புதன், 30 ஏப்ரல், 2025

தாய்ப்பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் அவலநிலை ! கவனிப்பார் அற்ற பல்கலைக்கழகமாக மாறி நிற்கிறது!

 

தாய்ப்பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் அவலநிலை ! கவனிப்பார் அற்ற பல்கலைக்கழகமாக மாறி நிற்கிறது!

--------------------------------------------------------------------------

1857 இல் தொடங்கிய சென்னைப் பல்கலைக்கழகம் . . .168 ஆண்டுகால வரலாறுச்சிறப்பு உடைய பல்கலைக்கழகம் . . . சுமார் 70 துறைகளை உடைய பல்கலைக்கழகம் . . . மிகப்பெரிய அறிஞர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகம் . . . மிகப் பெரிய அறிஞர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம் . . .

இந்தியாவின் சிறந்த ஐந்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, Potential of Excellence தகுதி பெற்ற பல்கலைக்கழகம்! ஐந்து நட்சத்திரத் தகுதிபெற்ற பல்கலைக்கழகம்! தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தாய்ப் பல்கலைக்கழகம்!

இன்றைய நிலை . . . மிகப் பரிதாபமான நிலை! பல துறைகளில் ஆசிரியர்களே கிடையாது - அறிவியல்துறைகள், மருத்துவம்சார்த் துறைகள் உட்பட! ஓராசிரியர்கூட இல்லாத துறைகள் பல!

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்படவிருக்கிறது!

நினைத்துப்பார்க்க முடியாத ஒரு அவலநிலை!

ஏன் இந்த அவலநிலை? கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்துவருகிறது! ஆளுநர் - தமிழ்நாடு அரசு முரண்பாடுகள் எல்லாம் தற்போது ஏற்பட்ட ஒன்றே! அதற்கு முன்னாலேயே இந்த நிலை தொடங்கிவிட்டது!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India