நேற்று இன்ஃபோசிஸ் 400 பேரை வெளியேற்றியதையொட்டி நானும் நண்பர் மாலன் அவர்களும் எழுதிய உரையாடலின் தொடர்ச்சி இது . . . (பகுதி 3)
-----------------------------------------------------------------------
நண்பர் திரு மாலன் அவர்கள்
------------------------------------------------
அம்பானி அதானியைப் பற்றிப் பேசவில்லை உங்கள் குடும்பப் பின்னணி எனக்குத் தெரியாது. ஆனால் எத்தனையோ பேர் தங்கள் தந்தையர் வாழ்ந்ததை விடப் பொருளாதாரத்தில் மேம்பட்ட வாழவை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தந்தை கிராமப்புற ப்ள்ளி ஆசிரியராக சில நூற் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்திருப்பார். அவர் மகன் பல்கலைக்கழகப் பேராசிரியரக, வங்கி அதிகாரியாக, ஏதோ ஒரு நிறுவன நிர்வாகியாக, மருத்துவராக, பொறியாளராக, கணக்கராக அவர் தந்தையை விட பல மடங்கு வருமானம் ஈட்டுபவராக இருப்பார். இவர்கள் யாரைச் சுரண்டி வளர்ந்தார்கள்? இந்தியா சோஷலிசக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்த காலத்தில் போன், வாகனம், சமையல் உருளை, ம்எல்லாவற்றிற்கும் வரிசை. கிடைக்க ஆண்டுக் கணக்காகும் இன்று இளைஞர்கள்35-40 வயதுக்குள் வீடு வாங்குகிறார்கள் வீட்டின் விலை பல லட்சம் ஒவ்வொரும் வாகனம் வைத்திருக்கிறார்கள் இரண்டு போன் வைத்திருக்கிறார்கள் பெற்றோர்கள் அயலகப் பயணம் போகிறார்கள் 90 களுக்குப்பின் இந்தியாவின் மத்தியதர வர்க்கம் வளர்ந்திருக்கிறது எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது அந்த வர்க்கம் கல்வியால், உழைப்பால், திறனால் முன்னேறிய வர்க்கம் எவரையும் சுரண்டி வளர்ந்த வர்க்கமல்ல.
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------------------------------------
நண்பர் மாலன் அவர்களே. தங்களுடைய கல்விப் பின்னணி எனக்குத் தெரியும், தங்களுடைய அறிவுத்திறனும் எனக்குத் தெரியும். தங்களுடைய நீண்ட அனுபவமும் எனக்குத் தெரியும். உண்மையில் இதில் தங்களுக்கு அருகில்கூட என்னால் வரமுடியாது.
இவ்வளவு திறமை, அறிவு உள்ள தங்களுக்கு வறுமைக்கு, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு , இன்றைய மோசமான பொருளாதாரச் சூழலுக்கு . . . காரணங்கள் தெரியாமலா இருக்கும்? தங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்லித் தங்களுக்குத் தெரியவேண்டியது எதுவும் இல்லை.
ஒன்றே ஒன்றில்தான் நாம் வேறுபடுகிறோம். உலகக் கண்ணோட்டம், தத்துவார்த்த நோக்கு, வர்க்க நலன்கள் இவற்றில்தான் வேறுபாடு. இந்த வேறுபாடுதான் ஒரு பிரச்சினையை வேறுபட்ட நோக்கில் பார்க்கவைக்கிறது. சரிதானே!
இதைத் தாங்கள் மறுக்கலாம். ஆனால் வெளிப்படையாகக் கூறுகிறேன் . . .
என்னுடைய உலகக்கண்ணோட்டம், தத்துவப் பின்னணி மார்க்சியம்தான் என்று! இதில் ஒளிவுமறைவு எனக்குத் தேவை இல்லை!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக