தமிழில் வினைகளிலிருந்து ஆக்கப்பெயர்கள் உருவாக்கத்தில் ஒரு வியக்கத்தக்க ஒழுங்கமைவு (முகநூலின் வேறு ஒரு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இது.)
---------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழில் கால விகுதிகள் அடிப்படையில் வினைச்சொற்கள் வகைப்படுத்துகிறார்கள். இந்த வகைப்பாட்டில் வேறுபாடுகள் இருக்கலாம். நான் தமிழ் லெக்சிகனில் கொடுக்கப்பட்டுள்ள 12 வகைப்பாடுகள் அடிப்படையில் கீழ்க்கண்ட ஒழுங்கைப் பார்க்கிறேன்.
4, 11 ஆவது ('அசை' என்னும் வினை 4, 11 இரண்டிலும் வரும். அசைகிறேன், அசைந்தேன், அசைவேன் ; அசைக்கிறேன், அசைத்தேன், அசைப்பேன்) அசை - அசைவு , அசைப்பு ; அமை - அமைவு , அமைப்பு ; அழி - அழிவு, அழிப்பு; இணை - இணைவு, இணைப்பு; ஒழி - ஒழிவு, ஒழிப்பு
(செய்வினை- செயப்பாட்டு வினை, தன்வினை - பிறவினை போன்ற பண்புக்கூறுகளுக்கும் இங்கு இடம் உண்டு. 4-ஆவது வகைப்பாட்டில் அடங்குகிற வினைகள் செயப்படுபொருளை எடுக்காது' 11 ஆவது வகைப்பாட்டில் அடங்குகிற வினைகள் செயப்படுபொருளை எடுக்கும்)
11-ஆவது காலவகைப்பாடான -க்கிறு - த்த்- ப்ப் என்பதிலும் 12 -ஆவது காலவகைப்பாடான -க்கிறு-ந்த்-ப்ப் என்பதிலும் அடங்குகிற வினைகள் பொதுவாக -ப்பு எடுக்கிறது.
11 ஆவது : அணிவி (அணிவிப்பு), அலங்கரி (அலங்கரிப்பு), அவமதி (அவமதிப்பு), அழை (அழைப்பு), இரட்சி (இரட்சிப்பு), இளை (இளைப்பு).
12 ஆவது : கச (கசப்பு), கல (கலப்பு), கற (கறப்பு), இழ (இழப்பு), சிற (சிறப்பு), பிற (பிறப்பு)
பொதுவாக ஆக்கப்பெயர்களின் உருவாக்கத்தில் ஒழுங்கு இருப்பது கடினம். ஆனால் தமிழ் வினைகளிலிருந்து ஆக்கப்பெயர்கள் உருவாகும்போது, குறிப்பிட்ட வினையின் கால வகைப்பாடு ஆக்கப்பெயர் உருவாக்கத்தில் ஒரு ஒழுங்கைத் தருவதாக இருக்கிறது. அதாவது ஒரு வினையின் கால வகைப்பாட்டுக்கும் அந்த வினையிலிருந்து பிறக்கிற ஆக்கப்பெயர்களுக்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.


9:51 PM
ந.தெய்வ சுந்தரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக