சிநிலையை - அதன் அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றை - ஆய்ந்து, அவைபற்றிய கருத்துகளையும் அவற்றில் நீடிக்கிற ஒழுங்கமைவு, விதிகள் ஆகியவற்றையும் கூறுகிற துறைகளே ஆகும். மொழியில் இல்லாத ஒன்றைக் கூறமுடியாது. பிற அறிவியல் துறைகள் போன்றவையே இலக்கணமும் மொழியியலும். (டாக்டர் பொற்கோ - '' ஆராய்ச்சியில் ஈடுபட ஈடுபடப் புதிய புதிய விதிகளை நாம் கண்டறிகிறோம். விதிகளை நாமே உண்டாக்க முடியாது. முன்பே இருக்கிற விதிகளைக் கண்டறிகிறோம். மொழி உலகில் நாம் கண்டறிய வேண்டிய விதிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன'')

பிறதுறைகளில் ஆய்வாளர்களை ''இக்காலப் பேராசிரியர்கள்'' ''அக்காலப் பேராசிரியர்கள்'' என்று ''வகைப்படுத்தி'' பேசுவது எவ்வாறு தவறானதோ, அதுபோன்றதுதான் இலக்கணத்திலும் மொழியியலிலும் முறையான கல்வியும், பயிற்சியும் பெற்ற பேராசிரியர்களைப்பற்றிக் கூறுவது ஆகும்.

இயற்கைபற்றிய கருத்துக்களிலும் அறிவியலாளர்கள் நடுவில் மாறுபட்ட, வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதுபோன்றே இலக்கண, மொழியியல் ஆய்வாளர்கள் நடுவிலும் இருக்கலாம். அவ்வளவே.

இன்றைய தமிழின் வளர்ச்சியைப் புறவயமாக ஆய்ந்து, அதன் அமைப்பு, செயல்பாட்டு வளர்ச்சிகளைக் கண்டறிந்து, முந்தைய நிலையிலிருந்து இன்றைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எவ்வாறு தமிழ் வளர்ந்துள்ளது என்பதை விளக்குவதே புதிய இலக்கணத்தின் பணியாகும். இதற்குத் தொல்காப்பியம், நன்னூல் உட்பட மரபு இலக்கணங்களில் புலமையும் இன்றைய மொழியியல் பயிற்சியும் உள்ள ஆய்வாளர்களின் பணிகளையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். ஏனோ தானோ என்று கருத்துக்களை அவர்கள் வழங்கமாட்டார்கள். அவர்கள் அவ்வாறு வழங்கினாலும் பிற ஆய்வாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

புதிய இலக்கணத்தின் தேவைபற்றிப் பேரா. பொற்கோ அவர்கள் தனது ''இக்காலத் தமிழ் இலக்கணம்'' என்ற நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

//மொழியின் பயன்பாட்டு எல்லையின் விரிவாக்கம் புதிய இலக்கணத்திற்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய சூழலில் புதிய இலக்கணங்கள் தோன்றவேண்டும்; அப்போதுதான் மொழியில் தோன்றியுள்ள புதிய இலக்கணக் கூறுகளுக்கு நிலைபேறு ஏற்படும். மொழியிலும் அப்போதுதான் புதிய வளர்ச்சி தோன்றும். இந்த இலக்கணநூல் தமிழ் மரபைப் போற்றி எழுதப்பட்ட இலக்கண நூல். தேவையான பழைமைகளைப் போற்றிக் காப்பதோடு மொழியில் தோன்றியுள்ள புதுமைக்கூறுகளுக்கு இடம் தந்து வாழ்வளிப்பதையும் இந்த இலக்கண நூல் ஒரு நோக்கமாகக் கொண்டிருக்கிறது. மரபில் கால் ஊன்றிப் புதுமையில் அடியெடுத்து வைக்க இந்த நூல் வழிகாட்டுகிறது. //

எனவே பேராசிரியர் ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்களே... தாங்கள் தமிழ் இலக்கண, மொழியாசிரியர்களைக் ( தங்கள் சொற்களில் சொல்வதென்றால் ''இக்காலப் பேராசிரியர்கள்'') கண்டு ''அச்சப்படத்'' தேவையில்லை. அவர்களின் கருத்துக்களில் தங்களுக்கு உடன்படாத எதுவும் இருந்தால், அதைத் தகுந்த ஆதாரங்களுடன் முன்வைத்து, அவர்களுக்கு உதவலாம்! நன்றி.

இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவையா?

 

இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவையா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் திரு. மாலன்

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தொல்காப்பியத்திற்குச் சொன்னது நன்னூலுக்கும் பொருந்துமா? இன்று இன்னொரு நூல் தமிழுக்குத் தேவைப்படுகிறதா?

 ந. தெய்வ சுந்தரம்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆமாம் நண்பரே. நன்னூல் காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இடையில் சில நூற்றாண்டுகள் இடைவெளி இருக்கிறதே! உறுதியாக நன்னூல் 100 விழுக்காடு அப்படியே இன்றைய எழுத்துத் தமிழுக்குப் பொருந்தாது. மாற்றங்கள் உள்ளன. மாற்றங்கள் இல்லையென்றால் தமிழ்ச்சமுதாயமும் மாறவில்லை... வளர்ச்சியடையவில்லை... எனவே தமிழும் வளர்ச்சியடைவில்லை என்றுதானே பொருள்! இதுபற்றிப் பேராசிரியர் பொற்கோ பின்வருமாறு கூறுகிறார் - ''தொல்காப்பியர் கால இலக்கியத் தமிழுக்கும் நன்னூலார் கால இலக்கியத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. அதைப் போலவே இன்றைய இலக்கியத் தமிழுக்கும் முந்தைய இலக்கியத் தமிழுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவன் வருகிறான், அவன் வருகின்றான் முதலான தொடர்களிலுள்ள நிகழ்கால இடைநிலைகளை நாம் பழந்தமிழில் - தொல்காப்பியர் காலத் தமிழில் காண முடிவதில்லை. ஆகவே, தொல்காப்பியம் என்ற அந்த இலக்கணத்தில் நிகழ்கால இடைநிலைகள் குறிப்பிடப்படவில்லை. அவர் என்ற சொல் இக்கால இலக்கியத் தமிழில் ஒருவரைமட்டுமே குறிக்கும். பலரைக் குறிப்பதற்கு அவர் என்ற சொல்லை இன்று நாம் கையாளமுடியாது. ஆனால் , இடைக்காலத் தமிழிலும் முற்காலத் தமிழிலும் அவர் என்ற சொல் பலரைக் குறிக்கும் சொல்லாகப் பயன்பட்டிருக்கிறது. ஆகவே, அவர் என்பது நன்னூலார் காலத்திலும் தொல்காப்பியர் காலத்திலும் பலர்பால் என்று கொள்ளப்படுகிறது. இக்காலத்தில் அவர் என்பதைப் பலர்பால் என்று கொள்ளமுடியாது. இன்றைய இலக்கியத் தமிழில் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். காலந்தோறும் இலக்கிய மொழிநடையிலும் மாற்றம் ஏற்படுகிறது என்பதை நாம் உணர்ந்துகொண்டு இன்றைய இலக்கியத் தமிழுக்கு ஏற்றவகையில் ஒரு இலக்கணத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. இன்றைய இலக்கியத் தமிழுக்கு நன்னூல் என்ற இலக்கணமும் தொல்காப்பியம் என்ற இலக்கணமும் போதுமானதாக அமையவில்லை. ஆகவே, இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவை'' ( இக்காலத் தமிழ் இலக்கணம். பேரா. பொற்கோ( 2006) ப. 2

கணினியின் எதிர்கால வளர்ச்சியும் தமிழின் சிறப்பும்...

 

கணினியின் எதிர்கால வளர்ச்சியும் தமிழின் சிறப்பும்...

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் திரு. மாலன் அவர்களும் நண்பர் திரு. இராச. தியாகராசன் அவர்களும் கூறியுள்ள கணினித்திறன் வளர்ச்சி உறுதியாக எதிர்காலத்தில் ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.

கணினியானது நாம் செய்யும் தவறுகளைத் தவறுகள் என்று தெரிந்துகொள்ளவும் அவற்றிற்கு மாற்றாகச் சரியான தொடர்களை அளிக்கவும் முதலில் நாம் கணினிக்குச் சரியான தரவுகளை (அகரமுதலி, இலக்கணம் ) அளிப்பது தேவையான ஒன்றாகும். அதற்குத் தமிழின் முறையான இலக்கணமும் அகரமுதலியும் தேவை. அவற்றைக்கொண்டுதான் நாம் கணினியைப் பயிற்றுவிக்க இயலும்.

கடந்த பல ஆண்டு ஆய்வுகளைத் தொடர்ந்து, எங்கள் குழுவினர் தானியங்கு பரிந்துரை (auto-suggestion) கருவி ஒன்றை உருவாக்கியுள்ளோம். தற்போது கூகில் போன்றவற்றில் உள்ள இதுபோன்ற கருவிகள் ... அவற்றின் தரவுத்தளங்களில் காணப்படுகிற தொடர்களை அடிப்படையாகவும் புள்ளியியலை அடிப்படையாகவும் கொண்டவை. எடுத்துக்காட்டாக , ''படி'' என்று தட்டச்சு செய்தவுடன் ''படித்தான், படித்தாள், படித்தார், படித்தால் '' என்ற தொடர்கள் தோன்றும். அவற்றில் நாம் தட்டச்சு செய்ய விரும்பிய தொடர் இருந்தால், அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதாவது முழுத்தொடரை நாம் தட்டச்சு செய்யவேண்டாம்.

ஆனால் ''படித்துக்கொண்டிருக்கவேண்டும்'' என்ற ஒரு நீண்ட தொடரை நாம் தட்டச்சு செய்ய விரும்பியிருந்தால், அது கணினியில் தோன்றாது. புள்ளியியல் - குறிப்பாக Probabilistic statistics துறை அறிவைப் பயன்படுத்தி, கணினி பரிந்துரை அளிக்கிறது.

இங்குச் சிக்கல் என்னவென்றால் ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு இதுபோன்ற தானியங்கு பரிந்துரை உருவாக்கம் சற்று எளிது. ஆனால் தமிழ் போன்ற மொழிகளில் ஒரு வினைச்சொல்லுக்குப் பல லட்சம் விகுதி ஏற்ற வடிவங்கள் உண்டு. ஒரு பெயர்ச் சொல்லுக்கும் அப்படியே. ஆனால் அனைத்தும் தெளிவான, குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில்தான் உருவாகுகின்றன. இவை அனைத்தையும் நாம் முதலில் உருவாக்கி, அவற்றைத் தானியங்கு பரிந்துரைக்கான தரவுத்தளத்தில் ஏற்றவேண்டிய தேவை உள்ளது.

அதற்குப் பதிலாக, தட்டச்சு செய்யும்போதே அவற்றை உருவாக்கிக்கொள்ளும் தொடர் உருவாக்கிக் கருவி இருந்தால் சிறப்பு. அந்த அடிப்படையில் தற்போது நாங்கள் தமிழுக்கு இந்தக் கருவியை உருவாக்கியுள்ளோம். எந்த சொல் வடிவம் என்றாலும் இந்தக் கருவி அதற்குரிய தேவையான அனைத்து வடிவங்களையும்... நாம் தட்டச்சு செய்யச் செய்ய. (in real-time).. கணினி அளிக்கும்வகையில் இந்தக் கருவி அமைகிறது. இதற்குத் தேவையான சரியான தமிழ் அகரமுதலியையும் சரியான இலக்கணத்தையும் அவற்றைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்கும் தொடர் உருவாக்கிக் கருவியையும் தற்போது உருவாக்கியுள்ளோம்.

இந்தப் பணியை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க எங்களுக்கு தமிழ்ச் சொல் இலக்கணத்தைப்பற்றிய - குறிப்பாகப் புணர்ச்சி, சாரியை, ஆக்க விகுதிகள், திரிபு விதிகள் , அவை செயல்படும் முறை ஆகியவைபற்றிய - மிகத் தெளிவான அறிவு தேவைப்பட்டது. பல சிக்கல்கள் எழுந்தன. இவற்றையெல்லாம் ஓரளவிற்குத் தீர்த்துள்ளோம்.

இங்கு நான் குறிப்பிட விரும்புவது... இப்பணியில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு முதலில் முறையான இலக்கணப் பயிற்சியும், கணினியியல் தொழில்நுட்பமும் (கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம்) தேவை.

தற்போதைய எங்கள் ''தானியங்கு பரிந்துரை'' மென்பொருள் கருவி எடுத்துக்காட்டுவது .... தமிழ்ச்சொல் இலக்கணவிதிகள் 100 விழுக்காடு கணித அடிப்படையில் அமைந்துள்ளன என்ற உண்மையேயாகும். இல்லையென்றால் இந்தக் கருவியை உருவாக்க இயலாது. இதனையே தமிழ்மொழியின் சிறப்பாகவும் எங்கள் ஆய்வின் சிறப்பாகவும் நான் கருதுகிறேன்.

இன்றைய தமிழின் இலக்கணக் கட்டமைப்பை நாம் முறையாக உணர்ந்துகொள்வதும் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமா?

 

இன்றைய தமிழின் இலக்கணக் கட்டமைப்பை நாம் முறையாக உணர்ந்துகொள்வதும் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

எழுத்துத் தமிழை அதற்கே உரிய இலக்கணக் கட்டமைப்பின் அடிப்படையில்தான் எழுதவேண்டுமா? புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவேண்டுமா? அவ்வாறு பின்பற்றாவிட்டால் என்ன குறைந்துவிடும்? மக்களுக்குப் புரியாமலா போய்விடும்? தினத்தந்திபோன்ற நாளிதழ்களில் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றாமல் செய்திகள் வெளிவருகின்றனவே! அவற்றை மக்களால் புரிந்துகொள்ளமுடியவில்லையா? இவைபோன்ற பல வினாக்களை நண்பர்கள் சிலர் முன்வைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன விடை அளிப்பது?

மனிதமூளைக்கு உள்ள மொழித்திறன் வியக்கத்தக்கது. ஒரு குறிப்பிட்ட தொடரைக் கேட்கும்போதோ அல்லது வாசிக்கும்போதோ ... அத்தொடருக்கு முன்பின் உள்ள தொடர்களையும், குறிப்பிட்ட கருத்தாடல் நடைபெறுகிற மொழிசாராச் சூழல்களையும் அடிப்படையாகக் கொண்டு ... நம்மால் குறிப்பிட்ட தொடரின் பொருண்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பிட்ட தொடரில் இலக்கண மீறலோ, புணர்ச்சிவிதிகள் மீறலோ இருந்தாலும்... நம்மால் அந்தத் தொடரின் பொருண்மையைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மீறப்பட்ட விதிகளை நாம் புரிந்துகொண்டு.... அவற்றைச் செயல்படுத்தி... குறிப்பிட்ட தொடரின் பொருண்மையைப் புரிந்துகொள்கிறோம்.

''கைப்பிடி'' ''கைபிடி'' என்ற இரண்டு தொடர்களும் வெவ்வேறு பொருண்மைகளை வெளிப்படுத்தினாலும்.... பேசுபவர் இந்த வேறுபாட்டைப்பற்றிக் கவலைப்படாமல் பேசினாலும்.... முன்பின் தொடர்களையும் பிற புறச் சூழல்களையும் கவனத்தில்கொண்டு, நாம் பேசுபவர் கூற விரும்புகிற கருத்தைப் புரிந்துகொள்கிறோம். பேசுபவரே தவறு இல்லாமல் பேசினால்... கேட்பவர் இந்த இரண்டாவது வேலையைச் செய்யாமலேயே... பொருண்மையைப் புரிந்துகொள்ளமுடியும். இல்லையென்றால், இந்தத் ''திருத்தல்'' பணிகளை கேட்பவர் மேற்கொள்வார். அவ்வளவுதான். எனவே எப்படி வேண்டும் என்றாலும் பேசினாலும் அல்லது எழுதினாலும்... மற்றவர்கள் ''திருத்தல் பணியை'' மேற்கொள்ளாமல் ... முன்வைத்த கருத்துக்களைப் புரிந்துகொள்வார் என்பது உண்மை இல்லை! சந்தியோ, சாரியையோ, பிற இலக்கணக் கட்டமைப்புக் கூறுகளோ சும்மா அழகியலுக்காகப் பயன்படுத்தப்படவில்லை! ஒவ்வொரு விதியும் கருத்தாடல் வெற்றிகரமாக நடைபெறுவதற்காகவே நிலவுகின்றது என்பதை மனதில் கொள்ளவேண்டும்!

இது ஒருபுறம்... மறுபுறம் கணினி தொடர்பான ஒரு உண்மை! கணினி வாயிலாக எல்லாவிதமான மொழிவழிக் கருத்தாடல்களையும் மேற்கொள்ளத் தற்போது நாம் அனைவரும் விரும்புகிறோம். நாம் பேசுவதைக் கணினியே தவறு இல்லாமல் எழுதவேண்டும்... நாம் அதில் தட்டச்சு செய்வதை அதுவே பேச்சாக மாற்றவேண்டும்! ஒரு மொழியில் பேசினால் அல்லது எழுதினால், அதை மற்றொரு மொழியில் மொழிபெயர்த்துத் தரவேண்டும். ஒரு புத்தகத்தைப் படித்து, புரிந்துகொண்டு, அதன் சுருக்கத்தைத் தரவேண்டும்!

இதுபோன்ற வசதிகளைக் கணினிவாயிலாக நாம் பெறவேண்டும் என்றால்.... நமக்கு உள்ள மொழி அறிவை அதற்கு அளிக்கவேண்டும்! இங்கு நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான ஒன்று... மனிதமூளைக்கு உள்ள இயற்கைமொழித்திறன் கணினிக்குக் கிடையாது. கருத்தாடல் நடைபெறுகிற புறச் சூழல், பேசப்படுகிற பொருள் ஆகியவற்றை எல்லாம் இப்போது கணினிக்கு நம்மால் கொடுக்க இயலாது.

இந்தச் சூழலில்... தனக்குக் கொடுக்கப்படுகிற விதிகளின் அடிப்படையில் அமைந்த தொடர்களைத்தான் கணினியால் புரிந்துகொள்ளமுடியும்! ! மாறாக, நாம் மேற்கூறிய (மனிதமூளையின்)''பிழைதிருத்தப் பணிகளை'' கணினியும் மேற்கொண்டு, தனக்குமுன் வைக்கப்படுகிற விதிகளுக்கு அப்பாற்பட்ட தவறான தொடர்களைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு! விதி என்றால் விதி! முழுக்க முழுக்கக் கணித அடிப்படையில் இயங்குகிற ஒன்றே கணினி! எனவே விதிகளில் தவறுகள் இருந்தால், அவற்றை நம் மூளை திருத்திக்கொண்டு, புரிந்துகொள்வதுபோல, கணினியும் திருத்திக்கொண்டு, பொருண்மையைப் புரிந்துகொள்ளும் என்று நினைப்பது தவறானது ! இதுதான் புறவய உண்மை!

எனவே இன்றைய கணினி உலகில் முறையாக... தமிழின் கட்டமைப்பை ... இலக்கண விதிகளை ... முறையாகக் கணினிக்குக் கற்றுக் கொடுக்கவேண்டியது இன்று தமிழ் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான பணியாகும்! எனவே இந்த இலக்கண விதிகளைச் சரியாக நாம் புரிந்துகொள்ளவில்லை என்றாலோ அல்லது தவறாகக் கணினிக்குக் கொடுத்தாலோ... கணினி தனது மொழிச்செயல்பாடுகளில் முன்னேறமுடியாது! தமிழைப் புரிந்துகொண்டு... நமக்கு உதவியாக ... கணினியால் செயல்படமுடியாது!

எனவே இன்றைய எழுத்துத்தமிழின் தரப்படுத்தம் மிக மிக முக்கியமான ஒரு பணியாகும்! ''நான் எப்படி வேண்டும் என்றாலும் பேசுவேன், எழுதுவேன். இருந்தாலும் அதைக் கேட்பவர்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு, பொருண்மையைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்'' என்று கூறுவது சரி இல்லை! இது ஒரு விதண்டாவாதமே ஆகும்!

நாமும் முறையாகத் தமிழைப் பயன்படுத்துவோம் .. (மாணவர்களுக்கும்) கணினிக்கும் முறையாகத் தமிழைக் கற்றுக்கொடுப்போம்! இதுவே தொன்மையும் தொடர்ச்சியும் வளர்ச்சியும் உடைய தமிழ்மொழியை அடுத்த உயர்கட்டத்திற்கு வளர்த்தெடுத்துச் செல்லும் பாதையாகும்!

தமிழைத் தமிழாக எழுதுங்கள்! ஆங்கிலத்தை ஆங்கிலமாக எழுதுங்கள்!

 

சந்தி , இலக்கண விதிகள் ஒருபுறம் இருக்கட்டும். எனது வினா ... தமிழகத்திலுள்ள மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் .... தமிழோ அல்லது ஆங்கிலமோ... எதுவாக இருந்தாலும்.... அந்த மொழியில் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இல்லாமல் எழுதமுடியாதா? அதுவும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிற விளம்பரப் பலகைகள், அறிவிப்புகள் போன்றவற்றில் தவறு இல்லாமல் மொழியைப் பயன்படுத்தமுடியாதா? அதற்கான கருத்துரைகளை வழங்கும் ஆசிரியர்கள் இருக்கமாட்டார்களா? ஆங்கிலமொழியைத் தவறு இல்லாமல் கையாளவேண்டுமென்று நினைக்கிற நிறுவனத்தார்கள்... தமிழ்மொழியைக் கையாளுவதில்மட்டும்.. ஏன் இவ்வாறு பொறுப்பு இல்லாமல் செயல்படுகிறார்கள்? தமிழ் என்றால் ஒரு இளக்காரம் இவர்களுக்கு என்பதுதான் எனது கருத்து. இந்த அலட்சியப்போக்கு கைவிடப்படவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஆங்கிலத்தை ஆங்கிலமாக எழுதுங்கள். அதுபோலத் தமிழைத் தமிழாக எழுதுங்கள்.

தமிழ் என்றால் எந்தத் தவறும் செய்யலாம் தமிழ்நாட்டில்!

 

தமிழ் என்றால் எந்தத் தவறும் செய்யலாம் தமிழ்நாட்டில்!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விளம்பரப் பலகைகளில் ஆங்கிலம் என்றால், ஒரு தவறும் இல்லாமல் எழுதுகிறார்கள் ... குறிப்பாகப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில்! ஏதாவது தவறு என்று என்றால் 'ஐயையோ' என்று 'பதறி' உடனே திருத்திவிடுகிறார்கள்! இல்லையென்றால் ''நம்மைப் படிக்காதவர்கள்'' என்று மற்றவர்கள் சொல்லிவிடுவார்கள் என்ற ஒரு அச்சம்!

ஆனால்.... தமிழ் என்றால்! தவறுகள் செய்யலாம்! யாராவது கேட்டால் ... ''எனக்குத் தமிழ் சரியாக வராது'' என்று 'பெருமையுடன்' சொல்லிக்கொள்ளலாம்! இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை!

சென்னை அடையாறில் உள்ள IIT ( Indian Institute of Technology) வளாகத்தின் முகப்பில் கொட்டை எழுத்துக்களில் எழுதியுள்ளார்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும்! தமிழில் '' இந்திய தொழில்நுட்ப நிறுவனம்'' என்று எழுதப்பெற்றுள்ளது! வழக்கம்போல ... தமிழாசிரியர் ''பார்வையில்'' அதைப் பார்த்தேன். ''இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமா'' அல்லது ''இந்திய தொழில்நுட்ப நிறுவனமா?'' என்று! ''இந்திய'' என்பதற்குப் பிறகு ''த்'' ஒற்று வருமா வராதா என்ற ஒரு ஐயம் ! வரவேண்டும் என்றுதான் எனது ''தமிழறிவுக்குத்'' தோன்றியது! இருந்தாலும் எனக்கு ஐயம் நீடித்தது.

பேராசிரியர் பொற்கோ அவர்களைத் தொடர்புகொண்டு, ''எது ஐயா சரி '' என்று கேட்டேன். அவர் உடனே ''அதில் என்ன ஐயம்? உறுதியாக வரவேண்டும்'' என்று கூறினார்.

ஆங்கிலத்தில் ஏதாவது தவறு செய்வார்களா .. அதுவும் இதுபோன்ற உயர் கல்வி நிறுவனத்தார்கள்! ஆனால் தமிழ் என்றால் ? ''இந்த அளவிற்காகவாவது தமிழில் எழுதியுள்ளார்களே என்று பாராட்டுவதைவிட்டுவிட்டு, ஒற்றுப்பிழைகளையெல்லாம் கணக்கில் கொள்ளலாமா என்று கூட சிலர் நண்பர்கள் கேட்கலாம்!

ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் இவ்வாறு தவறு செய்யலாமா?

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

வாசு ரங்கநாதன் (அமெரிக்கா)

சொல்லொனியல் (Lexical Phonology) மற்றும் ஆளுமைக் கோட்பாடு (Government and Binding) ஆகிய மொழியியற் கோட்பாடுகளிலும் ஒற்று மிகுதல் குறித்துச் சில விளக்கங்கள் இருக்கின்றன. எந்தப் பெயரிலும் கடைசி எழுத்தை நீக்கிப் பெயரடை உருவாக்கினால் விடுபட்ட எழுத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது. அதனால் அங்கு கட்டாயமாக ஒற்று மிகும். எடுத்துக்காட்டாக, மரம் > மர > மரப் பெட்டி; பழக் கடை போன்றவை. இந்தியத் தொழிற் நுட்ப நிறுவனம் என்பதும் இதில் அடங்கும். அதே போன்று ஒரு பெயரடையை ஒரு பெயரிலிருந்து வேரில் ஒரு மாற்றத்தோடு ஏற்படுத்தினால் அங்கு ஒற்று மிகும். அது > அந்த > அந்தப் பையன். ஆனால் பல, சில, பெரிய, சிறிய போன்றவை அப்படி அல்ல. அவற்றைப் பெயரடையாகவே அகராதியில் காண்கிறோம். அதனால் அவற்றுக்கு முன் ஒற்று மிகாது. இன்னொரு இடம் க்கு, ஐ வேற்றுமைக்கு முன்னாலும் ஆக, ஆய் வினையடை முன்னும் கட்டாயம் ஒற்று மிகும். இதற்குக் காரணம் அத்தகைய பெயர்த் தொடர்களும் வினையடையும் வினைக்கு நேரடிக் கட்டுப்பாட்டில் அமைகின்றன. நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் அடைகளுக்கு முன் ஒற்று மிகும் சூழலில் இருந்தால் அங்கு மிகும். இதன் அடிப்படையில்தான் பார்த்து, கேட்டு போன்ற வினையெச்சத்துக்கு முன் ஒற்று மிகும் நிலையும். செய்து, வந்து போன்றவற்றில் மிகாது. ஏனெனில் ந்து, து போன்றவை மெல்லொலிக் கூட்டுகள். ட்டு, த்து போன்றவை வல்லொலிக் கூட்டுகள். அங்கு, இங்கு பொன்றவையும் அப்படியே. இவை மெல்லொலிக் கூட்டு கொண்டவை.

ஒரு நண்பர் பாடநூல் சரியா, பாட நூல் சரியா? பயிற்சிப் புத்தகம் சரியா? பயிற்சிப்புத்தகம் சரியா என்று கேட்டார். மேற்படி விதியின் படி பாடம் என்பதிலிருந்து பாட என்று வருகிறது. அந்த வெற்றிடத்தை முழுமை செய்ய பாடநூல் என்றே எழுதவேண்டும். பாட நூல் என வெற்றிடத்தோடு எழுதுவது சரியல்ல. ஆனால் பயிற்சிப் புத்தகம் என்பதில் அப்படி வெற்றிடம் ஏற்படுவதில்லை அதனால் இடைவெளி வேண்டும். (பழக்கடை, கடை வீதி...).

இப்படி தொல்காப்பிய விதிகள் மட்டுமன்றி இக்கால இலக்கணங்களின் அடிப்படையிலும் தமிழுக்குச் சரியான விதிமுறைகளைக் கொடுத்து ஒவ்வொரு தவறுக்கும் அடிப்படைக் காரணத்தைக் கொடுக்காவிடில் தமிழில் தொடர்ந்து தவறுகளைக் காணத்தான் வேண்டியிருக்கும். என்னுடைய இக்காலத் தொல்காப்பிய மரபு நூலில் இதை முயற்சித்திருக்கிறேன். அரசு மற்றும் பல்கலைக் கழகங்கள் தமிழின் சரியான நிலையை உறுதிப்படுத்தித் தவறாகப் பயன்படுத்தினாலோ திரைப்படங்கள், பொது இடங்கள் போன்ற இடங்களில் அவதூறாகத் தமிழைப் பயன்படுத்தினாலோ அதற்கான தண்டனையைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இல்லையெனில் இத்தகைய தவறுகள் நீடிக்கத்தான் செய்யும்.

ஆங்கிலத்தில் எந்த நிலையில் தவறு செய்தாலும் அதற்கான தண்டனை அவர்களுக்கு நேராகவோ மறைமுகமாகவோ கிடைக்கிறது. பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலத்தில் தவறு செய்தால் அவர்களுக்குச் சரியான மதிப்பெண் கிடைப்பதில்லை. கட்டுரையில் சரியான ஆங்கிலம் இல்லையெனில் எந்த ஆய்வேடும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இப்படி சரியான தமிழுக்கும் ஒரு முறைமையை ஏற்படுத்தவேண்டிய கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India