'சில', 'பல' - எண்ணுப்பெயரடைகளா, எண்ணுப்பெயர்களா? ஒரு குழப்பம் எனக்கு! தமிழ் ஆய்வாளர்கள் தயவுசெய்து உதவவும்.
------------- -------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கருத்து:
-----------------
‘சில’, ‘பல’ என்பவை எண்ணுப்பெயரடைகளாகவும் (Quantifier) ‘சிலர்’, ‘பலர்’ என்பவை பால் ஈறுபெற்ற எண்ணுப்பெயர்களாகவும் பயன்படுகின்றன.
மேற்கண்ட வாக்கியங்களில் ‘மாணவர்கள்’ ‘புத்தகங்கள்’ ஆகியவற்றின் எண்ணிக்கையைச் ‘சிலர்’ ‘சில’ என்பவை குறித்து நிற்கின்றன.
‘சில’ என்னும் எண்ணுப்பெயரடை , பலர்பால் பாலீறு ஏற்று ‘சிலர்’ எனவும், ‘பல’ என்னும் எண்ணுப்பெயரடை ‘பலர்’ எனவும் அமைகின்றன. ‘ஒரு’ என்னும் எண்ணுப்பெயரடை ‘அர்’ என்னும் பாலீறு பெற்று ‘ஒருவர்’ என்று அமைவதுபோல, ‘சில’ ‘பல’ என்பவையும் ‘சிலர்’ ‘பலர்’ என்று அமைகின்றன.
‘மாணவர்கள்’ என்னும் பெயர்ச்சொல் பன்மை விகுதி பெற்றிருப்பதால், அவர்களைக் குறித்து நிற்கிற ‘சிலர்’ ‘பலர்’ என்னும் சொல்லும் ஒன்றுக்குமேற்பட்ட மாணவர்களைக் குறிக்கின்றன.
மற்றொரு கருத்து:
-------------------------------------------------------
‘சில’ ‘பல’ என்பவை வேற்றுமைகளை ஏற்பதால், அவற்றை அஃறிணை ‘எண்ணுப் பெயராகவும்’ கொள்ளலாம். இங்கு ‘அவை’ ‘இவை’ என்னும் அஃறிணைப் பதிலிடு பெயர்கள் வேற்றுமைகள் ஏற்று, ‘அவற்றை’ ‘இவற்றை’ என்று மாறி அமைவதை ஒப்பிட்டு நோக்கலாம்.
‘ஆசிரியர் பல புத்தகங்கள் வாங்கினார்’
‘ஆசிரியர் புத்தகங்கள் பலவற்றை வாங்கினார்’
‘ஆசிரியர் சில புத்தகங்கள் வாங்கினார்’
‘ஆசிரியர் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினார்’
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளிலும் ‘பல + அற்று (சாரியை) , பலவற்று + ஐ --> பலவற்றை’ என்றும் அதுபோன்றே ‘சில + அற்று --> சிலவற்று + ஐ --> சிலவற்றை’ என்றும் மாறுகின்றன.
‘சில / பல புத்தகங்கள்’ என்று வரலாம்; ஆனால், ‘சில / பல மாணவர்கள்’ என்று வரக்கூடாது; அதற்குக் காரணம், ‘மாணவர்கள்’ உயர்திணை; எனவே, ‘மாணவர்கள் சிலர் / பலர்’ என்றுதான் கூறவேண்டும் என்னும் கருத்தும் உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக