புதன், 30 ஏப்ரல், 2025

தற்போதைய கல்வியை இந்தியாவில் தீர்மானிப்பது யார்? உள்நாட்டு வளர்ச்சிக்கான கல்வியா? அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கான கல்வியா?

 

தற்போதைய கல்வியை இந்தியாவில் தீர்மானிப்பது யார்? உள்நாட்டு வளர்ச்சிக்கான கல்வியா? அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கான கல்வியா?

------------------------------------------------------------------------

சீனம் விடுதலை அடைந்தது 1949 அக்டோபர் 1-ஆம் தேதி. மாசேதுங்கின் தலைமையிலான பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்தியா 1947 - ஆகஸ்டு 15 ஆம் நாள் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியிலிருந்து விடுபட்டது. நம்மைவிட இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர்தான் சீனம் விடுதலை அடைந்தது. நம்மைவிட மக்கள்தொகை அதிகமான நாடு அது. வறுமையில் வாடிய நாடு அது.

ஆனால் அதனுடைய இன்றைய வளர்ச்சி . . . மேலைநாடுகளுக்கெல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இன்று சீனம் தடம்மாறி, ஏகாதிபத்தியமாக மாறி இருக்கிறது. ஏகாதிபத்திய பாதையில் நடைபோடுகிறது. அது வேறு.

ஆனால் மாவோவின் தலைமையில்தான் இன்றைய அத்தனை வளர்ச்சிக்கும் அடித்தளம் இடப்பட்டது. விவசாயம், தொழில் உற்பத்தி இரண்டுமே திட்டமிட்டு, உள்நாட்டு மூலதனத்தை வைத்துக்கொண்டு வளர்க்கப்பட்டது. அனைத்துத் துறைகளில் தலைநிமிர்ந்து நிற்கிறது!

ஆனால் இந்தியாவின் இன்றைய நிலை . . . அனைத்துக்கும் ஏகாதிபத்திய நாடுகளைச் சார்ந்துதான் உள்ளது. ஏன் இந்த நிலை? நிலங்கள் இல்லையா? உழைப்பதற்குக் கரங்கள் இல்லையா? பீடியைத் தவிர - பற்பசை, சோப்புமுதல் அத்தனை பொருள்களும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திகள்! அல்லது அவற்றின் மூலதனம், தொழில்நுட்பம் ஆகியவற்றைக்கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றவை!

1947-இல் இந்தியாவில் நீடித்திருந்த மூலதனத்தைப்போன்று பல மடங்கு இன்று இந்தியாவில் அந்நிய மூலதனம் நீடிக்கிறது. ஒரு மிகப் பெரிய பாலம் கட்டுவதற்கும்கூட பன்னாட்டு நிறுவனங்களே தேவைப்படுகிறது. எல் & டி, கிடாச்சி என்று பன்னாட்டு நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும் கட்டுமானத்திற்கும்கூட அந்நிய நாடுகள்தான் கடன் தருகின்றன!

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி உறுதியாகத் தேவை! அதில் ஐயமே இல்லை! அவற்றின் வளர்ச்சிதான் ஒரு நாட்டை அடுத்த உயர்ந்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும். அதற்காத்தானே ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப்போராடினோம்! வ உசி கப்பல் விட்டார். பகத்சிங் தூக்குமேடை ஏறினார்! எனவே, எந்தவொரு அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும் உள்நாட்டில் , உள்நாட்டு மூலதனத்தில் , உள்நாட்டுக் கரங்களாலும் மூளைகளாலும் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்!

ஆனால் உண்மை என்ன?

ஒருவர் தனது வீட்டுக்குவேண்டிய பொருள்களை - தொலைக்காட்சி, ஏ சி , வீடு, சிற்றுந்து வரை - தனது சொந்த வருவாயில் வாங்குவது வேறு! கடன் அட்டையில் வாங்குவது வேறு! இந்த வேறுபாடுதான் ஒரு நாட்டுக்கும் பொருந்தும்! இந்த நிலை மாறும்வரை . . . கல்வியும் உள்நாட்டுத் தேவைக்கான கல்வியாக இருக்காது . . . இருக்கமுடியாது!

இவைபற்றியெல்லாம் 'பூத் கமிட்டி' அரசியல் கட்சிகள் கவலைப்படுகிறதா? கிடா வெட்டுவது, ஸ்வீட் பாக்ஸ் அளிப்பது போன்றவற்றைத்தவிர . . . இந்தக் கட்சிகள் வேறு என்ன செய்கின்றன? நாட்டை நிர்வகிக்கும் ஐ ஏ எஸ் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்க பெரிய தேர்வு முறை இருக்கிறது! ஆனால் நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பாராளுமன்றம் , சட்டசபைகளில் உறுப்பினர்களாக இடம்பெற என்ன தேவைப்படுகிறது இங்கே?

இந்தியாவில் இன்றைய கல்வி . . .

 

இந்தியாவில் இன்றைய கல்வி . . .

---------------------------------------------------------------------

இன்றைய கல்விக்கும் இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதார உற்பத்திக்கும் தொடர்பு கிடையாது. மொழிப் படிப்புகள் மட்டுமல்ல, இயற்பியல், வேதியியல், தாவரயியல் போன்ற படிப்புகளுக்கும் இது பொருந்தும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் பொறியாளர்களை உருவாக்கும் படிப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எந்தப் படிப்புக்கு இந்தியாவில் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கின்றன.

மொழிப்படிப்புகளுக்கும் பொது அறிவியல் படிப்புகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. அதனால்தான் அவற்றிற்கான துறைகளின் அவலநிலைபற்றி இங்குள்ள மாநில, நடுவண் அரசாங்கங்கள் கவலைப்படுவதில்லை.

ஒரு கல்வி நிறுவனத்தில் உள்ள பொது அறிவியல் துறைகள், மொழி, இலக்கியம், சமூகவியல் படிப்புகளுக்கான துறைகள் மூடப்பட்டாலும் கவலைப்படுவதில்லை.

மருத்துவத்துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுக்கருவிகள், மருந்துகள் ஆகியவற்றிற்கு சந்தை உருவாக்குவதற்கே இங்கு மருத்துவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றும் இந்திய மருத்துவர்கள் அந்த மருத்துவமனைகளில் 'இறக்குமதி செய்யப்பட்டுள்ள' மருத்துவ உபகரணங்களுக்கு (CT Scan, MRI, PET, Robotic instruments etc.,) நோயாளிகளைப் 'பிடித்துத் தரவேண்டும்'! இதற்கு ஒரு இலக்கை ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவர்களுக்குக் கொடுக்கிறது. அந்த இலக்கை முடித்துத்தராதவர்கள் அங்கு தொடர்ந்து பணியாற்றமுடியாது.

மருந்துகள் பரிந்துரைப்பிலும் இதுதான் இங்கு நடைபெறுகிறது. பிறந்த குழந்தைக்கு முன்பெல்லாம் ஒரு அம்மை தடுப்பூசி போடுவார்கள். இப்போதெல்லாம் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்குத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குழந்தைக்கு என்ன தடுப்பூசி போடுகிறார்கள் என்ற விவரம்கூட மக்களுக்குத் தெரியாது. மருத்துவர் சொல்கிறார், ஆகவே போடுகிறோம் என்றுதான் அவர்கள் கூறுவார்கள்.

இந்தத் தடுப்பூசி மருந்துகள் எல்லாம் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தியே ஆகும்!

எனவே, இன்றைக்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சந்தை உருவாக்கித்தரும் தொழில்களுக்கான படிப்புகளுக்கே கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஏனைய படிப்புகளைப் பெறுபவர்கள் வேலையின்றித் தெருக்களில் நிறுத்தப்படுகிறார்கள்.

படித்த மாணவர்கள் தங்களுக்குரிய பணிகளைப் பெறுவது என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக இருக்கவேண்டும் . . .

 

படித்த மாணவர்கள் தங்களுக்குரிய பணிகளைப் பெறுவது என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையாக இருக்கவேண்டும் . . .

-----------------------------------------------------------------------

மற்றொரு பதிவில் பல்கலைக்கழகங்கள், துறைகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தேன்!

மாணவர்களுக்கு என்ன பிரச்சினை? எந்தப் படிப்புக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் கண்ணீர் சிந்தும் வேலையில்லாப் பட்டதாரிகள்! இது மிகப் பெரிய கொடுமை.

இலக்கியம், மொழி, அறிவியல் துறைகள் அத்தனையிலும் இப்பிரச்சினை! எப்போதாவது நடைபெறும் பணிநியமனத்தில் இலட்சங்கள் இல்லாமல் வேலை பெறமுடியாது! பிறகு எதற்கு இத்தனைப் படிப்புகள் . . . கல்லூரிகள் . . . பல்கலைக்கழகங்கள்?

வேலையில்லாப் பட்டாளத்தைப் பெரிதாக்குவதற்கே இத்தனைப் படிப்புகள்! ஒரு நாடு தனது இளைஞர்களுக்கு . . . பட்டதாரிகளுக்கு . . . வேலை கொடுக்கமுடியவில்லையென்றால், அது 'தோல்வியடைந்த நாடே ("failed State' Noam Chomsky)! பொருள் உற்பத்தி உயர்நிலை அடைய அடையத்தான் வேலை வாய்ப்பு பெருகும்! இரண்டும் நேர் விகிதத்தில் இருக்கவேண்டும்!

மலேசியாவில் சில ஆண்டுகளுக்குமுன்வரை . . . ஆசிரியர் பணிக்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவையோ அதற்கேற்பத்தான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் படித்து வெளிவந்தவுடன் வேலை உத்திரவாதம் உண்டு.

அதுபோன்ற ஒரு நிலை அனைத்துப் படிப்பு மாணவர்களுக்கும் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் வெறும் பட்டம்பெற்றதற்கான காகிதத்தைக் கொடுத்துவிட்டு, நடுத்தெருவில் விட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? மாநில அரசுகளும் நடுவண் அரசும் இதற்கான திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தமுடியாதா?

ஆங்கிலம் தேவையா இந்தி தேவையா, தாய்மொழி தேவையா, நீட் தேர்வு தேவையா போன்றவற்றைப்பற்றிப் பேசுகிறவர்கள் இதைப்பற்றியும் பேசவேண்டும்.

இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட படிப்பை முடித்தவருக்கு அத்துறையில் வேலை பெறுவது என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.

இப்பிரச்சினைகள்பற்றி எந்தவொரு அரசியல் கட்சியும் பேசுவதில்லை. அவற்றிற்கு இப்போது 'பூத் கமிட்டி' 'கூட்டணி' 'பணப்பரிமாற்றம்' . . . அவைதான் அடிப்படைப் பிரச்சினைகள்! வேலையில்லாத் திண்டாட்டத்தை எவ்வாறு தீர்ப்பது என்பதுபற்றித் தமிழகத்தின் பழைய அரசியல் கட்சிகள், இன்றைய நடிகர்கள் கட்சிகள் உட்பட எந்தக் கட்சிக்காவது தெளிவான திட்டம் உண்டா? இளைஞர்கள் கேட்கவேண்டும்! ஒவ்வொரு கட்சியும் இதற்கான தெளிவான திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்று இளைஞர்கள் கேட்கவேண்டும்!

ஒரு மடங்கு 'இலவசத்தைக்' கொடுத்துவிட்டு பல மடங்கு 'பணத்தைச்' சுருட்டும் கட்சிகளிடம் இளைஞர்கள் இந்தக் கேள்வியை முன்வைக்கவேண்டும். தொகுதிக்கு வாக்கு கேட்டுவரும் வேட்பாளர்களிடம் இதுபற்றி வெளிப்படையாகக் கேட்கவேண்டும். அப்போதுதான் அவர்களது 'அரசியல் அறிவும் உணர்வும்' வெளியே அம்பலமாகும்!

-----------------------------------------------------------------------

மற்றொரு பதிவில் பல்கலைக்கழகங்கள், துறைகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தேன்!

மாணவர்களுக்கு என்ன பிரச்சினை? எந்தப் படிப்புக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் கண்ணீர் சிந்தும் வேலையில்லாப் பட்டதாரிகள்! இது மிகப் பெரிய கொடுமை.

இலக்கியம், மொழி, அறிவியல் துறைகள் அத்தனையிலும் இப்பிரச்சினை! எப்போதாவது நடைபெறும் பணிநியமனத்தில் இலட்சங்கள் இல்லாமல் வேலை பெறமுடியாது! பிறகு எதற்கு இத்தனைப் படிப்புகள் . . . கல்லூரிகள் . . . பல்கலைக்கழகங்கள்?

வேலையில்லாப் பட்டாளத்தைப் பெரிதாக்குவதற்கே இத்தனைப் படிப்புகள்! ஒரு நாடு தனது இளைஞர்களுக்கு . . . பட்டதாரிகளுக்கு . . . வேலை கொடுக்கமுடியவில்லையென்றால், அது 'தோல்வியடைந்த நாடே ("failed State' Noam Chomsky)! பொருள் உற்பத்தி உயர்நிலை அடைய அடையத்தான் வேலை வாய்ப்பு பெருகும்! இரண்டும் நேர் விகிதத்தில் இருக்கவேண்டும்!

மலேசியாவில் சில ஆண்டுகளுக்குமுன்வரை . . . ஆசிரியர் பணிக்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவையோ அதற்கேற்பத்தான் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். அவர்கள் படித்து வெளிவந்தவுடன் வேலை உத்திரவாதம் உண்டு.

அதுபோன்ற ஒரு நிலை அனைத்துப் படிப்பு மாணவர்களுக்கும் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் வெறும் பட்டம்பெற்றதற்கான காகிதத்தைக் கொடுத்துவிட்டு, நடுத்தெருவில் விட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்? மாநில அரசுகளும் நடுவண் அரசும் இதற்கான திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தமுடியாதா?

ஆங்கிலம் தேவையா இந்தி தேவையா, தாய்மொழி தேவையா, நீட் தேர்வு தேவையா போன்றவற்றைப்பற்றிப் பேசுகிறவர்கள் இதைப்பற்றியும் பேசவேண்டும்.

இந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட படிப்பை முடித்தவருக்கு அத்துறையில் வேலை பெறுவது என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.

இப்பிரச்சினைகள்பற்றி எந்தவொரு அரசியல் கட்சியும் பேசுவதில்லை. அவற்றிற்கு இப்போது 'பூத் கமிட்டி' 'கூட்டணி' 'பணப்பரிமாற்றம்' . . . அவைதான் அடிப்படைப் பிரச்சினைகள்! வேலையில்லாத் திண்டாட்டத்தை எவ்வாறு தீர்ப்பது என்பதுபற்றித் தமிழகத்தின் பழைய அரசியல் கட்சிகள், இன்றைய நடிகர்கள் கட்சிகள் உட்பட எந்தக் கட்சிக்காவது தெளிவான திட்டம் உண்டா? இளைஞர்கள் கேட்கவேண்டும்! ஒவ்வொரு கட்சியும் இதற்கான தெளிவான திட்டத்தை முன்வைக்கவேண்டும் என்று இளைஞர்கள் கேட்கவேண்டும்!

ஒரு மடங்கு 'இலவசத்தைக்' கொடுத்துவிட்டு பல மடங்கு 'பணத்தைச்' சுருட்டும் கட்சிகளிடம் இளைஞர்கள் இந்தக் கேள்வியை முன்வைக்கவேண்டும். தொகுதிக்கு வாக்கு கேட்டுவரும் வேட்பாளர்களிடம் இதுபற்றி வெளிப்படையாகக் கேட்கவேண்டும். அப்போதுதான் அவர்களது 'அரசியல் அறிவும் உணர்வும்' வெளியே அம்பலமாகும்!

தாய்ப்பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் அவலநிலை ! கவனிப்பார் அற்ற பல்கலைக்கழகமாக மாறி நிற்கிறது!

 

தாய்ப்பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் அவலநிலை ! கவனிப்பார் அற்ற பல்கலைக்கழகமாக மாறி நிற்கிறது!

--------------------------------------------------------------------------

1857 இல் தொடங்கிய சென்னைப் பல்கலைக்கழகம் . . .168 ஆண்டுகால வரலாறுச்சிறப்பு உடைய பல்கலைக்கழகம் . . . சுமார் 70 துறைகளை உடைய பல்கலைக்கழகம் . . . மிகப்பெரிய அறிஞர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகம் . . . மிகப் பெரிய அறிஞர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம் . . .

இந்தியாவின் சிறந்த ஐந்து பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, Potential of Excellence தகுதி பெற்ற பல்கலைக்கழகம்! ஐந்து நட்சத்திரத் தகுதிபெற்ற பல்கலைக்கழகம்! தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தாய்ப் பல்கலைக்கழகம்!

இன்றைய நிலை . . . மிகப் பரிதாபமான நிலை! பல துறைகளில் ஆசிரியர்களே கிடையாது - அறிவியல்துறைகள், மருத்துவம்சார்த் துறைகள் உட்பட! ஓராசிரியர்கூட இல்லாத துறைகள் பல!

இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் ஆசிரியர்கள் இல்லாத சூழல் ஏற்படவிருக்கிறது!

நினைத்துப்பார்க்க முடியாத ஒரு அவலநிலை!

ஏன் இந்த அவலநிலை? கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்துவருகிறது! ஆளுநர் - தமிழ்நாடு அரசு முரண்பாடுகள் எல்லாம் தற்போது ஏற்பட்ட ஒன்றே! அதற்கு முன்னாலேயே இந்த நிலை தொடங்கிவிட்டது!

பெரியார், பாரதியார் இருவரும் பிற்போக்குவாதிகளா? முற்போக்காளர்களா?

 

பெரியார், பாரதியார் இருவரும் பிற்போக்குவாதிகளா? முற்போக்காளர்களா?

---------------------------------------------------------------------

பெரியார் அவர்கள் தமிழகத்தில் பிரமாணியர் ஆதிக்கம், மதத்தின் பெயரில் சமுதாயத்தில் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றை உறுதியாக எதிர்த்தார். பெண்ணடிமை, ஆண் ஆதிக்கக் குடும்ப அமைப்பு ஆகியவற்றை எதிர்த்தார். பெண் கல்வியை உயர்த்திப்பிடித்தார். இதில் எந்தொரு ஐயமும் எனக்கு இல்லை. எனவே அவர் ஜனநாயகவாதி என்பதிலும் எந்தவொரு ஐயமும் கிடையாது.

ஆனால் அவர் எதிர்த்த அத்தனை பிற்போக்குத்தனங்களுக்கும் அடிப்படை . . . சமுதாயத்தின் அடிப்படை அரசியல் பொருளாதாரக் கட்டுமானமே என்பதை வலியுறுத்தவோ அதை எதிர்த்த அரசியல் போராட்டத்தையும் முன்னெடுக்கவோ செய்யவில்லை.

அதற்குக் காரணம் அவருடைய கண்ணோட்டமானது வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் இல்லை. தத்துவப்பார்வையும் இயங்கியல் பொருள்முதல்வாதம் இல்லை. இந்த இரண்டு கண்ணோட்டங்களும் இல்லையென்றாலே, ஒருவர் வெளிப்படையாகச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கருத்துமுதல்வாதியாகவே இருக்கமுடியும். மார்க்சியத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டவன் என்று முறையில் இதைக் கூறுகிறேன்.

பெரியார் நடைமுறையில் வெளிப்படையாகத் தென்படுகிற சமுதாயக்கொடுமைகளைக் கடுமையாக எதிர்த்தார். அதில் ஐயம் இல்லை. ஆனால் அவற்றிற்கு அடிப்படையான அரசியல் பொருளாதார அமைப்புக்கு எதிரான ஒரு ஒட்டுமொத்த ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கவில்லை.

பாரதியாரும் சமுதாயத்தில் அன்று நீடித்த பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம், சில மூட நம்பிக்கைகளை எதிர்த்தார். தமிழ்மொழியின் பெருமையையும் வளர்ச்சியையும் முன்னிலைப்படுத்தினார். அத்துடன் அவர் தமது வாழ்க்கையில் பெரும்பகுதியை ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் செலவழித்தவர், தமது இறுதிக்காலத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்திலிருந்து பின்வாங்கினார். அதற்கான காரணங்கள்பற்றி நான் தனியே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். பாரதியாரும் ஒரு கருத்துமுதல்வாதியே. இருப்பினும் அவர் ஒரு ஜனநாயகவாதியே. அந்த வகையில் அவர் ஒரு முற்போக்குவாதி என்று நான் குறிப்பிடுகிறேன்.

பொதுவுடமைக் கொள்கையையும் இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் கண்ணோட்டங்களையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் எல்லாம் பிற்போக்குவாதிகளாகவே இருக்கவேண்டும் என்பது இல்லை. அவர்கள் தங்கள் காலகட்டத்தில் நீடித்த சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராடினால் ஜனநாயகவாதிகளே. மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை! பகுதிப் பிரச்சனை என்பது முழுமையின் ஒரு பகுதியே. எனவே, முழுமைக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியே பகுதிப்பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும். இல்லையென்றால் பகுதிப் பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் தலைதூக்கும்! ஆனால் அதற்காகப் பகுதிப் பிரச்சினைகளுக்காகப் போராடக்கூடாது என்று கூறுவது தவறு.

முற்போக்காளர்களே! குறிப்பிட்ட காலகட்டத்தில் முற்போக்காளர்களாக இருப்பவர்கள் எல்லாம் பொதுவுடைமைவாதிகளாக இருக்கவேண்டுமென்று கருதக்கூடாது.

பொதுவுடைமைவாதிகள் எல்லோரும் முற்போக்காளர்களே. ஆனால் முற்போக்காளர்கள் எல்லோரும் பொதுவுடைமைவாதிகள் இல்லை. அவ்வாறு இருந்தால் நல்லது. அது வேறு.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India