புதன், 30 ஏப்ரல், 2025

படித்த மாணவர்கள் தங்களுக்குரிய பணிகளைப் பெறுவது என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக இருக்கவேண்டும் . . .

 

படித்த மாணவர்கள் தங்களுக்குரிய பணிகளைப் பெறுவது என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக இருக்கவேண்டும் . . .

-----------------------------------------------------------------------

மற்றொரு பதிவில் பல்கலைக்கழகங்கள், துறைகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தேன்!

மாணவர்களுக்கு என்ன பிரச்சினை? எந்தப் படிப்புக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் கண்ணீர் சிந்தும் வேலையில்லாப் பட்டதாரிகள்! இது மிகப் பெரிய கொடுமை.

இலக்கியம், மொழி, அறிவியல் துறைகள் அத்தனையிலும் இப்பிரச்சினை! எப்போதாவது நடைபெறும் பணிநியமனத்தில் இலட்சங்கள் இல்லாமல் வேலை பெறமுடியாது! பிறகு எதற்கு இத்தனைப் படிப்புகள் . . . கல்லூரிகள் . . . பல்கலைக்கழகங்கள்?

வேலையில்லாப் பட்டாளத்தைப் பெரிதாக்குவதற்கே இத்தனைப் படிப்புகள்! ஒரு நாடு தனது இளைஞர்களுக்கு . . . பட்டதாரிகளுக்கு . . . வேலை கொடுக்கமுடியவில்லையென்றால், அது 'தோல்வியடைந்த நாடே ("failed State' Noam Chomsky)! பொருள் உற்பத்தி உயர்நிலை அடைய அடையத்தான் வேலை வாய்ப்பு பெருகும்! இரண்டும் நேர் விகிதத்தில் இருக்கவேண்டும்!

மலேசியாவில் சில ஆண்டுகளுக்குமுன்வரை . . . ஆசிரியர் பணிக்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவையோ அதற்கேற்பத்தான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் படித்து வெளிவந்தவுடன் வேலை உத்திரவாதம் உண்டு.

அதுபோன்ற ஒரு நிலை அனைத்துப் படிப்பு மாணவர்களுக்கும் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் வெறும் பட்டம்பெற்றதற்கான காகிதத்தைக் கொடுத்துவிட்டு, நடுத்தெருவில் விட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? மாநில அரசுகளும் நடுவண் அரசும் இதற்கான திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தமுடியாதா?

ஆங்கிலம் தேவையா இந்தி தேவையா, தாய்மொழி தேவையா, நீட் தேர்வு தேவையா போன்றவற்றைப்பற்றிப் பேசுகிறவர்கள் இதைப்பற்றியும் பேசவேண்டும்.

இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட படிப்பை முடித்தவருக்கு அத்துறையில் வேலை பெறுவது என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.

இப்பிரச்சினைகள்பற்றி எந்தவொரு அரசியல் கட்சியும் பேசுவதில்லை. அவற்றிற்கு இப்போது 'பூத் கமிட்டி' 'கூட்டணி' 'பணப்பரிமாற்றம்' . . . அவைதான் அடிப்படைப் பிரச்சினைகள்! வேலையில்லாத் திண்டாட்டத்தை எவ்வாறு தீர்ப்பது என்பதுபற்றித் தமிழகத்தின் பழைய அரசியல் கட்சிகள், இன்றைய நடிகர்கள் கட்சிகள் உட்பட எந்தக் கட்சிக்காவது தெளிவான திட்டம் உண்டா? இளைஞர்கள் கேட்கவேண்டும்! ஒவ்வொரு கட்சியும் இதற்கான தெளிவான திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்று இளைஞர்கள் கேட்கவேண்டும்!

ஒரு மடங்கு 'இலவசத்தைக்' கொடுத்துவிட்டு பல மடங்கு 'பணத்தைச்' சுருட்டும் கட்சிகளிடம் இளைஞர்கள் இந்தக் கேள்வியை முன்வைக்கவேண்டும். தொகுதிக்கு வாக்கு கேட்டுவரும் வேட்பாளர்களிடம் இதுபற்றி வெளிப்படையாகக் கேட்கவேண்டும். அப்போதுதான் அவர்களது 'அரசியல் அறிவும் உணர்வும்' வெளியே அம்பலமாகும்!

-----------------------------------------------------------------------

மற்றொரு பதிவில் பல்கலைக்கழகங்கள், துறைகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தேன்!

மாணவர்களுக்கு என்ன பிரச்சினை? எந்தப் படிப்புக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் கண்ணீர் சிந்தும் வேலையில்லாப் பட்டதாரிகள்! இது மிகப் பெரிய கொடுமை.

இலக்கியம், மொழி, அறிவியல் துறைகள் அத்தனையிலும் இப்பிரச்சினை! எப்போதாவது நடைபெறும் பணிநியமனத்தில் இலட்சங்கள் இல்லாமல் வேலை பெறமுடியாது! பிறகு எதற்கு இத்தனைப் படிப்புகள் . . . கல்லூரிகள் . . . பல்கலைக்கழகங்கள்?

வேலையில்லாப் பட்டாளத்தைப் பெரிதாக்குவதற்கே இத்தனைப் படிப்புகள்! ஒரு நாடு தனது இளைஞர்களுக்கு . . . பட்டதாரிகளுக்கு . . . வேலை கொடுக்கமுடியவில்லையென்றால், அது 'தோல்வியடைந்த நாடே ("failed State' Noam Chomsky)! பொருள் உற்பத்தி உயர்நிலை அடைய அடையத்தான் வேலை வாய்ப்பு பெருகும்! இரண்டும் நேர் விகிதத்தில் இருக்கவேண்டும்!

மலேசியாவில் சில ஆண்டுகளுக்குமுன்வரை . . . ஆசிரியர் பணிக்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவையோ அதற்கேற்பத்தான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் படித்து வெளிவந்தவுடன் வேலை உத்திரவாதம் உண்டு.

அதுபோன்ற ஒரு நிலை அனைத்துப் படிப்பு மாணவர்களுக்கும் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் வெறும் பட்டம்பெற்றதற்கான காகிதத்தைக் கொடுத்துவிட்டு, நடுத்தெருவில் விட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? மாநில அரசுகளும் நடுவண் அரசும் இதற்கான திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தமுடியாதா?

ஆங்கிலம் தேவையா இந்தி தேவையா, தாய்மொழி தேவையா, நீட் தேர்வு தேவையா போன்றவற்றைப்பற்றிப் பேசுகிறவர்கள் இதைப்பற்றியும் பேசவேண்டும்.

இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட படிப்பை முடித்தவருக்கு அத்துறையில் வேலை பெறுவது என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.

இப்பிரச்சினைகள்பற்றி எந்தவொரு அரசியல் கட்சியும் பேசுவதில்லை. அவற்றிற்கு இப்போது 'பூத் கமிட்டி' 'கூட்டணி' 'பணப்பரிமாற்றம்' . . . அவைதான் அடிப்படைப் பிரச்சினைகள்! வேலையில்லாத் திண்டாட்டத்தை எவ்வாறு தீர்ப்பது என்பதுபற்றித் தமிழகத்தின் பழைய அரசியல் கட்சிகள், இன்றைய நடிகர்கள் கட்சிகள் உட்பட எந்தக் கட்சிக்காவது தெளிவான திட்டம் உண்டா? இளைஞர்கள் கேட்கவேண்டும்! ஒவ்வொரு கட்சியும் இதற்கான தெளிவான திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்று இளைஞர்கள் கேட்கவேண்டும்!

ஒரு மடங்கு 'இலவசத்தைக்' கொடுத்துவிட்டு பல மடங்கு 'பணத்தைச்' சுருட்டும் கட்சிகளிடம் இளைஞர்கள் இந்தக் கேள்வியை முன்வைக்கவேண்டும். தொகுதிக்கு வாக்கு கேட்டுவரும் வேட்பாளர்களிடம் இதுபற்றி வெளிப்படையாகக் கேட்கவேண்டும். அப்போதுதான் அவர்களது 'அரசியல் அறிவும் உணர்வும்' வெளியே அம்பலமாகும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India