தமிழ்மொழிப் பயன்படுத்தத்தின் விரிவாக்கமும் செய்யறிவுத்திறன் மென்பொருள்களில் தமிழுக்கான இடமும் . . .
-------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடையே தமிழின் பயன்படுத்தம் விரிவடைந்தால்தான் . . .  செய்யறிவுத்திறன் (Artificial Intelligence- AI)மென்பொருளுக்கு அடிப்படையான (மிகப்பெரிய) மொழி மாதிரிகள் (Large Language models) - LLM) தமிழுக்கும் செயல்படும் என்பதே உண்மை. 
ஆனால்  . . .  நடைமுறையில் தமிழர்களே தமிழைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து . . .  ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். அரசுக் கோப்புக்கள் ஆகட்டும் . . .  தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகட்டும் . . .  பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, ஆய்வு ஆகட்டும் . . .  நண்பர்களிடையே மடல்கள் பரிமாற்றம் ஆகட்டும் . . .  திருமணம், பிறந்தநாள், பாராட்டு விழாக்களுக்கான அழைப்பிதழ்கள் ஆகட்டும் . . .  சுவரொட்டிகள் ஆகட்டும் . . .  ஏன் கையெழுத்து ஆகட்டும் . . . எதிலும் ஆங்கிலமொழியின் ஆதிக்கமே ! 
இவ்வாறு இருக்கும்போது  . . .  செய்யறிவுத்திறனின் பயன்பாட்டைத் தமிழ்வழியே பெறுவது எவ்வாறு இயலும்? (Digital dataset) மின்தரவுகள்  தமிழுக்குக் கோடியே கோடி கிடைத்தால்தான் அது இயலும். ஆனால் அதைக்கூட கூகுளும் மைக்ரோசாஃப்டும் ஃபேஸ்புக் போன்றவைதான் கொடுக்கமுடியும் என்ற ஒரு நிலை இன்று தமிழுக்கு! 
எனவே, இனித் தமிழைத்தான் தமிழ்நாட்டில் மொழிச் செயற்பாட்டுக்குப் பயன்படுத்தவேண்டும் என்ற ஒரு நிலையைத் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும். 
தற்போது செய்யறிவுத்திறன் என்ற தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழ்மொழி பயன்படுத்த வேண்டுமென்றால் . . . 
எங்கும் தமிழ் . . .  எதிலும் தமிழ் என்ற ஒரு நிலை நீடிக்கவேண்டும். இல்லையென்றால் தமிழ்மொழியானது அபாயத்திற்கு உட்பட்ட ஒரு மொழியாகவே (Endangered language) மாறிவிடும். இந்த அபாயநிலையைப்பற்றி மகாகவி பாரதி மிக அழகாகக் கூறியுள்ளார் . . . 
''புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவதில்லை - அவை
 சொல்லுந்திறமை தமிழ்மொழிக்கு இல்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்குமொழிகள் புவிமிசை ஓங்கும்! 
இன்றைய நிலையை மகாகவி மிக அருமையாக நூறு ஆண்டுகளுக்குமுன்பே கூறிவிட்டார் என்பது வியப்புக்குரிய ஒன்றுதான்!


10:00 PM
ந.தெய்வ சுந்தரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக