இருவேறு கண்ணோட்டங்கள் . . . நண்பர் மாலன் அவர்களும் நானும்! (பகுதி 1)
---------------------------------------------------------
இன்ஃபோசிஸ் கணினி நிறுவனத்தில் ஒரே நேரத்தில் 400 இளம் பொறியாளர்கள் வேலை இழப்பு . . . பயிற்சியில் தேறவில்லை என்று ஒரேநாளில் இடத்தைக் காலிசெய்யுங்கள் என்று ஈவிரக்கமில்லாமல் இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறியுள்ளதாக ஒரு நாளிதழில் வெளிவந்த செய்தியை முகநூலில் பதிவிட்டேன். அது தொடர்பாக நண்பர் மாலன் அவர்கள் கருத்தும் அவரது கருத்தின்மீதான எனது கருத்தும் . . .
---------------------------------------------------
பயிற்சியில் தேறாத டிரெய்னீஸை என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?
ந. தெய்வ சுந்தரம்
----------------------------------------------------------
ஒருவர் வறுமையின் விளைவாகப் பசியால் துடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் அதைப்பார்த்துவிட்டு' இது அவர் செய்த பாவம். அதன் விளைவை அனுபவிக்கிறார்' என்று சொல்லிவிட்டுப்போவார். மாறாக, மனித அபிமானமும் சமூக உணர்வும் உள்ள ஒருவர் 'அய்யோ, பாவம், எதற்கு இவருக்கு இந்தக் கொடுமை? ' என்று எண்ணுவார்.
ஆகவே எந்தவொரு பிரச்சினையையும் அதைப் பார்க்கிறவரின் உலகக் கண்ணோட்டதைப் பொறுத்து உள்ளது.
இதுவே நண்பர் மாலன் அவர்களுக்கு எனது பதில்!
அவர் கண்ணோட்டம் அப்படி! என் கண்ணோட்டம் இப்படி. ஒவ்வொருவரின் தத்துவப் பின்னணியும் எந்தவொரு பிரச்சினையையும் பார்க்கும் கோணத்தைத் தீர்மானிக்கும்.
எனக்கு 'வேலையைவிட்டு நீக்கப்பட்ட 400 பேர்களும் என்ன செய்வார்கள்?' என்ற சிந்தனை. நான் பாதிக்கப்பட்டவர்களின் 'நியாயத்தை' முன்வைக்கிறேன்.
நண்பருக்கு' அவர்கள் பயிற்சியில் தேறவில்லை. அதற்கு என்ன செய்யமுடியும்? தகுதியில்லாதவர்களைவைத்து ஏன் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது தொழிலை நடத்தவேண்டும்?' என்று அவர் 'நியாயத்தை' ;இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நியாயத்தை' முன்வைக்கிறார்.
''பொது நியாயங்கள்'' என்று ஒன்று இருக்கமுடியாது! ஒரு வர்க்கத்தின் 'நியாயம்' , எதிர் வர்க்கத்திற்கு 'அநியாயம்தான்'!
எந்தவொரு சமுதாயப் பிரச்சினையிலும் இந்த இருவேறு கண்ணோட்டம் உள்ளவர்கள் ஒரே முடிவுக்கு வரமுடியாது! இதில் எனக்குத் தெளிவு உண்டு!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக