தாய்ப்பல்கலைக்கழகமான
சென்னைப் பல்கலைக்கழகத்தின் அவலநிலை ! கவனிப்பார் அற்ற பல்கலைக்கழகமாக மாறி
நிற்கிறது!
--------------------------------------------------------------------------
1857 இல்
தொடங்கிய சென்னைப் பல்கலைக்கழகம் . . .168 ஆண்டுகால வரலாறுச்சிறப்பு உடைய பல்கலைக்கழகம் . . .
சுமார் 70 துறைகளை
உடைய பல்கலைக்கழகம் . . . மிகப்பெரிய அறிஞர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகம் . . .
மிகப் பெரிய அறிஞர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம் . . .
இந்தியாவின் சிறந்த ஐந்து
பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, Potential
of Excellence தகுதி பெற்ற
பல்கலைக்கழகம்! ஐந்து நட்சத்திரத் தகுதிபெற்ற பல்கலைக்கழகம்! தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின்
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தாய்ப் பல்கலைக்கழகம்!
இன்றைய நிலை . . . மிகப் பரிதாபமான நிலை! பல
துறைகளில் ஆசிரியர்களே கிடையாது - அறிவியல்துறைகள், மருத்துவம்சார்த் துறைகள் உட்பட! ஓராசிரியர்கூட
இல்லாத துறைகள் பல!
இன்னும் ஓரிரு ஆண்டுகளில்
அனைத்துத் துறைகளிலும் ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்படவிருக்கிறது!
நினைத்துப்பார்க்க முடியாத
ஒரு அவலநிலை!
ஏன்
இந்த அவலநிலை? கடந்த
சில ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்துவருகிறது! ஆளுநர் - தமிழ்நாடு அரசு
முரண்பாடுகள் எல்லாம் தற்போது ஏற்பட்ட ஒன்றே! அதற்கு முன்னாலேயே இந்த நிலை
தொடங்கிவிட்டது!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக