தமிழகப் பள்ளிக் கல்வியில் மும்மொழிக்கொள்கையைத் திணிக்கும் நடுவண் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்ப்போம் !
-------------------------------------------------------------------------
தமிழ்நாடு அரசு தமிழகத்துப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் . . . கல்வி முன்னேற்றத்திற்கான நிதி நல்குவோம் என்ற நடுவண் அரசின் மிரட்டலும் முடிவும் . . .
முழுக்க முழுக்க ஒரு ஜனநாயகவிரோத முடிவு!
வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒரு முடிவு!
பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒரு குடியரசு நாட்டில் , ஐனநாயக மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் இந்திமொழியைத் திணிக்கிற இந்த முடிவைக் கடுமையாக எதிர்க்கவேண்டும்!
அதேவேளையில் தேசிய இனங்கள் தங்கள் தாய்மொழியையே முழுமையாக . . . கல்வி உட்பட - அனைத்துத்துறைகளிலும் தக்கவைக்கவேண்டும் !
தமிழகத்தில் ஆங்கிலம் உட்பட எந்தவொரு அந்நியமொழியும் தாய்மொழியான தமிழ்மொழியை ஆதிக்கம் செலுத்தக்கூடாது! ஆங்கில மோகம் கூடாது! இது ஒரு பொதுக்கோரிக்கை. பயிற்றுமொழி உட்பட அனைத்திலும் தமிழ்மொழியே நீடித்தல் வேண்டும்! தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளும் அரசும் இதில் தெளிவான முடிவு எடுத்துச் செயல்படவேண்டும்!
ஆனால் இன்றைக்கு நடுவண் அரசின் மிரட்டலே முதன்மையான முரண்பாடு!
அந்த வகையில் தமிழக அரசும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நின்று . . . நடுவண் அரசின் மொழிப் பாசிசத்தை எதிர்த்து உறுதியாகப் போராடவேண்டும்!
மும்மொழித்திட்டத்தை எதிர்த்து நிற்கவேண்டும்!
பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒரு குடியரசு நாட்டில் . . . ஒரு ஜனநாயக மொழிக்கொள்கை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதுபற்றிய சில பதிவுகளை ஏற்கனவே நான் முகநூலில் இட்டுள்ளேன். அவற்றைத் தொகுத்து இன்று எனது கீழ்க்கண்ட வலைப்பக்கத்தில் இட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக